Coimbatore, Madurai, Trichy News Live: நரி, கீரியை வேட்டையாடி சமைத்துக் கொண்டிருந்த கும்பல் கைது

Coimbatore, Madurai, Trichy News Live- 4 July 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 4 July 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dindh

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

Advertisment

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 10வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

  • Jul 04, 2025 15:52 IST

    நரி, கீரியை வேட்டையாடி சமைத்துக் கொண்டிருந்த கும்பல் கைது

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குஜிலியம்பாறை வனப்பகுதியில் வனத்துறை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது நரி, கீரியை வேட்டையாடி சமைத்துக் கொண்டிருந்த கும்பல் பிடிபட்டது. அவர்கள் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைப்பு. வன விலங்குகளின் இறைச்சியும் பறிமுதல்



  • Jul 04, 2025 13:22 IST

    ரிதன்யாவின் மாமியார் கைது

    தன்னை குடும்பத்தினர் துன்புறுத்துவதாக தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் ரிதன்யா வழக்கில் மாமியார் சித்ராதேவி கைது செய்யப்பட்டுள்ளார். ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • Advertisment
    Advertisements
  • Jul 04, 2025 12:30 IST

    ஒசூர் சிறுவன் கொலை வழக்கு: கல்லூரி மாணவி கைது

    ஓசூர் அருகே மாவனட்டி கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், மாதவன் தன் காதலியான கல்லூரி மாணவி ரதியுடன் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்து விட்டதால் சிறுவனை காரில் கடத்தி கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது. மாதேவன், மாதேவா கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கல்லூரி மாணவி ரதி கைது செய்யப்பட்டுள்ளார்.



  • Jul 04, 2025 11:48 IST

    இளம்பெண் கூட்டு பலாத்காரம் – 3 பேர் கைது

    மதுரை, மேலூர் அருகே காதலனின் உதவியுடன் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் காதலன் தீபன்ராஜ் உள்பட மூவரை மேலூர் அனைத்து மகளிர் காவல்துறை கைது செய்துள்ளது 



  • Jul 04, 2025 11:37 IST

    இளம்பெண் தற்கொலை வழக்கு; விசாரணை ஒத்திவைப்பு

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்த வழக்கில் கைதான கணவர், மாமனார் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்ததற்கு ரிதன்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையில், கணவர் கவின் குமார் தரப்பில் கால அவகாசம் கேட்ட நிலையில் விசாரணை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது



  • Jul 04, 2025 11:08 IST

    பிரேத பரிசோதனை செய்த மருத்துவரிடம் விசாரணை

    திருப்புவனம் இளைஞர் அஜித்க்கும் மரணம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட நீதிபதி 3வது நாளாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார். திருப்புவனம் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை மருத்துவர் கார்த்திகேயன் விசாரணைக்காக வருகை தந்துள்ளார்



  • Jul 04, 2025 10:39 IST

    தேனியில் காவலர்கள் தாக்கிய நபர் தலைமறைவு

    தேனி, தேவதானப்பட்டியில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நபரை காவலர்கள் தாக்கிய சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் உள்பட 5 காவலர்கள் தேனி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தாக்குதலுக்கு உள்ளான ரமேஷ்-க்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ரமேஷ் தலைமறைவானதால் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல மணி நேரம் காத்திருந்தும் விசாரணை செய்ய முடியவில்லை 



  • Jul 04, 2025 10:18 IST

    21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் கைது

    நீலகிரியில் அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது செய்து சிறையில் அடைத்தனர்

    பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சென்ற போலீசாரிடம் அடுத்தடுத்து மாணவிகள் புகார்



  • Jul 04, 2025 09:46 IST

    நிகிதா இன்று ஆஜராக வாய்ப்பு

    போலீசார் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 3வது நாளாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை. புகார் அளித்த நிகிதா விசாரணைக்கு ஆஜராக வாய்ப்பு



  • Jul 04, 2025 09:17 IST

    கோவை கோவிலில் பிரசன்னா, சினேகா தம்பதி தரிசனம்

    Credit: Sun News



  • Jul 04, 2025 09:15 IST

    மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,615 கன அடியிலிருந்து 19,286 கன அடியாக அதிகரிப்பு. காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.60 அடியாக சரிவு. அணையிலிருந்து மொத்தம் 24 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



  • Jul 04, 2025 09:15 IST

    விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக்கொலை: கணவர் ஸ்டீபன்ராஜ் சரண்

    திருவள்ளூர், திருநின்றவூரில் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி பெண் கவுன்சிலர் கோமதியை, வெட்டி கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரண்



  • Jul 04, 2025 09:14 IST

    சக மாணவர்கள் தாக்கியதில் பிளஸ் 2 மாணவன் உயிரிழப்பு

    ஈரோடு: குமலன்குட்டை பகுதியில் பிளஸ் 2 மாணவன் ஆதித்யா நேற்று சக மாணவர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழப்பு

    அதே பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் இருவர் கைது. கைதான இருவரும் 17 வயதினர் என்பதால் இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: