தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சரும், திமுகவின் பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில் துரைமுருகன் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. தற்போது, துரைமுருகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/