/indian-express-tamil/media/media_files/2025/06/06/eKA3z7wqwsOVB6bvVYCx.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.90 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.49 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Jun 06, 2025 22:03 IST
'தொகுதி மறுவரையறை - பழைய பல்லவி பாடும் ஸ்டாலின்'; எல். முருகன் விமர்சனம்
தொகுதி மறுவரையறை குறித்த முதலமைச்சர் ஸ்டாலினின் மடைமாற்றும் அரசியல் தோலுரிக்கப்பட்டு விட்டது என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் விமர்சனம் செய்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் பழைய பல்லவியையே ஸ்டாலின் பாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jun 06, 2025 21:05 IST
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்விற்கு இன்று மாலை 6 மணி வரை 2,98,425 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், 2,44,168 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். கடந்த மே 7-ஆம் தேதி இதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது.
-
Jun 06, 2025 20:30 IST
பெங்களூரு விபத்து - 4 பேருக்கு நீதிமன்றக் காவல்
பெங்களூருவில் ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, 4 பேருக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன் அனுமதி பெறாமல் விளம்பரம் செய்தது தொடர்பாக, ஆர்.சி.பி விளம்பர பிரிவு தலைவர் உட்பட 4 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
-
Jun 06, 2025 20:22 IST
பதவியேற்று 10 மாதம் நிறைவு - வங்கதேசத்துக்கு தேர்தல் அறிவித்த யூனுஸ்
வங்கதேசத்தில் அடுத்த தேர்தல் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் நடைபெறும் என்று அந்நாட்டின் இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
-
Jun 06, 2025 19:54 IST
அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் நாளை வெளியீடு!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது.
-
Jun 06, 2025 19:36 IST
பொறியியல் படிப்புக்கு 2.98 லட்சம் பேர் விண்ணப்பம்: அமைச்சர் கோவி.செழியன்
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இதுவரை 2.98.425 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர் என்று அமைச்சர் கோவி.செழியன் தகவல் தெரிவித்துள்ளார். 1,33,805 மாணவர்கள், 1,10,363 மாணவிகள் என மொத்தம் 2.44.168 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். விண்ணப்பப் பதிவு செய்த மாணவர்கள் சான்றிதழ்களை ஜூன் 9க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜூன் 11ல் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும்; ஜூன் 20 வரை சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்
-
Jun 06, 2025 19:06 IST
ஜி7 உச்சி மாநாடு - மோடிக்கு கனடா பிரதமர் கார்னி அழைப்பு
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மேம்படுவதற்கான அறிகுறியாக, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை சமூக ஊடக தளமான எக்ஸ்-இல், கனனாஸ்கிஸில் இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் ஜி7 கூட்டத்தில் கலந்து கொள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி அழைத்ததாகப் பகிர்ந்து கொண்டார்.
கார்னியின் சமீபத்திய தேர்தல் வெற்றிக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார், மேலும் துடிப்பான ஜனநாயக நாடுகளாக இந்தியாவும் கனடாவும் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களின் அடிப்படையில் புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் இணைந்து செயல்படும் என்றும் கூறினார்.
“சமீபத்திய தேர்தல் வெற்றிக்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்த மாத இறுதியில் கனனாஸ்கிஸில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்டதற்கு அவருக்கு நன்றி தெரிவித்தார். ஆழமான மக்கள்-மக்கள் உறவுகளால் பிணைக்கப்பட்ட துடிப்பான ஜனநாயக நாடுகளாக, இந்தியாவும் கனடாவும் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களால் வழிநடத்தப்படும் புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் இணைந்து செயல்படும். உச்சிமாநாட்டில் எங்கள் சந்திப்பை எதிர்நோக்குங்கள்,” என்று மோடி பதிவிட்டுள்ளார்.
-
Jun 06, 2025 19:03 IST
பெங்களூரு கோர சம்பவம் - மேலும் ஒரு வழக்குப்பதிவு
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மற்றும் டி.என்.ஏ நிர்வாகம் மீது கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த ரோலன் கோம்ஸ் என்பவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுளள்து.
