Tamil Nadu News Today Updates: புதிய வகை கொரோனா வைரசான கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், “புதிய வகை கொரோனா வைரசான கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை விரிவாக ஆய்வு செய்தேன். இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வது முதல், தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவது வரை, பல்வேறு அமைச்சகங்கள் & மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றன. அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை. நாம் ஒருங்கிணைந்து பணியாற்றி, தற்காப்பை உறுதி செய்வதற்கான சிறிய அளவிலான முக்கிய நடவடிக்கைகளையாவது மேற்கொள்ள வேண்டும்” என்று பதிவு செய்துள்ளார்.
அல்-ஹக்’ என்ற என்ற அமைப்பு பெயரில் வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், "ஏப்ரல் 1-ம் தேதி முதல் தேசிய மக்கள் தொகை பதிவேடை நடைமுறைப் படுத்தினால்,தமிழகத்தில் உள்ள 234 எம்எல்ஏக்களை கடத்துவோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லைவ்- ப்ளாக்கை காணவும்
Live Blog
Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை தொடங்க விரும்புபவர்கள் நீர்வள ஆதாரத்துறையிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களுக்கு சட்டதிட்டங்கள், விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி, மறு அனுமதி வழங்கப்படும்
http://groundwatertnpwd.org.inஇல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - நீர்வள ஆதாரத்துறை அறிவிப்பு
ஆவின் தொடங்கப்பட்டதில் இருந்து முதன்முறையாக 12.95 லட்சம் லிட்டர் பால் விற்பனையை எட்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
சென்னையில் மட்டும் ஆவின் பால் 12.95 லட்சம் லிட்டர் விற்பனை, இதர மாவட்டங்களில் 11.37 லட்சம் லிட்டர் பால் விற்பனை
பள்ளிகளில் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவதை, தடுக்க இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? - மாநில மனித உரிமை ஆணையம் கேள்வி
பள்ளிக்கல்வி துறை செயலாளர், பள்ளிக்கல்வி துறை இயக்குனர் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
கர்நாடகா அரசின் கூடுதல் தலைமைச் செயலர் ஜாவைத் அக்தர், ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் மென்பொறியாளர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் சுகாதாரத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 3 திட்டம் குறித்து மக்களவையில் ஒரு கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், சந்திரயான் 3 திட்டம் 2021-ம் ஆண்டு முதல் பாதியில் செலுத்த திட்டமிட்டுள்ளதாகதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு, பாதுகாப்புடன் நாம் ஒன்றிணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த உதவலாம் என குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகள் எம்பி எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக முக ஸ்டாலின்க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறந்த கலைஞர்களுக்கான லலித் கலா அகாதெமி விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. டெல்லியில் அமைந்திருக்கும் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில் குடியரசுத் தலைவர் சிறந்த கலைஞர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
கள்ளக்குறிச்சியின் சிறுவாங்கூரில் 20.5 ஏக்கர் நிலபரப்பில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.382 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரியலூரில் 10.83 ஏக்கர் நிலப் பரப்பில் உருவாகவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு ரூ.347 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. இதன் கட்டுமான பணிகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார்.
வங்கிக் கடன் வாங்கிய வழக்கு ஒன்றில் அதிமுக முன்னாள் எம்.பி. கே.என் ராமச்சந்திரன் குற்றவாளி என்று அறிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். வங்கியில் ரூ. 20 கோடி கடன் பெற்ற வழக்கில் வங்கி மேலாளர், ராமச்சந்திரனின் மகன் ஆகியோரும் குற்றவாளிகள் என தீர்ப்பு. கடன் கொடுக்க வங்கி மேலாளர் லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பினை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ஏப்ரல் 6 மாதம் கிரிப்டோகரன்சி குறித்து ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது.அதில், ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட வங்கி நிறுவனங்கள் கிரிப்டோகரன்சி மூலம் எந்த சேவையையும் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவித்தது. இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றம் இந்த சுற்றறிக்கையை ரத்து செய்வதாக அறிவித்து தீர்ப்பு வழங்கியது.
கடந்த ஜனவரி 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச் சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார்.
பெரியார் பற்றிய பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக திராவிடர் கழக நிர்வாகி புகார் அளித்திருந்தார். தான் அளித்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று திருவல்லிக்கேணி ஆய்வாளர் பதிலளிக்க வேண்டும் என்று குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேட்டூரில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளை இணைக்கும் மேட்டூர் சரபங்கா உபரிநீர் திட்டத்தை இன்று முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். மேட்டூர் அணையின் உபர நீரினை சரபங்கா, திருமணிமுத்தாறு, மற்றும் முசிறி ஆகிய சிறு வடிநிலங்களில் தற்போது உள்ள அணைக்கட்டுகள் மற்றும் ஏரிகளின் பாசனத் திறனை அதிகரிக்கும் பொருட்டு, இணைப்புக் கால்வாய் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் சேலம், நாமக்கல், அரியலூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும் என்று நம்பப்படுகிறது.
BJP MP from #Bolangir Sangeeta Kumari Singh Deo alleges she was thrashed by Congress MPs inside Parliament #Odisha
LISTEN to what she says in connection with the incident pic.twitter.com/JqmWsTARor
— OTV (@otvnews) March 3, 2020
ஓடிசா பலாங்கீர் பாராளுமன்ற உறுப்பினர் சங்கீதா சிங் தியோ (பாஜக), ரம்யா ஹரிதாஸ், ஜோதிமணி ஆகியோரால் தான் தாக்கப்பட்டதாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்துள்ளார்.
கடந்த திங்களன்று,கேரளாவை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ரம்யா ஹரிதாஸ், பாஜகவின் பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாக புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்-ஹக்’ என்ற என்ற அமைப்பு பெயரில் வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், “ஏப்ரல் 1-ம் தேதி முதல் தேசிய மக்கள் தொகை பதிவேடை நடைமுறைப் படுத்தினால்,தமிழகத்தில் உள்ள 234 எம்எல்ஏக்களை கடத்துவோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் ஒரு இத்தாலிய சுற்றுலாப் பயணிக்கு செய்த மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு COVID-19 கொரோனா வைரஸ் பாஸிட்டிவ் என உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளன. இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஜப்பான் நாட்டு மக்களுக்கு மார்ச் 3 அல்லது அதற்கு முன்னதாக வழங்கப்பட்ட அனைத்து வழக்கமான விசாக்கள் மற்றும் இ விசாக்களை நிறுத்தி வைக்க மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights