/tamil-ie/media/media_files/uploads/2022/06/ration-shop-1.jpg)
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சென்னை தலைமைச் செயலகத்தில் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துவைத்தார்.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சென்னை தலைமைச் செயலகத்தில் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துவைத்தார். இந்தச் செயலி, ரேஷன் கடைகளை ஆய்வு செய்யும்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்ரபாணி, “இந்தச் செயலி மூலம் விரைவான சேவையை வழங்க முடியும். ரேஷன் கடைகளில் 98.3 சதவீதம் பேர் பயோ மெட்ரிக் முறையில் பொருள்களை வாங்கி வருகின்றனர்.
திருவல்லிக்கேணி , அரியலூர் மாவட்டங்களில் சோதனை முறையில் கருவிழி ஸ்கேனர் மூலம் பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன. மேலும், ஜனவரி மாதம் முதல் தர்மபுரி நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் சிறுதானியங்கள் சோதனை முறையில் விநியோகிக்கப்படும்.
மக்களின் வரவேற்பை பொறுத்து மற்ற இடங்களில் இது விரிவுப்படுத்தப்படும்” என்றார்.
தொடர்ந்து ரேஷன் பொருள்கள் குடோன்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இது குறித்து, “ரேஷன் பொருள்கள் குடோன்களில் இருந்து கிடங்குகளிலிருந்து அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் கடத்தலை தடுக்கும் வண்ணம் 2,886 கேமராக்கள் பொறுத்த ஒப்பந்தம் கோரபட்டுள்ளது.
மேலும், ரேஷன் பொருள்களை கொண்டு செல்லும் லாரிகளில் ஜிபிஎஸ் பொறுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.