Tamil nadu news today updates : தமிழக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார் ஆகியோர், டில்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர். அப்போது அவரிடம், தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பில், சில தகவல்களை பெறுவதில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரியதாக, தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், இந்திய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்புக்கு எதிராக, முஸ்லிம் அமைப்பினர், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், ஆதரவு அளித்துள்ளன.'இந்த சட்டங்களால், சிறுபான்மை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை' என, முதல்வர் மற்றும் அமைச்சர்கள், உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சீனா உட்பட பல நாடுகளில் வேகமாக பரவி வரும் உயிர் கொல்லியான 'கொரோனா வைரஸ்' இந்தியாவிற்குள்ளும் நுழைந்து விட்டது. டில்லியில் இருந்து இத்தாலி சென்று திரும்பிய ஒருவர், துபாயில் இருந்து தெலுங்கானா திரும்பியவர் மற்றும் ராஜஸ்தான் வந்த இத்தாலி நாட்டு பயணி ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கோழி சாப்பிடுவதால் 'கொரோனா வைரஸ்' பாதிப்பு ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதானல் கோழி விற்பனை சரிந்தது. இதையடுத்து கோழிப் பண்ணை தொழிலில் ரூ.1,750 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பண்ணை உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
தனியார் வார இதழ் (குமுதம் ரிப்போர்ட்டர்) விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி என்பவர் சிவகாசியில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதி
இன்று வெளியான வார இதழில் அமைச்சர் ராஜேந்திர பலாஜிக்கும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ வர்மனுக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை நிலவுவதாக செய்தி வெளியான நிலையில் செய்தியாளர் தாக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
புதுச்சேரியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த அமைச்சர் கமலக்கண்ணனின் செல்போனை, பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
கடற்கரைச் சாலையில் தனது பாதுகாப்பு அதிகாரியுடன் இரவில் நடைபயிற்சியை முடித்துக்கொண்டு கமலக்கண்ணன் தனது வீடு நோக்கித் திரும்பியுள்ளார்.
அப்போது, பாதுகாப்பு அதிகாரி கையில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமைச்சர் கமலக்கண்ணனின் செல்போனை, அவ்வழியே பைக்கில் வந்த இருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பல நடிகர்கள் பாஜகவில் இணைய உள்ளனர்; நடிகர் கார்த்திக்கை பாஜகவில் சேர அழைத்துள்ளேன்
வரும் சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பாஜக துணையுடன் தான் முதல்வராக முடியும்
எதிர்க்கட்சியினர் என்ற கொரோனாவுக்கு மருந்து கொடுக்க தேர்தலில் சரியாக வாக்களிக்க வேண்டும்
- ராதாரவி
தமிழக நினைவுச் சின்னங்கள், கோயில்களை கைப்பற்ற நினைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்காமல் முதலமைச்சர் பழனிசாமியும், அமைச்சர் பாண்டியராஜனும் மவுனம் சாதிப்பது ஏன்?
தமிழர் நாகரிகத்தைச் சிதைக்கும் கலாச்சாரப் படையெடுப்பை திமுக ஒருபோதும் அனுமதிக்காது.
- மு.க.ஸ்டாலின்
என்பிஆர்-ல் திருத்தம் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஆந்திர பிரதேச அரசு முடிவு
* என்.பி.ஆர்-ல் உள்ள சில கேள்விகளால் எங்கள் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரிடையே அச்சம் எழுந்துள்ளது - ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் மார்ச் 18ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற இருந்த சர்வதேச கடற்படை கூட்டுப்பயிற்சி ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்
கொரோனா அறிகுறியுடன் வரும் நபர்களுக்கு தனிப்பிரிவை ஏற்படுத்தவும் மத்திய அரசு உத்தரவு எனத் தகவல்
மதுரையில் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்ட 13 ஆவின் இயக்குநர்களில் 11 பேரின் தேர்வுக்கு தடை
முழுமையான வீடியோ பதிவு தாக்கல் செய்யப்படவில்லை; எடிட் செய்தது போல தெரிகிறது; பழனியப்பன், தங்கராஜ் ஆகியோரைத் தவிர பிறர் தேர்வு செய்யப்பட்டதற்கு தடை
- உயர்நீதிமன்ற கிளை
தமிழர்களின் நாகரிகம், கலாசாரத்தை சிதைக்க மத்திய பாஜக அரசு முயற்சித்தால் தமிழக மக்களை திரட்டி திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்
பண்பாட்டுக் களஞ்சியங்களான கோயில்களை பறித்துக்கொள்ள பரம்பரை எதிரிகள் துடிக்கிறார்கள்
- மு.க.ஸ்டாலின்
சென்னை தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேசன் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், கார் ஷோரூம் ஒன்று சேதமடைந்தது. தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் கோவிந்தராஜ், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், டூவிலரில் வந்த இருவர், நாட்டு வெடிகுண்டை வீசி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சந்தேக நபர்களை இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பூமலூரில் உள்ள நூற்பாலையில் பயங்கர தீ விபத்து
தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நூல் மூட்டைகள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதம்
தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னர், தீயை அணைத்தனர்
பஞ்சு அரவை இயந்திரத்தில் புகை வருவதை கண்ட பணியாளர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கொரோனா பாதிப்பு பற்றி சிங்கப்பூர் பிரதமர் எடுத்துவரும் திட்டம் தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளதோடு, “கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்கான திட்டங்கள் பற்றி பிரதமர் யோசிக்க வேண்டும்; சமூக வலைதளங்களில் நேரம் விரயம் செய்ய வேண்டாம்.” என்று கூறியுள்ளார்.
Dear @PMOIndia,
Quit wasting India's time playing the clown with your social media accounts, when India is facing an emergency. Focus the attention of every Indian on taking on the Corona virus challenge.
Here's how it's done..#coronavirusindia pic.twitter.com/jLZG5ISjwt
— Rahul Gandhi (@RahulGandhi) March 3, 2020
தமிழகத்தில் பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட மூலக்கூறுகள் பயன்படுத்தப்படுகிறதா என்றும் பட்டாசு ஆலைகள் விதிகளை மீறி செயல்பட்டதா என்றும் சிபிஐ இணை இயக்குநர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனாவைக் கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பது குறித்து பல்வேறு துறைகளும் மாநில அரசுகளும் இணைந்து செயல்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
There is no need to panic. We need to work together, take small yet important measures to ensure self-protection. pic.twitter.com/sRRPQlMdtr
— Narendra Modi (@narendramodi) March 3, 2020
பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்த மகளிர் தினத்தில் எனது சமூக ஊடக கணக்குகளை தங்கள் வாழ்க்கை மற்றும் வேலைகள் மூலம் நமக்கு ஊக்கமளிக்கும் பெண்களுக்கு தருகிறேன். மில்லியன் கணக்கானவர்களுக்கு உந்துதலை அளிக்க இது அவர்களுக்கு உதவும். நீங்கள் அத்தகைய பெண்ணா அல்லது இதுபோன்ற எழுச்சியூட்டும் பெண்களை உங்களுக்குத் தெரியுமா? போன்ற கதைகளைப் பயன்படுத்தி பகிரவும் என்று குறிபிட்டுள்ளார்.
This Women's Day, I will give away my social media accounts to women whose life & work inspire us. This will help them ignite motivation in millions.
Are you such a woman or do you know such inspiring women? Share such stories using #SheInspiresUs. pic.twitter.com/CnuvmFAKEu
— Narendra Modi (@narendramodi) March 3, 2020
அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் சூரிய ஒளி பதமிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
டிஎன்பிஎஸ்சி சார்பில் நடைபெற்ற சீருடை பணியாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் 8,888 பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த உத்தரவு ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் தமிழக கோயில்கள் கொண்டு வரும் முறைக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக கோயில்களை, மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றால், தமிழக அரசு அதை முறியடிக்க வேண்டும் என்று அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
வட மாநிலங்களில் வெங்காயத்தின் இருப்பு குறைந்ததால், கடந்த ஆண்டில் வெங்காயம் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதையடுத்து வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், தற்போது விளைச்சல் அதிகரித்ததால், வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியது, வெங்காய விலைவிலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும்15-ம் தேதியில் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னை அண்ணாசாலை பகுதியில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் கத்தியை காட்டி இரண்டு இளைஞர்கள் விரட்டிய வீடியோ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யார் நினைத்தாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது. ஆட்சி கலைப்பு என்பதை கருக்கலைப்பு என்று நினைத்துவிட்டார்களோ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால், அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்துவிடுவோம் என்று பா.ஜ., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மிரட்டியிருந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியன் 2 படப்பிடிப்பில் நிகழ்ந்த கிரேன் விபத்தில், துணை இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் பலியாயினர். 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பான விசாரணை, மத்திய குற்றப்பிரிவு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக, நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், கமலிடம் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.
கருணாநிதியுடன் ஸ்டாலினை ஒப்பிடாதீர்கள்; அந்த ரோஜா வேறு, இந்த ரோஜா வேறு என, கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தலைவர் கருணாநிதியுடன் ஸ்டாலினை ஒப்பிடக் கூடாது. ரோஜா மலரை மற்றொரு ரோஜா மலருடன் கூட ஒப்பிடக் கூடாது. அந்த ரோஜா வேறு. இந்த ரோஜா வேறு. தலைவர் கருணாநிதி வேறு உயரம். ஸ்டாலின் வேறு உயரம். இரண்டும் வெவ்வேறு சிகரம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேன் குடிநீர் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் 6-வது நாளாக நீடிப்பதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 1,689 குடிநீர் உற்பத்தியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் 400-க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளின் மூலம் கிட்டத்தட்ட நாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான குடிநீர் கேன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உயர்நீதிமன்றம், உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் கேன் உரிமையாளர்கள் அவர்களது பணிகளை தொடர முடியாத நிலை உருவானது. ஆகவே கேன் உரிமையாளர்கள் உரிமம் பெறுவதற்கான வழி வகைகளை அரசு உருவாக்க வேண்டும் என்று கடந்த 6 நாள்களாக கேன் உரிமையாளர்கள் முழு வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டையே அதிர வைத்த, 'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகளின் துாக்கு தண்டனை மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 'நிர்பயா' வழக்கில், நான்கு குற்றவாளிகளுக்கு, இந்தாண்டு, ஜன.,22, பிப்.,1 ஆகிய தேதிகளில் துாக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டது. இன்று நிறைவேற்றப்பட இருந்த துாக்கு தண்டனை, நீதிமன்ற உத்தரவால், மூன்றாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights