Advertisment

இன்றைய செய்திகள் : மார்ச் 9ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

Tamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இன்றைய செய்திகள் : மார்ச் 9ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

Tamil nadu news today updates : உலகையே உலுக்கி கொண்டிருக்கும் 'கொரோனா' வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையிலும் 28 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 'ஐரோப்பிய நாடான இத்தாலியில் இருந்து இந்தியாவிற்கு வந்த 16 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணியரும் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...

இந்த ரணகளத்திலும் குதூகலம் தேவையா சார்மி?

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

குடியுரிமை திருத்த சட்டத்தை(சிஏஏ) எதிர்ப்பது தேசதுரோகம் என பா.ஜ., தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்தார் . திருப்பூரில் நடந்த விழாவில் அவர் மேலும் பேசியதாவது, 'நாட்டில் ஊடுருவல்காரர்களை கண்டெடுத்து களைவதற்காகவே சி.ஏ.ஏ., சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இச்சட்டத்தை எதிர்ப்பது தேசதுரோகமாகும். சென்னை, தேனி, தாராபுரம் போன்ற இடங்களில் நடந்த சி.ஏ.ஏ., எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை நடந்துள்ளது. இது பெரிய கலவரத்தை ஏற்படுத்த போராட்டகாரர்கள் தங்களை 'வார்ம் அப்' செய்து கொள்கிறார்கள் என்றே கருதுகிறேன். தேசிய மக்கள் கணக்கெடுப்பின் போது மக்களின் சுய விபரங்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன. இந்த விபரங்களை தருவதற்கு யாரும் தயங்க தேவையில்லை என அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:36 (IST)05 Mar 2020

    ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது YES BANK

    ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது YES BANK

    YES வங்கியை நிர்வகிக்க எஸ்பிஐ வங்கியின் முன்னாள் அதிகாரி பிரசாந்த் குமாரை நியமித்து ஆர்பிஐ உத்தரவு

    YES வங்கியில் வைப்புத்தொகை வைத்துள்ளோர் ரூ.50,000 வரை மட்டுமே எடுக்க கட்டுப்பாடு விதிப்பு

    21:59 (IST)05 Mar 2020

    மோசமான முன்னுதாரணம்

    தமிழக ஆளுநர், சென்னைப் பல்கலை. துணைவேந்தரை தேர்வு செய்யும் குழுவிற்குத் தலைவராக, ஜவஹர்லால் நேரு பல்கலை. துணைவேந்தரை நியமித்திருப்பது மோசமான முன்னுதாரணம் - ஸ்டாலின் அறிக்கை

    20:49 (IST)05 Mar 2020

    தெலங்கானா முதல்வரை சந்தித்த அமைச்சர்கள்

    கோதாவரி, காவேரி இணைப்பு தொடர்பான முதல்வர் பழனிசாமியின் கடிதத்தை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்து தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் வழங்கினர்.

    publive-image

    20:42 (IST)05 Mar 2020

    திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

    மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 9ஆம் தேதி காலை 11 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது

    திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் - கொறடா சக்கரபாணி

    20:18 (IST)05 Mar 2020

    காங்கிரஸ் எம்பிக்களை இடைநீக்கம் செய்தது ஜனநாயக விரோதம் - கே.எஸ்.அழகிரி கண்டனம்

    மக்களவையில் 7 காங்கிரஸ் எம்பிக்களை இடைநீக்கம் செய்தது ஜனநாயக விரோதமானது என்று கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், வேளாண் மண்டலத்தால் விவசாய கூலித்தொழிலாளிகளுக்கு ஏதேனும் பலன் கிடைத்துள்ளதா...? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    20:10 (IST)05 Mar 2020

     54 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை; கொரோனா தொற்று இல்லையென உறுதி - சுகாதாரத்துறை

    தமிழக சுகாதாரத்துறை: தமிழகத்தில் 54 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,243 பயணிகள் தங்களின் வீடுகளிலேயே மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

    19:36 (IST)05 Mar 2020

    ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் கோரிக்கை

    ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

    19:34 (IST)05 Mar 2020

    அத்துமீறி இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த முயற்சித்த பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா பதிலடி

    அத்துமீறி இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த முயற்சித்த பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

    குப்வாரா எல்லைப் பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தி பாகிஸ்தானின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.

