Advertisment

News Highlights: வட தமிழக மாவட்டங்களில் இன்று மழை

Tamil News: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News Highlights: வட தமிழக மாவட்டங்களில் இன்று மழை

Tamil News Today Live : தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

Advertisment

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் துவக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியில் ஓராண்டு வரை பிளாஸ்மா செல்களை சேமித்து வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது'' என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். பரமக்குடி எம்.எல்.ஏ., சதன் பிரபாகரன் பிளாஸ்மா தானம் அளித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு செலுத்தும் முறை வெற்றி அடைந்துள்ளது. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 26 நபர்களுக்கு சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி அளிக்கப்பட்டு 24 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2.34 கோடி ரூபாய் செலவில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:08 (IST)23 Jul 2020

    புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்ததற்கு ஓபிஎஸ் கண்டனம்

    புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த சம்பவத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணைமுதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர் செல்வம், தலைவர்களின் சிலைகளை அவமதிப்போர் மீது புதுச்சேரி அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    20:16 (IST)23 Jul 2020

    தம்பிதுரை, ஜி.கே.வாசன் மனிதவள மேம்பாட்டுத்துறை நிலைக்குழு உறுப்பினர்களாக நியமனம்

    மாநிலங்களவை உறுப்பினர்களாக பொறுப்பேற்ற அதிமுக மாநிலங்களவை எம்.பி. தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நிலைக்குழுவில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    19:25 (IST)23 Jul 2020

    ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமிக்க ஆவின் திட்டம்

    கொரோனா காலத்தில் வேலையிழந்து நிற்பவர்களின் வாழ்வாதாரம் காக்க, ஆட்டோ, டாக்சி உரிமையாளர்கள், ஓட்டுநர்களுக்கு வருவாய் அளிக்கும் வகையில், நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமிக்க ஆவின் புதிய திட்டம் அறிவித்துள்ளது.

    19:16 (IST)23 Jul 2020

    கள்ளக்குறிச்சியில் மணலூர்பேட்டையில் 2 சிறுமிகள் உயிரிழப்பு

    கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர் பேட்டை அருகே பழுதடைந்த காருக்குள் விளையாடிய 2 சிறுமிகள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

    19:13 (IST)23 Jul 2020

    ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் மூலம் நடமாடும் பால்வண்டி ஆவின் புதிய முயற்சி

    சென்னையில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களை நடமாடும் பால் விற்பனை முகவர்களாக நியமித்து பால் விற்பனை செய்ய ஆவின் புதிய முயற்சியை அறிவித்துள்ளது.

    18:12 (IST)23 Jul 2020

    தூத்துக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி

    தூத்துக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் என 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    18:10 (IST)23 Jul 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று 88 உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    17:28 (IST)23 Jul 2020

    கொரோனா பாதிப்பில் குணமடைந்தேன் என்பது தவறானது - அமிதாப் பச்சன் மறுப்பு

    பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாதிப்பு நெகடிவ் என்று வந்துள்ளது. அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார் என்று செய்திகள் வெளியான நிலையில் அதுதவறான செய்தி என்று அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    16:59 (IST)23 Jul 2020

    302 பேருக்கு கொரோனா

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 302 பேருக்கு கொரோனா - பாதிப்பு 10,797ஆக உயர்வு

    இதுவரை 7,761 பேர் குணமடைந்துள்ளனர் - 210 பேர் உயிரிழப்பு

    16:59 (IST)23 Jul 2020

    எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு

    புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிப்பு

    * காவித்துண்டு அணிவிக்கப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்

    16:58 (IST)23 Jul 2020

    ஆலயத்திருவிழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும்

    தூத்துக்குடி பனியமாதா ஆலயத்திருவிழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என அறிவிப்பு

    * பனிமய மாதா பேராலய விழா ஜூலை 26 முதல் ஆக.5ஆம் தேதி வரை நடைபெறுகிறது

    - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

    16:58 (IST)23 Jul 2020

    75% மதிப்பெண் அவசியம்

    JEE Main தேர்வுடன் 12ஆம் வகுப்பு தேர்வில் 75% மதிப்பெண் அவசியம் என்ற விதியில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    16:34 (IST)23 Jul 2020

    ரூ.1 லட்சம் நிவாரணம்

    புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்

    கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ரூ.700 வழங்கப்படும்

    புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

    15:55 (IST)23 Jul 2020

    மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

    கமல்ஹாசன் வீட்டில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டிய விவகாரம்

    - சென்னை மாநகராட்சிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

    15:30 (IST)23 Jul 2020

    விலை ரூ.39 ஆயிரத்தை நெருங்குகிறது

    இதுவரை இல்லாத வகையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.39 ஆயிரத்தை நெருங்குகிறது

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.38,776க்கு விற்பனை

    15:30 (IST)23 Jul 2020

    இ-பாஸ் எடுத்தார் ரஜினிகாந்த்

    சென்னையில் இருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு இன்று செல்வதற்கு இ-பாஸ் எடுத்தார் ரஜினிகாந்த்

    மருத்துவ காரணங்களுக்காக செல்வதாக இ-பாஸில் குறிப்பிடப்பட்டுள்ளது

    15:05 (IST)23 Jul 2020

    தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம்

    தமிழகத்தில் தற்போது இடைத் தேர்தல் நடத்தும் சாத்தியம் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு, தற்போது இடைத் தேர்தல் நடத்தும் சூழல் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட இந்த 2 தொகுதிகளுக்கும், தேர்தல் நடத்தி முடிக்க வேண்டிய 6 மாத கால அவகாசம், செப்டம்பர் 7ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் இந்த விளக்கத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    15:04 (IST)23 Jul 2020

    191 பேருக்கு கொரோனா

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மேலும் 191 பேருக்கு கொரோனா - பாதிப்பு 4,634ஆக உயர்வு

    இதுவரை 2,489 பேர் குணமடைந்துள்ளனர் - 39 பேர் உயிரிழப்பு

    15:04 (IST)23 Jul 2020

    338 பேருக்கு கொரோனா

    விருதுநகர் மாவட்டத்தில் இன்று மேலும் 338 பேருக்கு கொரோனா - பாதிப்பு 4,625ஆக உயர்வு

    இதுவரை 2,181 பேர் குணமடைந்துள்ளனர் - 34 பேர் உயிரிழப்பு

    14:41 (IST)23 Jul 2020

    நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி மீது வனிதா புகார்

    நடிகை வனிதா விஜயகுமாரின் திருமணம் குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் பலரும் அதுகுறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வந்தனர். இதனிடையே அவதூறு பரப்பியதாக சூர்யா தேவி என்ற பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர். நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி மற்றும் நடிகர் நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை பரப்புவதாக வனிதா விஜயகுமார் வடபழனி காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார்.

    14:40 (IST)23 Jul 2020

    சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனோ நோயாளிகள் 16 பேர் உயிரிழப்பு

    சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனோ நோயாளிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேர், கீழ்பாக்கம் மற்றும் ஓமாந்தூரார் மருத்துவமனையில் தலா 4 பேர் தனியார் மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    14:28 (IST)23 Jul 2020

    3 மாதங்களில் முழுமையாக தெரியவரும்

    கோவாக்சின் மருந்தின் செயல்பாடு 3 மாதங்களில் முழுமையாக தெரியவரும்

    பரிசோதனையில் நல்ல முடிவு கிடைக்கும் பட்சத்தில் விரைவில் கோவாக்சின் பயன்படுத்துவது பற்றி முடிவு

    - எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர்

    14:11 (IST)23 Jul 2020

    எடுத்த நடவடிக்கை என்ன?

    திருத்தணிகாசலம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து மீது எடுத்த நடவடிக்கை என்ன?

    மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    முதலமைச்சரை பற்றி அவதூறாக சமூக ஊடகங்களில் விமர்சிப்பது சரியா?"

    குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட திருத்தணிகாசலத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

    சித்த மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறுவதை வரவேற்கிறோம். மருத்துவ உதவியாளர்களாக இருப்பவர்களை எல்லாம் மருத்துவர்களாக கருத முடியாது - நீதிபதிகள்

    14:01 (IST)23 Jul 2020

    மறைக்க வேண்டிய அவசியம் இல்லை

    கொரோனா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

    13:49 (IST)23 Jul 2020

    இறுதியாண்டு செமஸ்டர் ரத்து செய்யாதது ஏன்? - உயர்கல்வித்துறை வட்டாரம் விளக்கம்

    மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படவில்லை என உயர்கல்வித்துறை வட்டாரம் விளக்கம் அளித்துள்ளது. விலக்கு அளிக்கக் கூடாது என ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடக்கும் எனவும், ஆன்லைன் வழியில் நடக்குமா, நேரடியாக நடக்குமா என்பதை அறிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    13:42 (IST)23 Jul 2020

    சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாக புகார் - நடிகை வனிதா புகாரின் பேரில் சூர்யா தேவி கைது

    நடிகை வனிதா - பீட்டர் பால் திருமணத்தை ஆபாசமாக விமர்சித்து தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு வந்ததாக, சூரிய தேவி என்கிற பெண் மீது வனிதா புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய போது சூரிய தேவி என்ற பெண் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து வீடியோக்களை நீக்கம் செய்ய வேண்டும் என வனிதா கேட்டுக்கொண்டார். ஆனால் ஏற்கனவே பதிவிட்ட வீடியோக்களை அழிக்காமலும் மேலும் புதிது புதிதாக வனிதா தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு வந்ததால், வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சூரிய தேவி என்கிற பெண்ணை கைது செய்துள்ளனர்.

    13:37 (IST)23 Jul 2020

    முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் – ஸ்டாலின்

    கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். மரணத்தை மறைப்பது எவ்வளவு மோசமான விஷயம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    13:12 (IST)23 Jul 2020

    புரிந்துணர்வு ஒப்பந்தம்

    தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.5,137 கோடியில் 16 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    12:51 (IST)23 Jul 2020

    9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், தேனி, திண்டுக்கல்  உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை வட தமிழக மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதியில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

    12:25 (IST)23 Jul 2020

    இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை

    கொரோனா சூழலால் மக்கள் நலன் கருதி, தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு செப்.7 வரை இடைத்தேர்தல் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    12:21 (IST)23 Jul 2020

    கொரோனாவுக்கு எதிரரான நமது போராட்டம் தொடர்கிறது - பிரதமர் மோடி

    கொரோனா தொற்றிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை அதற்கு எதிராக நாம் போராட வேண்டி உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    11:49 (IST)23 Jul 2020

    பா.ஜ., தலைவர் முருகன் பேட்டி

    சமூக நீதி பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை. அம்பேத்கரை போற்றும் வகையில் பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கந்த சஷ்டி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தாமதமாக கருத்து தெரிவித்து உள்ளதாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

    11:27 (IST)23 Jul 2020

    காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு உடல்நலக்குறைவு

    சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    11:04 (IST)23 Jul 2020

    சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் பட்டியல்

    10:47 (IST)23 Jul 2020

    3 ஆயிரத்தை தாண்டியது கொரோனா

    நெல்லை மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 3,123 ஆக அதிகரித்துள்ளது.

    10:35 (IST)23 Jul 2020

    பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    சென்னையில் இன்று (ஜூலை 23), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.60 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், பெட்ரோல் விலை 25வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையும் 4வது நாளாக இன்று மாற்றம் செய்யப்பட்டவில்லை.

    10:17 (IST)23 Jul 2020

    கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து

    கலை , அறிவியல் இளநிலை படிப்பில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வும், முதுநிலை படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்படுகிறது.பாலிடெக்னிக் மாணவர்களுக்கான பட்டய தேர்வும் ரத்து செய்யப்படுகிறது.எம்.சி.ஏ., படிக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

    publive-image

    Tamil nadu news today updates : கந்த சஷ்டி கவசம் எதிர்ப்பு விவகாரத்தில், ஹிந்து மக்களின் ஆதரவு ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு கிடைக்க விடாமல், ஆன்மிக அரசியல் வாயிலாக, அறுவடை செய்ய, நடிகர் ரஜினி திட்டமிட்டுள்ளதாக, அவரது ரசிகர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    சீனாவுடனான எல்லைப் பிரச்னை முடிவுக்கு வராத நிலையில், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், கடற்படையின் முக்கிய போர் விமானங்கள், லடாக் எல்லை மற்றும் வடக்கு பிராந்தியத்தில் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.

    Tamilnadu Corona Virus Narendra Modi Edappadi K Palaniswami
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment