/tamil-ie/media/media_files/uploads/2023/03/anbil.jpg)
Tamil News Updates
உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று (ஆகஸ்ட் 12) மதியம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து தருமபுரி வழியாக கிருஷ்ணகிரி சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, அருகில் உள்ள பெங்களூரு நாராயண ஹெல்த் சிட்டி என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய அறிக்கையை மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில், அமைச்சருக்கு வயிற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட லேசான வலி காரணமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.