    18:50 (IST)05 Mar 2020

    சென்னையில் வெடிகுண்டு வீசிய வழக்கில் 4 பேர் மதுரையில் சரண்

    சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கம் அருகே நடைபெற்ற வெடிகுண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக கமருதீன், ராஜசேகர், பிரசாந்த், ஜான்சன் ஆகிய 4 பேர் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

    18:47 (IST)05 Mar 2020

    மின் கணக்கீட்டாளர்கள் ஆன்லைன் தேர்வை தமிழில் நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்

    மின் கணக்கீட்டாளர்கள் பதவிக்கான ஆன்லைன் தேர்வை தமிழில் நடத்த மின்துறை அமைச்சர் மறுஅறிவிப்பு வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    18:01 (IST)05 Mar 2020

    பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் கமல்ஹாசனுடன் சந்தித்து ஆலோசனை

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை பல்வேறு இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    17:40 (IST)05 Mar 2020

    மகளிர் டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலிய அணி

    மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.

    இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து விளையா உள்ளது ஆஸ்திரேலிய அணி

    17:22 (IST)05 Mar 2020

    நடிகர் ஆனந்தராஜின் சகோதரர் விஷம் குடித்து தற்கொலை

    நடிகர் ஆனந்தராஜின் சகோதரர்களில் ஒருவரான கனகசபை (55), வீடு அண்ணா சாலையொட்டி திருமுடிநகரில் உள்ளது. வட்டிக்கு பணம் தருவது மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்த கனகசபை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், கனகசை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    16:25 (IST)05 Mar 2020

    மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் டைட்டானிக் கப்பல் கேப்டன் போல பேசுகிறார் - ராகுல் காந்தி விமர்சனம்

    கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் பயப்பட வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறிய நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறுகிறார். அவர் கூறுவது, டைட்டானிக் கப்பல் மூழ்காது; யாரும் பயப்பட வேண்டாம் என்று கேப்டன் தனது பயணிகளுக்குச் சொல்வது போல இருக்கிறது. கரோனா வைரஸ் நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு ஒரு நிலையான, உறுதியான திட்டத்தை வழங்க வேண்டிய நேரம் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.

    16:19 (IST)05 Mar 2020

    சிவகாசியில் பத்திரிகையாளரை தாக்கியதற்கு திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பத்திரிகையாளரை தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து, திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    16:18 (IST)05 Mar 2020

    கொரோனா பாதிப்பு எதிரொலி: பயோமெட்ரிக் வருகை பதிவுக்கு டெல்லி அரசு தடை

    கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக பயோமெட்ரிக் வருகை பதிவுக்கு டெல்லி மாநில அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

    15:49 (IST)05 Mar 2020

    உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொலை வழக்கில் தேடப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர் கைது

    உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொலை வழக்கில் தேடப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

    15:24 (IST)05 Mar 2020

    பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து 7 காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் - சபாநாயகர் உத்தரவு

    மக்களவை விதிகளுக்கு முரணாக செயல்பட்டதாக கூறி காங்கிரஸ் என்பிக்கள் 7 பேர்களை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ப்நடவடிக்கை பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்

    14:50 (IST)05 Mar 2020

    நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மார்ச் 20-ம் தேதி தூக்கு - டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

    நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஏற்கெனவே 3 முறை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் டெல்லி பாட்டியாலா உயர் நீதிமன்றம் குற்றவாளிகள் 4 பேருக்கும் வருகிற 20-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது.

