/indian-express-tamil/media/media_files/2024/11/09/WAGok3QQILy0VTKh8HzX.jpg)
மதுரை அண்ணாநகர் ஜக்காதோப்பைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் 55. இவர் 1997ல் ரூ.60 வழிப்பறி செய்ததாக தெப்பக்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து இவர் மீது பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கு விசாரணையில் இருந்து தப்பித்து தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டன. உதவி கமிஷனர் சூரக்குமார் தலைமையில் சிறப்பு எஸ்.ஐ. க்கள் சந்தானபாண்டியன், பன்னீர்செல்வம் ஆகியோர் பழைய வழக்குகளை ஆய்வு செய்தனர். ஜக்காதோப்புக்கு சென்று பன்னீர்செல்வம் குறித்து விசாரித்தபோது சிவகாசி பகுதியில் குடும்பத்துடன் வசிப்பது தெரிந்தது.
இதனைத் தொடர்ந்து சிவகங்கை சென்ற காவல்துறையினர், உள்ளூர் போலீசார் மற்றும் தெப்பக்குளம் போலீசாருடன் சென்று மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆய்வு செய்வதாக கூறி பன்னீர்செல்வம் குடும்பத்தினரிடம் பெயர், விபரங்களை கேட்டு உறுதிசெய்தனர். இதைதொடர்ந்து ஒயின் ஷாப்பில் வேலை செய்த பன்னீர்செல்வத்தை கைது செய்தனர். 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை கைது செய்த போலீசாரை கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.