/tamil-ie/media/media_files/uploads/2017/08/Duraimurugan.jpg)
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு; சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கடந்த சில தினங்களாக சளி, இருமல் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு சளி தொந்தரவு அதிகமானதை அடுத்து சிகிச்சைக்காக துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவக்குழுவினர் வழங்கி வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சளித்தொல்லைக்கு ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொண்டு துரைமுருகன் இன்று வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.