    14:18 (IST)05 Mar 2020

    நாட்டின் பல இடங்களிலும் வைராலஜி பரிசோதனை மையம் ஏற்படுத்தப்பட வேண்டும் - கனிமொழி பேச்சு

    மக்களவையில் பேசிய திமுக எம்.பி கனிமொழி, புனேவில் இருப்பது போன்று நாட்டின் பல இடங்களிலும் வைராலஜி பரிசோதனை மையம் ஏற்படுத்தப்பட வேண்டும் வலியுறுத்தினார்.

    13:40 (IST)05 Mar 2020

    ரஜினி பேட்டி: ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தி இல்லை; அது என்னவென்று இப்போது சொல்லமாட்டேன்

    நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், “கட்சி தொடங்குவது பற்றி ஒரு ஆண்டுக்குப் பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்தேன். மாவட்ட செயலாளர்களிடம் நிறைய கேள்வி இருந்தது. அதற்கு எல்லாம் நான் பதில் கொடுத்தேன். நிறைய விஷயங்களை பரிமாறிக்கொண்டோம். அவர்களுக்கு எல்லாம் திருப்தி. ஆனால், ஒரு விஷயத்தில் எனக்கு அவ்வளவு திருப்தி கிடையாது. எனக்கு ஏமாற்றாம்தான். அது என்னவென்று இப்போது சொல்லமாட்டேன். நேரம் வரும்போது சொல்கிறேன்.” என்று கூறினார்.

    13:29 (IST)05 Mar 2020

    தமிழக மாணவர்களுக்கு தான் வாய்ப்பு – முதல்வர் பழனிசாமி

    தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 85 சதவீத வாய்ப்புகள் தமிழக மாணவர்களுக்குத்தான் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    13:04 (IST)05 Mar 2020

    ஒரு விஷயத்தில் தனக்கு ஏமாற்றம் உள்ளது - ரஜினி

    தனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம் உள்ளது. அதனை பின்னர் சொல்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

    ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய நடிகர் ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,  கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தினேன். தனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம் உள்ளது. அதை பின்னர் சொல்வதாக அவர் தெரிவித்தார்.

    12:41 (IST)05 Mar 2020

    அதிமுக அரசு மக்களின் நலனை உணர்ந்த அரசு - துணை முதல்வர் பன்னீர்செல்வம்

    அதிமுக அரசு, மக்களின் நலனை உணர்ந்து எதிர்கால திட்டங்களை வகுப்பதில் சிறந்து விளங்குவதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில், பன்னீர்செல்வம் இவ்வாறு பேசினார்.

    12:23 (IST)05 Mar 2020

    அதிமுகவிடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்கவில்லை- பொன்.ராதாகிருஷ்ணன்

    மார்ச் 26ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்,அதிமுகவிடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தான் கேட்டதாக வந்த வதந்திக்கு பா.ஜ. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    11:42 (IST)05 Mar 2020

    சிஏஏ போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு  எதிராக அனுமதியின்றி போராடுபவர்களை அப்புறப்படுத்த தமிழக காவல்துறை டி.ஜி.பி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டவிரோதமாக நடைபெறும் போராட்டங்களை தடுக்க கோரி வழக்கறிஞர் கோபிநாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை நீதிபதி சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு விசாரித்தது. அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் நடைபெறும் சட்ட விரோத போராட்டங்கள் தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.  அனுமதியின்றி போராட்டம் நடத்தும் அனைவரையும் அப்புறப்படுத்துமாறு டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்

    11:21 (IST)05 Mar 2020

    நாமக்கல்லில் புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டல்

    publive-imageநாமக்கல் மாவட்டத்தில் அமைய உள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினர். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    11:02 (IST)05 Mar 2020

    பெண்கள் டி20 உலககோப்பை கிரிக்கெட் – இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி

    பெண்கள் டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது. 

    பெண்கள் டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் அரையிறுதி போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று ( 5ம் தேதி) மோதின. மழை குறுக்கிட்டதால், பால் எதுவும் வீசப்படாத நிலையில், போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. புள்ளிகள் கணக்கில் இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 

    மற்றொரு அரையிறுதிப்போட்டியில், தென் ஆப்பிரிக்க - ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன. இதில் ஜெயிக்கும் அணி, இறுதிப்போட்டியில், இந்தியாவை எதிர்கொள்ளும்.

    10:42 (IST)05 Mar 2020

    வாக்காளர் அட்டையில் நாய்ப்படம்: முதியவர் அதிர்ச்சி

    மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்த சுனில் கர்மாகர் என்பவருக்கு  நாய் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    publive-image

    இது தொடர்பாக சுனில் கர்மாகர் கூறியதாவது: என்னை அழைத்த அதிகாரிகள், திருத்தம் செய்த வாக்காளர் அடையாள அட்டையை கொடுத்தனர். அதில், எனது புகைப்படத்திற்கு பதில் நாய் புகைப்படம் இருந்தது. அட்டையில், அதிகாரியும் கையெழுத்திட்டுள்ளார். ஆனால், அவரும் அதனை பார்க்கவில்லை. அதிகாரிகள் எனது கவுரவத்துடன் விளையாடுகின்றனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

    10:22 (IST)05 Mar 2020

    தமிழகத்தில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி

    தமிழகத்தில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் , உயர்கல்வித்துறை சார்பில் ரூ.7.98 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார். பின்னர் அவர் பேசியதாவது, தமிழகத்தில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.   தமிழக‌ அரசின் இந்த நடவடிக்கையால் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

    10:12 (IST)05 Mar 2020

    பெட்ரோல், டீசல் விலை குறைவு

    சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.74.07 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.67.47 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

    09:58 (IST)05 Mar 2020

    ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை இன்று சந்தித்தார் ரஜினிகாந்த்

    ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் மீது தொடர்ந்து புகார்கள் வந்தன. மாவட்டச் செயலாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் ஒற்றுமையில்லாத சூழல் நிலவுவதால், அவர்களை ஒற்றுமையாக செயல்படுமாறு அறிவுறுத்த ரஜினிகாந்த் விரும்பியதாக கூறப்படுகிறது.

    publive-image

    இதற்காக மாவட்டச் செயலாளர்கள் 38 பேரும் சென்னைக்கு புறப்பட்டு வருமாறு தொலைபேசியில் அழைக்கப்பட்டுள்ளனர். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, காணொலிக்காட்சி மூலம் ரஜினிகாந்த் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் புதிய நிர்வாகிகள், பூத் கமிட்டிகள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்றும், கிராமங்களில் ரஜினி மக்கள் மன்றம் இயங்கும் விதம் குறித்து பேசப்படும் என்றும் தெரிகிறது.

    Tamil nadu news today updates : டில்லியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக இணைக்கும் முயற்சிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கான ஆவணங்களை வங்கிகள் அரசிடம் சமர்ப்பித்துள்ளன. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. வங்கிகளின் இணைப்பிற்கு பின் வங்கிகளின் சேவையில் எவ்வித மாற்றங்களும் இருக்காது. பரிவர்த்தனைகள் எதுவும் பாதிக்கப்படாது. ஏப்., 1 ல் இந்த இணைப்பை அமல்படுத்துவதற்கான காலமான நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2017 ல் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. தற்போது 18 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளின் இணைப்பின் பிறகு 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இருக்கும்.

    கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி தினமும் ஆய்வு செய்து வருகிறார் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். அவர் கூறியதாவது: வைரஸ் பாதிப்பை சமாளிக்க, அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. நிலைமை குறித்து, பிரதமர் மோடி, தினமும் ஆய்வு செய்து வருகிறார். அண்டை நாடுகளான வங்கதேசம் உள்ளிட்ட எல்லைகளிலும், பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தற்போது, மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள மையத்தில் மட்டுமே, ரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும், 19 இடங்களில், கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    Coronavirus Rajinikanth Narendra Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment