Advertisment

News Highlights: கொரோனா பரிசோதனை புதிய வசதிகள்- மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை, வரும், 5ம் தேதி நடத்த, அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Today

Tamil News Today

Tamil News Today Live : கொரோனா பரிசோதனைகளின் புதிய வசதிகளை, பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை,போயஸ் தோட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த, 'வேதா நிலையம்' வீடு, அரசுடைமை ஆக்கப்பட்டது. அதற்கான தொகை, 68 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் செலுத்தி, ஜெ., வீட்டை மீட்டெடுத்தது, அ.தி.மு.க., அரசு.சென்னை, போயஸ் தோட்டம் பகுதியில், மறைந்த ஜெயலலிதா வசித்த, 'வேதா நிலையம்' உள்ளது.

Advertisment

இதை, அவரது நினைவு இல்லமாக மாற்ற, 2017ல், தமிழக அரசு முடிவு செய்தது.அதற்கு, ஜெ.,வின் அண்ணன் வாரிசுகளான தீபாவும், தீபக்கும் ஆட்சேபம் தெரிவித்து, தங்களை ஜெ.,வின் வாரிசுகளாக அறிவிக்க கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கில், ஜெ.,வின், 188 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை, தீபா, தீபக் ஆகியோருக்கு வழங்கி, அவர்களை முதல் நிலை சட்ட வாரிசுதாரர்கள் என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, 5ம் தேதி நடக்க உள்ள நிலையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்திக்கு சென்றார். அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை, வரும், 5ம் தேதி நடத்த, அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. ஏற்பாடுவிழாவில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல்லை நாட்டுகிறார், விழாவில், பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் உட்பட, 200 பேர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:54 (IST)26 Jul 2020

    உயர் உற்பத்திப் பரிசோதனை வசதிகளை நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

    பிரதமர்நரேந்திர மோடி, நாளை (ஜூலை 27-ஆம் தேதி) காணொளிக் காட்சி மூலம் கொரோனா  உயர் உற்பத்திப் பரிசோதனை வசதிகளைத் தொடங்கி வைக்கிறார். இந்த வசதிகள் நாட்டின் பரிசோதனைத் திறனை அதிகரிப்பதுடன், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை பெற உதவும்.

    ஐசிஎம்ஆர்- தேசியப் புற்றுநோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நொய்டா, ஐசிஎம்ஆர்- தேசிய இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மும்பை, ஐசிஎம்ஆர் - தேசிய காலரா மற்றும் நுரையீரல் நோய்கள் நிறுவனம், கொல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் இந்த உயர் உற்பத்தி பரிசோதனை வசதிகள் அமைக்கப்படும். இதன் மூலம் நாளொன்றுக்கு 10,000 மாதிரிகளைச் சோதிக்க முடியும் என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.   

    22:48 (IST)26 Jul 2020

    பீகார் மழை வெள்ளத்தால் 15 லட்சம் பேர்15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

    பீகார் மாநிலத்தில் தர்பங்கா, முசாபர்நகர், கோபால்கஞ்ச் மற்றும் சீதாமார்கி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் அதிகமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 15 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வெள்ளத்தால் குறைந்தது 10 உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.    

    அசாம் மாநிலத்தில் 26 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 3 பேர் உயிரிழந்ததை அடுத்து பலியானவர்கள் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்திருக்கிறது

    22:43 (IST)26 Jul 2020

    சிக்கிம் மாநிலத்தில் முழு ஊரடங்கு ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

    சிக்கிம் மாநிலத்தில், கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காக முழு ஊரடங்கு ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் ஏற்கனவே கடந்த 21ம் தேதி முதல் நாளை வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. நோய்த் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு இன்று ஏற்பட்டுள்ளதை அடுத்து முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.  

    சிக்கிம் மாநிலத்தில் இதுவரை 499 பேர் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்..