-
Jun 06, 2025 18:35 IST
பியூஸ் சாவ்லா கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு
அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக பியூஸ் சாவ்லா அறிவித்துள்ளார். இந்தியாவுக்காக 3 டெஸ்ட், 25 ஒருநாள், 7 டி20 போட்டிகளில் விளையாடி ஐ.பி.எல் 192 விக்கெட் எடுத்துள்ளார். 2007 டி20 மற்றும் 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வென்ற அணியில் பியூஸ் சாவ்லா இடம்பிடித்தவர்.லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
-
Jun 06, 2025 18:34 IST
எப்படி தலைப்பிடுவதாக உத்தேசம்?: சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி
போலீஸ்காரர் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பதே செய்தி; அதற்கு இப்படி தலைப்பிடுவதா? என்று சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை எம்பியின் பாதுகாவலராக இருந்த போலீஸ்காரர் மோசடியில் சிக்கினார் என நாளிதழில் செய்தி வெளியானது. ஆயுதப்படை போலீஸ் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்; அந்த வகையில் என் காவல் பணிக்கும் அனுப்பப்பட்டுள்ளார். இதே காவலர் மதுரைக்கு ஆளுநர், பிரதமர் வந்தபோது கூட காவலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார். இப்போது எப்படி தலைப்பிடுவதாக உத்தேசம் என நாளிதழுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Jun 06, 2025 18:27 IST
தென்னக குரலை காப்பாற்ற வேண்டிய தருணம் - ஸ்டாலின்
மக்கள் தொகை கணக்கெடுப்பின் தாமதம், அதைத் தொடர்ந்து நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பும் தற்செயல் அல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், " மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது.
ஒன்றிய பா.ஜ.க. அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன. அதேவேளையில், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைப் பல பத்தாண்டுகளாகக் காற்றில் பறக்கவிட்ட மாநிலங்களோ நாடாளுமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பெற இருக்கின்றன. அநீதியான இந்த நடவடிக்கை கூட்டாட்சியின் சமநிலையைக் குலைத்து, பொறுப்பற்ற தன்மைக்கு வெகுமதி அளிக்கிறது.
இந்தச் சதித் திட்டம் குறித்து நான் முன்பே எச்சரித்திருந்தேன். தற்போது, ஒன்றிய முன்னாள் அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களும், பா.ஜ.க. எப்படி இந்தக் கைவரிசையைக் காட்டப் போகிறது என்பதை விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். நாம் விழிப்போடு இருப்பது மட்டுமல்ல, தென்னகத்தின் குரலைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வியூகங்களையும் தீட்டவேண்டிய வேண்டிய தருணம் இது.
1971-ஆம் ஆண்டு சென்சஸ் தரவுகள் போய், 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரவுகள்தான், அதற்கடுத்து உடனே நிகழும் தொகுதி மறுவரையறைக்கு, அடிப்படையாக அமையும். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, தனக்குச் சாதகமான முறையில் நாடாளுமன்ற இடங்களை பா.ஜ.க. நிர்ணயித்துக் கொள்ளத்தான் இது வழி ஏற்படுத்தும். தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் சொல்கிறது. ஆனால் இவை தெளிவற்ற மழுப்பல் பதில்கள். இவர்கள் சொல்வதைத் தண்ணீரில்தான் எழுதிவைக்க வேண்டும். நாம் கேட்பதெல்லாம் நாடாளுமன்றத்தில் உறுதி அளியுங்கள், உரிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுங்கள் என்பதே!
பிரிவு 370-ஐ நீக்கிய பிறகு என்ன நடந்தது என்று பார்த்தாலே இவர்களது பேச்சின் இலட்சணம் புரிந்துவிடும். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என ஒன்றிய அரசு சொன்னது. தேர்தலும் நடைபெற்றது. உச்சநீதிமன்றத்திலேயே உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும், ஜம்மு காஷ்மீர் இன்னும் யூனியன் பிரதேசமாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சத்தியவான்களோடுதான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.
2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒன்றிய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும். அ.தி.மு.க. போன்ற அடிமைத் துரோகிகள் தங்களின் சுயநலத்துக்காக பா.ஜ.க. முன் மண்டியிட்டாலும், தி.மு.க.வின் தலைமையில் #ஓரணியில்_தமிழ்நாடு அணிவகுக்கும்! நம் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ள ஒரே காரணத்துக்காகத் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்!" என்று அவர் கூறியுள்ளார்.
-
Jun 06, 2025 17:28 IST
சென்னையில், விமானம் மீது பட்ட லேசர் ஒளியால் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் 304 பயணிகளுடன், தரையிறங்க வந்த விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லேசர் அடிக்கப்பட்டபோது விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு லேசர் அடித்த நபர்களை தேடி வருகின்றனர்
-
Jun 06, 2025 16:45 IST
கூட்ட நெரிசலில் நிகழ்ந்த மரணம்: கர்நாடக முதல்வரின் அரசியல் செயலாளர் பதவி நீக்கம்
ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணியின் வெற்றிப் பேரணி தொடர்பாக முதல்வருக்கு தவறான ஆலோசனையை வழங்கியதாக குவிந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அரசியல் செயலாளராக இருந்த கெம்பா கோவிந்தராஜ் அதிரடியாக அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
-
Jun 06, 2025 16:10 IST
“டிசம்பரில் பூந்தமல்லி- போரூர் மெட்ரோ பயன்பாடுக்கு வரும்" - நிர்வாக இயக்குநர் சித்திக்
“டிசம்பரில் பூந்தமல்லி- போரூர் மெட்ரோ பயன்பாடுக்கு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் முழு வேகத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்.
-
Jun 06, 2025 15:29 IST
முகக்கவசம் கட்டாயம்
கொரோனா பரவல் காரணமாக கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
Jun 06, 2025 15:28 IST
நடுரோட்டில் பள்ளி மாணவி மீது தாக்குதல்
ராயப்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவியை காதலிக்க சொல்லி கத்தியைக் காட்டி மிரட்டி, கன்னத்தில் அறைந்த அதிமுக நிர்வாகி சூர்யா எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைய வந்த போது ராயப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
-
Jun 06, 2025 14:54 IST
தாய் கண்முன்னே மகளிடம் பாலியல் சீண்டல்
சென்னை ராயப்பேட்டை அருகே கடைக்கு தாயுடன் நடந்து சென்ற கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டல் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், குற்றவாளிகள் தப்பி சென்ற பைக் எண்ணை கொண்டு தேடிவரும் போலீசார் வருகின்றனர்.
-
Jun 06, 2025 14:53 IST
பாலப்பணிகள் - பேருந்துகள் தாமதம்
மதுராந்தகம் - மேல்வருவத்தூர் இடையே நடக்கும் பாலப்பணிகளால் பேருந்துகள் சென்னைக்கு வருவதில் ஏற்படும் தாமதமே, கிளாம்பாக்கத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிக்க காரணம் பாலப்பணி நடக்கும் கருங்குழி என்ற இடத்தில் சாலையை அகலப்படுத்தி தருமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு SETC சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் பேருந்துகள் வர இயலாததால், பேருந்து நிலையத்தில் பயணிகள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 06, 2025 14:48 IST
வேட்புமனுத்தாக்கல்
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வில்சன், சல்மா மற்றும் சிவலிங்கம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் கமல்ஹாசன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
Jun 06, 2025 14:35 IST
விழுப்புரம் - கொரோனா தொற்றால் ஒருவர் பலி
கொரோனா தொற்றால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விழுப்புரம் பேரப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி தியாகராஜன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
-
Jun 06, 2025 13:56 IST
கொரோனாவுக்கு நாட்டு மருந்தை அங்கீகரிக்கவில்லை - தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாட்டுமருந்து பயன்பாட்டை தமிழக அரசு அங்கீகரிக்கவில்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், “கொரோனாவை தடுக்கும் வகையில் நாட்டுமருந்தை அரசு அங்கீகரித்ததாக பரவும் தகவல் தவறானது. இது தொடர்பான எந்ததொரு பரிசோதனைக்கும் சான்றும் இன்றி சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரவி வருகின்றன. இவை தவிர, தவறான தகவல்களை நம்பி மக்கள் குமிழ் நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய சுகாதாரத் துறையின் பரிந்துரைப்படி நடைமுறையில் உள்ள மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன என்றும், அவற்றைத் தவிர வேறு எந்தவொரு மருந்தும் அரசால் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் தவறான தகவல்களில் நம்பிக்கை வைக்காமல், அதிகாரபூர்வமான அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
-
Jun 06, 2025 13:13 IST
மாநிலங்களவை தேர்தல்: இ.பி.எஸ் முன்னிலையில் அ.தி.மு.க-வினர் வேட்புமனு தாக்கல்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் வழக்கறிஞர்கள் இன்பதுரை, ம. தனபால் ஆகியோர் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
-
Jun 06, 2025 13:10 IST
ராமதாஸ் - அன்புமணி இடையே சமாதானம் - பா.ம.க அரசியல் குழு தலைவர் தீரன்
தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸை அன்புமணி சந்தித்தபின் பா.ம.க அரசியல் குழு தலைவர் தீரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ராமதாஸ் - அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளது.நல்ல செய்தி வரும் என ராமதாஸ் கூறியதால் சமாதானம் என்றே எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார்.
-
Jun 06, 2025 13:07 IST
முதுநிலை நீட் தேர்வை ஆகஸ்ட் 3ம் தேதி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி
முதுநிலை நீட் தேர்வை ஆகஸ்ட் 3ம் தேதி நடத்த அனுமதி கோரிய தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியத்தின் மீதான மனு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதையடுத்து, முதுநிலை நீட் தேர்வை ஆகஸ்ட் 3ம் தேதி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
-
Jun 06, 2025 13:04 IST
சகோதர உணர்வோடு அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பக்ரீத் நல் வாழ்த்துகள் - ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்: “இஸ்லாமியர்களின் சமூக- கல்வி- பொருளாதார மேம்பாடு மற்றும் உரிமைகளுக்கு தொடர்ந்து பணியாற்றும் சகோதர உணர்வோடு அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் அன்பான பக்ரீத் நல்வாழ்த்துகள். இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாள்களில் ஒன்று பக்ரீத். புத்தாசை உடுத்தி, உணவினை வறியவர்களுக்கு ஒரு பகுதியையும், நண்பர்களுக்கு ஒரு பகுதியையும் பகிர்ந்தளித்துக் கொண்டாடும் பெருநாள்” என்று தெரிவித்துள்ளார்.
-
Jun 06, 2025 12:30 IST
மாநிலங்களவை தேர்தல்: ஸ்டாலின் முன்னிலையில் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார். கமல்ஹாசன் வேட்புமனு தாக்கலின்போது முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-
Jun 06, 2025 12:23 IST
ராஜ்ய சபா தேர்தல்: ஸ்டாலின் முன்னிலையில் வில்சன்,சல்மா, சிவலிங்கம் வேட்புமனு தாக்கல்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர் சிவலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
-
Jun 06, 2025 12:21 IST
கிரானைட் குவாரி முறைகேடு வழக்கு: விசாரணை அதிகாரி சகாயம் காணொலி வழியாகவும் ஆஜராகவில்லை
கிரானைட் குவாரி முறைகேடு வழக்கை விசாரித்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் காணொலி மூலமும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. பாதுகாப்பை காரணம் காட்டி நேரில் ஆஜராவதைத் தவிர்த்து வந்த சகாயம் இன்று காணொலி மூலம் ஆஜராக ஏற்கெனவெ உத்தரவிடப்பட்டிருந்தது. தனது நிலைப்பாடு குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக சகாயம் விளக்கம் அளித்தார். கடிதத்திற்கு பதில் வந்தவுடன் ஆஜராகிறேன் என மதுரை மாவட்ட கனிமவள நீதிமன்றத்திற்கு சகாயம் கடிதம் எழுதினார்.
-
Jun 06, 2025 12:16 IST
முதுநிலை நீட் தேர்வு: மையங்களைக் கண்டறிய ஏன் இவ்வளவு தாமதம்? - சுப்ரீம் கோர்ட் கேள்வி
முதுநிலை நீட் தேர்வை ஆகஸ்ட் 3ம் தேதி நடத்த அனுமதி கோரிய தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியத்தின் மீதான மனு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
"2.20 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதும் நிலையில் ஒரே ஷிப்ட் ஆக தேர்வு நடத்தினால், 450 கூடுதல் மையங்கள் தேவைப்படும்" என வாதிடப்பட்டது. "கால அவகாசம் மிக அதிகமாக உள்ளது. மையங்களைக் கண்டறிய ஏன் இவ்வளவு அவகாசம்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். "தேர்வு மையங்களை கண்டறிந்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கூடுதல் அவகாசம் தேவை" என தேர்வு வாரியம் சார்பில் பதிலளித்தது.
-
Jun 06, 2025 12:08 IST
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சடலம் மாறிய விவகாரம்: மருத்துவர் பணியிட மாற்றம்
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர் சடலம் பிகாருக்கு அனுப்பப்பட்ட விவகாரத்தில் மருத்துவர் பணியிட மாற்றம் செய்ப்பட்டுள்ளார். திருத்தணி விவசாயியின் உடல் தவறுதலாக பீகாருக்கு அனுப்பப்பட்டது. காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளால் அந்த விவசாயியின் உடல் திருவள்ளூர் கொண்டுவரப்பட்டது; பணியில் அலட்சியமாக செயல்பட்ட கிருஷ்ணா ஸ்ரீ திருவண்ணாமலை மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
Jun 06, 2025 11:55 IST
செனாப் பாலத்தை திறந்து வைத்து ஆய்வு செய்தார் மோடி
பிரதமர் மோடி உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தை திறந்து வைத்து ஆய்வு செய்தார்
-
Jun 06, 2025 11:31 IST
தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையது தான் – இ.பி.எஸ்
தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதுதான் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
-
Jun 06, 2025 11:27 IST
நீட் மறு தேர்வு நடத்தக் கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நீட் மறு தேர்வு நடத்தக் கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
-
Jun 06, 2025 10:56 IST
இந்தியாவில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 498 பேர் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா பாதித்த 5364 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் நான்கு பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 221 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
-
Jun 06, 2025 10:18 IST
ரெப்போ விகிதம் 5.5% ஆக குறைப்பு
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ விகிதம்) 6%ல் இருந்து 5.5% ஆக குறைப்பு
-
Jun 06, 2025 10:17 IST
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது
2025 -26 கல்வியாண்டின் MBBS, BDS படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவு தேதி அறிவிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தகவல்
-
Jun 06, 2025 09:31 IST
தமிழ்நாட்டில் வரும் 12ம் தேதி கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
வங்கக் கடலில் அடுத்த வார இறுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என என வானிலை ஆய்வு மையம் கணிப்பு
தமிழ்நாட்டில் வரும் 12 ஆம் தேதி பல பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளாதாக மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
Jun 06, 2025 09:28 IST
நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
-
Jun 06, 2025 09:26 IST
பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்பு: 2 பேர் கைது
பெங்களூருவில் ஆர்.சி.பி. வெற்றிப் பேரணியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆர்.சி.பி. மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான டி.என்.ஏ நிர்வாகிகள் என 2 பேர் கைது
-
Jun 06, 2025 09:24 IST
பெங்களூரு புதிய காவல் ஆணையர் நியமனம்
பெங்களூருவில் ஆர்.சி.பி. வெற்றிப் பேரணியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், பெங்களூரு காவல் ஆணையர் தயானந்த் மாற்றப்பட்ட நிலையில், புதிய ஆணையராக ஸ்ரீமந்த் குமார் ஐ.பி.எஸ் நியமனம்
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கவும் கர்நாடக அரசு முடிவு
-
Jun 06, 2025 08:40 IST
ஆம்னி பேருந்து லாரி மீது மோதி விபத்து
சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் விருதாச்சலம் சாலை மேம்பாலம் அருகே முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து - 10 பேர் படுகாயம்
-
Jun 06, 2025 08:15 IST
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 06, 2025 08:09 IST
அரசு வேலை வாங்கித்தருவதாக பணமோசடி
அரசு வேலை வாங்கித்தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட புகாரில் கைதான அதிமுக பிரமுகருக்கு உடந்தையாக இருந்ததாக கைதான ஆயுதப்படை காவலர் செந்தில் குமாரை 15 நாட்கள் ரிமாண்ட் செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
இதே வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட உதவி ஆய்வாளர்கள் மணிதுரை, சதீஷ்குமார் இருவர் மீதும் ஐ.டி. சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என எழுதி வாங்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
-
Jun 06, 2025 07:31 IST
உலகிலேயே மிகவும் உயரமான செனாப் நதி
ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகிலேயே மிகவும் உயரமான செனாப் நதி ரயில்வே பாலம். பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.
-
Jun 06, 2025 07:30 IST
மாநிலங்களவை தேர்தல்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். மநீம தலைவர் கமல்ஹாசனும் மனுதாக்கல் செய்கிறார்.
-
Jun 06, 2025 07:29 IST
பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள்
நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள். மே. 7 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இதுவரை 2.9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
www.tneaonline.org தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.