தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடிக்கு கூடுதலாக காதி மற்றும் கிராம தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே அமைச்சர் பொன்முடி ஏற்கனவே தான் வைத்திருக்கும் வனத்துறையுடன் கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத் துறையையும் கவனிப்பார்.
பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனிடம் கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத் துறை இருந்தது. தற்போது இந்த துறை பொன்முடிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. எனவே அமைச்சர் ராஜகண்ணப்பன் பால்வளத்துறையை மட்டும் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.