    21:51 (IST)26 Jul 2020

    ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை- நாளை முதல்வர் வழங்குகிறார்

    சாத்தான்குளத்தில் போலீஸ் லாக்கெப்பில் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு  நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு பணி ஆணையை நாளை வழங்குகிறார்

    ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.     

    21:31 (IST)26 Jul 2020

    கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ் குமாருக்கு கொரோனா

    கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  

    21:20 (IST)26 Jul 2020

    இலங்கைக்கு 400 மில்லியன் டாலர் தொகையை வழங்க இந்தியா ஒப்புதல்

    இலங்கைக்கு 400 மில்லியன் டாலர் தொகையை வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கியிலிருந்து 400 மில்லியன் டாலர் ரொக்கத்தை இலங்கை மத்திய வங்கிக்கு பரிமாற்றம் செய்ய இருதரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

    19:56 (IST)26 Jul 2020

    #JusticeForAnaikaraiMuthu-விற்கு திமுக துணை நிற்கும்!

    வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட உயிரிழந்த விவசாயி அணைக்கரை முத்துவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.     

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,"  சாத்தான்குளம் ரத்தச்சுவடுகள் காயும்முன் தென்காசியில் மற்றொரு மரணம்!  56வயது அணைக்கரை முத்துவை வனத்துறையினர் சட்டைகூட அணியவிடாமல் இரவில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்; கஸ்டடியிலேயே இறந்திருக்கிறார். சட்டத்தின் ஆட்சிதானா இது? #JusticeForAnaikaraiMuthu-விற்கு திமுக துணை நிற்கும்! " என்று தெரிவித்தார். 

     

    19:51 (IST)26 Jul 2020

    புதிய சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் - ஸ்டாலின்

    புதிய சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை மத்திய திரும்பப்பெற வேண்டும்  என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். 

    மு.க ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில்," ஆபத்து விளைவிக்கும் திட்டங்களைக் கூட சுற்றுச்சூழல் முன் அனுமதியே பெறாமல் செயல்படுத்த வகை செய்யும் ஓர் அறிவிக்கையை பேரிடர் காலத்திலும் அவசரமாக வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது! கார்ப்பரேட்டுளுக்கு கார்பெட் விரிக்கும் இந்த புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை (EIA 2020) மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது  

    19:38 (IST)26 Jul 2020

    கார்கில் வெற்றி தினம்: ராணுவ மருத்துவமனைக்கு, குடியரசுத்தலைவர் நன்கொடை

    கார்கில் போரின் போது, வீரத்துடன் போராடி, உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு, ரூ.20 லட்சம் நன்கொடை அளிப்பதற்கான காசோலையை இன்று வழங்கினார்.

    கார்கில் போரில் இந்தியா வெற்றியடைந்ததன் 21-வது ஆண்டு தினம் இன்று வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது

    19:36 (IST)26 Jul 2020

    கண்ணியமான முறையில் பிரியாவிடை அளிப்பதை உறுதி செய்யவேண்டும் - குடியரசு துணைத் தலைவர்

    கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு கண்ணியமான முறையில் பிரியாவிடை அளிப்பதை உறுதி செய்யவேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார். உயிரிழப்பவர்கள் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவேண்டும் என்று தெரிவித்தார்.

    19:33 (IST)26 Jul 2020

    உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 32,063 ஆக உயர்ந்துள்ளது

    நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் 48,661 பேருக்கு கோவிட்-19 தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,85,522 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 8,85,576 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது 4,67,882 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 705 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இத்தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 32,063 ஆக உயர்ந்துள்ளது.

    18:58 (IST)26 Jul 2020

    தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,471 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

    தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 5,471 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த என்ணிக்கை, 1,56,526 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    18:08 (IST)26 Jul 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழகத்தில் இன்று புதிதாக 6,986 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    18:07 (IST)26 Jul 2020

    கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தது சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் குடும்பம்

    கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.

    17:02 (IST)26 Jul 2020

    இழந்த நேரத்தை மீட்க முடியாது - ஏ.ஆர்.ரஹ்மான்

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்: “இழந்த பணத்தை மீட்டு விடலாம்; இழந்த புகழை மீட்டு விடலாம்; ஆனால் இழந்த நேரம் திரும்ப வராது. அமைதியாக கடந்து செல்வதே சிறந்தது; நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

    15:37 (IST)26 Jul 2020

    அண்ணா பல்கலை. பேராசிரியர்கள், ஊழியர்கள் தேவையில்லாத விஷயங்களை பதிவிட்டால் நடவடிக்கை

    அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சமூக ஊடகங்களில் தேவையில்லாத விஷயங்களை பதிவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

    15:17 (IST)26 Jul 2020

    விருதுநகர் மாவட்டத்தில் இன்று 491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    விருதுநகர் மாவட்டதில் இன்று புதிதாக 491 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,490 ஆக அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா பரவலைத் தடுக்க, பொதுமக்கள் வெளியே வந்தால் நாளை முதல் முக கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். மீறினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    15:02 (IST)26 Jul 2020

    அதிமுக அரசு எத்தனை கொரோனா மரணங்களை மறைத்துள்ளதோ? - மு.க.ஸ்டாலின் கேள்வி

    “சென்னையில் 63% கொரோனா மரணங்களை மறைத்துள்ள அதிமுக அரசு, மற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்களை மறைத்து மோசடி செய்திருக்கிறதோ? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    14:58 (IST)26 Jul 2020

    புதுச்சேரியில் மரத்தடியில் நடந்த பேரவை கூட்டத்தின் போது பணியில் இருந்த காவலருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது; காவலருக்கு தொற்று உறுதியானதால் சட்டப்பேரவை வளாகம் புதன்கிழமை வரை மூடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    14:56 (IST)26 Jul 2020

    வனத்துறையினரால் விவசாயி உயிரிழப்புக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் - மு.க. ஸ்டாலின்

    தென்காசியில் வனத்துறையினரால் விவசாயி உயிரிழந்த சம்பவத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    14:54 (IST)26 Jul 2020

    சிறுவர் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நபர் கைது

    கோவையில் சிறுவர் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாக சுனில்குமார் (41) என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    14:47 (IST)26 Jul 2020

    நடிகை வனிதா புகாரில் கைதான சூர்யா தேவிக்கும் கைது செய்த பெண் ஆய்வாளருக்கும் கொரோனா

    நடிகை வனிதா புகாரில் கைதான சூர்யா தேவிக்கும், கைது செய்த பெண் ஆய்வாளருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சூர்யாதேவி தலைமறைவாகி விட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    14:43 (IST)26 Jul 2020

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 347 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,143 ஆக அதிகரித்துள்ளது.

    14:34 (IST)26 Jul 2020

    செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12,272 ஆக அதிகரித்துள்ளது.

    13:42 (IST)26 Jul 2020

    பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ்.நியமனம்

    மாநில தேர்தல் ஆணைய செயலாளராக பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ்.நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த சுப்பிரமணியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    13:09 (IST)26 Jul 2020

    437 பேருக்கு பாதிப்பு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 437 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,201ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 222 பேர் உயிரிழந்துள்ளனர். 8,787 பேர் கு குணமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    12:42 (IST)26 Jul 2020

    கொரோனா மரணங்கள் - ஸ்டாலின் கேள்வி

    சென்னையிலேயே 63% மரணங்கள் கணக்கிடப்படாத நிலையில் மற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்களை, அரசு மறைத்திருக்கிறதோ? கொரோனா உயிரிழப்பு கணக்கீட்டில் உள்ள தவறுகளைத் திருத்துவதற்காக ஏற்கனவே கமிட்டிகள் அமைப்பதாகச் சொன்ன நிலையில் மீண்டும் ஒரு புது கமிட்டியை அமைக்க வேண்டியதன் அவசியம் என்ன?  என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    12:23 (IST)26 Jul 2020

    இலவசமாக முகக்கவசம்

    ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் விநியோகத்தை நாளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் நாளை முதல் இலவசமாக முகக்கவசம் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    12:17 (IST)26 Jul 2020

    சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரியாக பட்டியல்

    12:05 (IST)26 Jul 2020

    கொரோனாவுக்கு எதிரான போர் முடியவில்லை - பிரதமர் மோடி

    கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடியாத காரணத்தினால், மக்கள் முகக்கவசம் அணிந்து தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

    11:48 (IST)26 Jul 2020

    நாட்டின் நலனுக்கு எதிரான கருத்துகளை பரப்ப வேண்டாம்

    சமூக வலைதளங்களில் நாட்டின் நலனுக்கு எதிரான கருத்துகளை பரப்ப வேண்டாம் என்று மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    11:38 (IST)26 Jul 2020

    பாகிஸ்தான் இந்தியாவின் முதுகில் குத்தியது

    பாகிஸ்தானோடு நட்புறவையே இந்தியா விரும்பியது. ஆனால், பாகிஸ்தான் இயற்கையான குணத்தின் காரணமாக இந்தியாவை முதுகில் குத்தியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    11:19 (IST)26 Jul 2020

    கார்கில் ஹீரோக்களை நினைவுகூரத்தக்க தருணம்

    21 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் வெற்றி பெற்றது. அந்த போரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு காரணமான ஹீரோக்களை நாம் இன்றையநாளில் நினைவுகூர்வோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    11:03 (IST)26 Jul 2020

    பிரதமர் மோடி உரை

    பிரதமர் மோடி, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில், மக்களிடையே மான் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் உரையாற்றி வருகிறார். இன்று கார்கில் வெற்றி தினம் என்பதால் அதுகுறித்து பிரதமரின் உரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    10:47 (IST)26 Jul 2020

    177 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை

    இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 177 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை ஆகியுள்ளது.

    மண்டல வாரியான மது விற்பனை:

    மதுரை : ரூ. 40.75 கோடி

    திருச்சி: ரூ. 40.39 கோடி

    சேலம்: ரூ. 39.40 கோடி

    கோவை - ரூ. 35.90 கோடி

    சென்னை - ரூ. 20.82 கோடி

    10:22 (IST)26 Jul 2020

    13,85,522 ஆக அதிகரிப்பு

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,36,861லிருந்து 13,85,522ஆக உயர்ந்துள்ளது.  குணமடைந்தோர் எண்ணிக்கை 8,49,432லிருந்து 8,85,577ஆக அதிகரித்துள்ளது.உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,358லிருந்து 32,063ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    09:57 (IST)26 Jul 2020

    ராஜ்நாத் சிங் மரியாதை

    கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி இன்று 21-ம் ஆண்டு கார்கில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். .

    09:46 (IST)26 Jul 2020

    மதுரையில் 10 ஆயிரத்தை நெருங்குகிறது கொரரோனா பாதிப்பு

    மதுரையில் மேலும் 195 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 9,790 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 202 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.

    09:29 (IST)26 Jul 2020

    பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    சென்னையில் இன்று (ஜூலை 26), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. இந்நிலையில், பெட்ரோல் விலை 28வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் நேற்றைய விலையிலிருந்து 13 பைசா விலை அதிகரித்து, 78.86 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

    09:21 (IST)26 Jul 2020

    29ம் தேதி ஆலோசனை

    சென்னையை தொடர்ந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் கொரனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்தும் அதனை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக வரும் 29ம் தேதியன்று முதல்வர்பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

    Tamil nadu news today updates : மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தேவையான உதவியை செய்வதற்கு உத்தரவாதம் அளித்த, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தி.மு.க., மகளிர் அணி செயலர், கனிமொழி நன்றி தெரிவித்துள்ளார்.

    கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட இறப்புகள் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்யும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தலைமைச் செயலர் சண்முகம், கடிதம் அனுப்பி உள்ளார்..

    Tamil Nadu Corona Virus Edappadi K Palaniswami Modi Ayodhya Temple
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment