திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பீமநகரில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை பதிவேற்றம் செய்வதையும், முகாமின் செயல்பாடுகளையும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், பொதுமக்களுடன் கலந்துரையாடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், நகரப் பொறியாளர் சிவபாதம், உதவி ஆணையர் ச.நா.சண்முகம், திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டாட்சியர் எஸ்.பிரகாஷ், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கே.என். நேரு தெரிவித்ததாவது; ”அ.தி.மு.க 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் உருட்டு, திருட்டு பண்ணியிருப்பார்கள், அதை சொல்லி இருப்பார் எங்களை சொல்லி இருக்க மாட்டார். அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அவர்கள் செய்யாததை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அதை அவர்களால் தாங்க முடியவில்லை. எங்கள் ஆட்சி பற்றி ரிப்போர்ட் கார்டு கொடுக்க சொல்லுங்கள், அனைத்திற்கும் நாங்கள் பதில் சொல்கிறோம், தி.மு.க அரசுக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவு அதிகரித்திருப்பதால் அதை பொறுத்து கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி பிதற்றுகிறார்” என்றார்.
க.சண்முகவடிவேல்
10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் உருட்டு, திருட்டு செய்திருப்பார்கள் - அமைச்சர் கே.என் நேரு
தி.மு.க அரசுக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவு அதிகரித்திருப்பதால் அதை பொறுத்து கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி பிதற்றுகிறார் – திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு பேட்டி
தி.மு.க அரசுக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவு அதிகரித்திருப்பதால் அதை பொறுத்து கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி பிதற்றுகிறார் – திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு பேட்டி
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பீமநகரில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை பதிவேற்றம் செய்வதையும், முகாமின் செயல்பாடுகளையும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், பொதுமக்களுடன் கலந்துரையாடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், நகரப் பொறியாளர் சிவபாதம், உதவி ஆணையர் ச.நா.சண்முகம், திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டாட்சியர் எஸ்.பிரகாஷ், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கே.என். நேரு தெரிவித்ததாவது; ”அ.தி.மு.க 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் உருட்டு, திருட்டு பண்ணியிருப்பார்கள், அதை சொல்லி இருப்பார் எங்களை சொல்லி இருக்க மாட்டார். அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அவர்கள் செய்யாததை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அதை அவர்களால் தாங்க முடியவில்லை. எங்கள் ஆட்சி பற்றி ரிப்போர்ட் கார்டு கொடுக்க சொல்லுங்கள், அனைத்திற்கும் நாங்கள் பதில் சொல்கிறோம், தி.மு.க அரசுக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவு அதிகரித்திருப்பதால் அதை பொறுத்து கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி பிதற்றுகிறார்” என்றார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.