Advertisment

Tamil News Today : சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு - முதல்வர் உத்தரவு

Tamil News updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CM Edappadi Palaniswami, coronavirus

CM Edappadi Palaniswami

Tamil News Today : தமிழகம் முழுவதும், மேலும், ஒரு மாதத்திற்கு, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை முதல், 15 நாட்களுக்கு, பஸ் போக்குவரத்து கிடையாது. இம்மாதம் முழுவதும், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, முழு முடக்கம் அமல்படுத்தப்படும். மற்ற நாட்களில், டீக்கடை, உணவகங்கள் செயல்படும். நோய் பரவல் அதிகம் உள்ள, ஐந்து மாவட்டங்களில், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

டிக்டாக், ஷேர் இட், யூ.சி., பிரவுசர்' உள்ளிட்ட, 59 சீன செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. காஷ்மீர் மாநிலம், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த, 15ம் தேதி, சீன ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய வீரர்கள், 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்த மோதலைத் தொடர்ந்து இருநாட்டு எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ள சீன செயலிகளுக்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசிடம், உளவு அமைப்புகள் பரிந்துரைத்தன. இது தொடர்பாக, பலகட்ட ஆலோசனைகள் நடந்தன. இந்நிலையில், 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:56 (IST)30 Jun 2020

    சாத்தான்குளம் டிஎஸ்பியாக ராமநாதன் நியமனம்

    சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளராக ராமநாதனை நியமித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.எஸ்.பியாக கோபி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    21:23 (IST)30 Jun 2020

    முழு ஊரடங்கு: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு - முதல்வர் உத்தரவு

    தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    20:12 (IST)30 Jun 2020

    சாத்தான்குளம் சம்பவம்: நீதியை நிலைநாட்ட போராடி வரும் மாஜிஸ்திரேட், பெண் காவலருக்கு வாழ்த்துகள் - கமல்ஹாசன்

    சாத்தான்குளம் சம்பவத்தில் நீதியை நிலைநாட்ட போராடி கொண்டிருக்கும் மாஜிஸ்திரேட் மற்றும் சாட்சி சொன்ன பெண் காவலருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணைக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதிமன்றத்திற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    20:12 (IST)30 Jun 2020

    சாத்தான்குளம் சம்பவம்: நீதியை நிலைநாட்ட போராடி வரும் மாஜிஸ்திரேட், பெண் காவலருக்கு வாழ்த்துகள் - கமல்ஹாசன்

    சாத்தான்குளம் சம்பவத்தில் நீதியை நிலைநாட்ட போராடி கொண்டிருக்கும் மாஜிஸ்திரேட் மற்றும் சாட்சி சொன்ன பெண் காவலருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணைக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதிமன்றத்திற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    20:04 (IST)30 Jun 2020

    சித்த மருத்துவரின் இம்ப்ரோ மருந்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

    சித்த மருத்துவரின் இம்ப்ரோ மருந்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இந்த மருந்து மத்திய சித்தா மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசுத் தரப்பில் மதுரைக் கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    19:31 (IST)30 Jun 2020

    வேலூரில் மேலும் ஒரு மாதம் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

    வேலூரில் மேலும் ஒரு மாதம் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வேலூரில் நாளை முதல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் செயல்படும்.

    வேலூரில் இறைச்சிக் கடைகள் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய நாட்களில் மட்டுமே செயல்படும்.

    துணிக்கடைகள், நகைக்கடைகள் ஆகியவை ஞாயிறு, செவ்வாய், வியாழன் சனி ஆகிய 4 நாட்கள் மட்டுமே செயல்படும்.

    மருந்துகடைகள், பெட்ரோல் பங்குகள் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து நாட்களும் வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    18:45 (IST)30 Jun 2020

    சென்னையில் மட்டும் இன்று 2,393 பேருக்கு கொரோனா தொற்று

    சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னயில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58,327 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை அடுத்து அதிகப்பட்சமாக மதுரை மாவட்டத்தில் 257 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 160 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 153 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90 பேருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 88 பேருக்கும் தேனி மாவட்டத்தில் 75 பேருக்கும் கடலூர் மாவட்டத்தில் 65 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    18:07 (IST)30 Jun 2020

    தமிழகத்தில் இன்று புதிதாக 3,943 பேருக்கு கொரோனா; மொத்த எண்ணிக்கை 90,000ஐ தாண்டியது

    தமிழகத்தில் மேலும் 3,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 90,167ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    17:28 (IST)30 Jun 2020

    அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மியாட் மருத்துவமனை அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளது.

    17:14 (IST)30 Jun 2020

    முதலமைச்சர் உத்தரவு

    மும்பை தேர்வு மையத்தில் பதிவு செய்த 69 பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி

    * 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் முதலமைச்சர் உத்தரவு

    17:14 (IST)30 Jun 2020

    இயல்பை மீறியதாக உள்ளது

    பிரதமரின் உரை கற்பனையாகவும் இயல்பை மீறியதாகவும் உள்ளது

    - கே.எஸ்.அழகிரி

    17:14 (IST)30 Jun 2020

    மக்களுக்கு வழிகாட்டியுள்ளார்

    ஒரு பொறுப்புள்ள குடும்பத்தலைவன் போன்று பிரதமர் மோடி மக்களுக்கு வழிகாட்டியுள்ளார்

    - பொன்.ராதாகிருஷ்ணன்

    16:48 (IST)30 Jun 2020

    காவல் ஆணையருக்கு உத்தரவு

    சென்னை அண்ணாநகரில் மாத்திரை வாங்க சென்றவரை தாக்கி தரதரவென இழுத்துச் சென்ற விவகாரம்

    ஊரடங்கை மீறியதற்காக நடவடிக்கை எடுப்பதற்கு பதில் காவல் நிலையம் அழைத்து செல்வது ஏன்?

    அத்துமீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

    நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

    * காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்க காவல் ஆணையருக்கு உத்தரவு

    16:47 (IST)30 Jun 2020

    உள்ளூர் பொருட்களை வாங்குவோம்

    தற்சார்பு பாரத திட்டத்தை செயல்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்

    * உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் அறைகூவல்

    16:36 (IST)30 Jun 2020

    தலைமைக் காவலர் ரேவதியிடம் மீண்டும் விசாரணை

    சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலர் ரேவதியிடம் மீண்டும் விசாரணை

    சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் மீண்டும் விசாரணையை தொடங்கினார்

    தலைமைக் காவலர் ரேவதி, சம்பவம் தொடர்பாக ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்தார்

    தமக்கு மிரட்டல் வரும் என்று ரேவதி தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் விசாரணை

    விசாரணை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுவதாக தகவல்

    16:32 (IST)30 Jun 2020

    நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

    இன்று, ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்களை அரசாங்கத்தால் வழங்க முடிகிறது என்றால், விவசாயிகள் மற்றும் நேர்மையான வரி செலுத்துவோர் என இரு பிரிவினருக்கு தான் இந்த பெருமை சேரும்;

    என் இதயப்பூர்வ நன்றியை இவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்

    - பிரதமர் மோடி

    16:31 (IST)30 Jun 2020

    ரூ,50,000 கோடி செலவில் திட்டங்கள்

    கிராமப் புறங்களில், வளர்ச்சியை ஏற்படுத்த ரூ,50,000 கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்

    புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கல்யாண் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன

    - பிரதமர் மோடி

    16:28 (IST)30 Jun 2020

    புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பலன்

    ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பலன் தந்துள்ளது

    சரியான நேரத்தில் ஊரடங்கு அறிவித்ததால் லட்சக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டனர்

    - பிரதமர் மோடி உரை

    16:27 (IST)30 Jun 2020

    நவம்பர் வரை இலவசமாக உணவு தானியங்கள்

    நவம்பர் மாதம் வரை இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும்

    பிரதமர் கரீப் கல்யாண் திட்டம் நவம்பர் வரை நீட்டிப்பு; அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேசன் பொருட்கள் நவம்பர் வரை இலவசமாக வழங்கப்படும் - பிரதமர் மோடி

    16:23 (IST)30 Jun 2020

    சட்டத்தை விட மேலானவர் யாரும் இல்லை

    இது 130 கோடி மக்களின் உயிர்களை காப்பாற்றும் நடவடிக்கையாகும்.

    ஊராட்சி தலைவரோ, பிரதமரோ, இந்தியாவின் சட்டத்தை விட மேலானவர் யாரும் இல்லை:

    - பிரதமர் மோடி

    16:21 (IST)30 Jun 2020

    உச்சக்கட்ட முன்னுரிமை

    யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வது தான் பொது முடக்கத்தின் போது உச்சக்கட்ட முன்னுரிமையாக இருந்தது.

    அந்த வகையில், பொது முடக்கம் அறிவிக்கப்பட்டவுடன், பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தை அரசு கொண்டு வந்தது

    - பிரதமர் மோடி

    16:19 (IST)30 Jun 2020

    மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடலாம்

    சிறிய தவறுக்கு கூட மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடலாம்

    இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்திற்காக 90,000 கோடி செலவிடப்படும்; பிரதமரின் வறுமை ஒழிப்பு திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது

    - பிரதமர் மோடி

    16:18 (IST)30 Jun 2020

    வங்கி கணக்கில் ரூ.31,000 கோடி

    ஊரடங்கு காலத்தில் 80 கோடி மக்களுக்கு மேல் ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன; ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.31,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

    - பிரதமர் மோடி

    16:17 (IST)30 Jun 2020

    பிரதமர் மோடி பெருமிதம்

    இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்

    ஏழைகள் உணவின்றி தவிக்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது; நாட்டில் 80 கோடி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன

    16:16 (IST)30 Jun 2020

    கொரோனாவும் கட்டுக்குள்...

    உரிய நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கொரோனாவும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது

    * மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் வேண்டுகோள்

    * 2 அடி இடைவெளி மற்றும் முக கவசம் அணிவது போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்

    16:15 (IST)30 Jun 2020

    அதிகரிக்கும் அலட்சியம்

    கொரோனா பெரும்தொற்றுக்கு எதிரான போரில் நாம் தளர்வு விதிமுறை 2.0 க்குள் நுழைந்திருக்கிறோம்.

    அதே சமயம், தளர்வு விதிமுறைகள் 1.0 அமலாக்கப்பட்டதிலிருந்து தனிப்பட்ட மற்றும் சமூக நடத்தையில் அதிகரிக்கும் அலட்சியத்தையும் நாம் பார்க்கிறோம்

    - பிரதமர் மோடி

    16:10 (IST)30 Jun 2020

    எச்சரிக்க வேண்டியது அவசியமாகிறது

    "இந்த தளர்வு நேரத்தில் சிறிய தவறுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்; விதிகளை மீறுவோரை அதிகம் எச்சரிக்க வேண்டியது அவசியமாகிறது!"

    - பிரதமர் மோடி உரை!

    16:10 (IST)30 Jun 2020

    UNLOCK 2.0 தொடங்கிவிட்டது

    பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை.

    கொரோனாவை எதிர்த்து போராடும் சூழலில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது;

    * இந்த காலத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்டவை வரும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்

    பொதுமுடக்கத்தின் 2ம் கட்டமான UNLOCK 2.0 தொடங்கிவிட்டது

    - பிரதமர் மோடி

    16:08 (IST)30 Jun 2020

    பிரதமர் மோடி உரை

    டெல்லியில் இருந்து காணொலி மூலம் இன்னும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். 

    16:02 (IST)30 Jun 2020

    வட தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது, மேலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடக்கு அந்தமான், தென்கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய கர்நாடகா கேரளா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளார்கள்.

    15:51 (IST)30 Jun 2020

    நெல்லை சரக டிஐஜியிடம் ஒப்படைப்பு

    சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கு குறித்த ஆவணங்கள் நெல்லை சரக டிஐஜியிடம் ஒப்படைப்பு

    * மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் விசாரணை அறிக்கை, முதல்நிலை உடற்கூராய்வு அறிக்கை ஒப்படைப்பு

    15:43 (IST)30 Jun 2020

    காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே

    திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் உள்ள டீ கடைகளுக்கு காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி!

    -மாவட்ட ஆட்சியர்

    15:28 (IST)30 Jun 2020

    நகராட்சி ஆணையருக்கு கொரோனா

    திருவேற்காடு நகராட்சி ஆணையர் செந்தில் குமரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

    * ஆணையருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடல்

    15:11 (IST)30 Jun 2020

    28 போலீசாருக்கு கொரோனா

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 மருத்துவர்கள், 28 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது

    * புதிதாக 152 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5,394 ஆக உயர்வு

    15:11 (IST)30 Jun 2020

    புதிய ஆட்சியர் நியமனம்

    கடலூர் மாவட்ட ஆட்சியராக சந்திரசேகர் சகாமுரியை நியமித்து தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு

    * கடலூர் ஆட்சியராகவுள்ள அன்புச்செல்வன் இன்றுடன் ஓய்வுபெறுவதையொட்டி புதிய ஆட்சியர் நியமனம்

    14:52 (IST)30 Jun 2020

    சேலத்தில் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 58 பேருக்கு கொரோனா

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பண்ணவாடி கிராமத்தில் செல்வம் என்பவர் கடந்த 21-ந்தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அரசின் ஊரடங்கு விதிமுறைப்படி துக்க நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். ஆனால் அவரது இறுதி சடங்கில் அரசின் விதி முறைகளை மீறி நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்ற 2 மருத்துவர்கள் உள்ளிட்ட 4 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து கிராமம் முழுவதும் கொரோனா பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொளத்தூர் ஒன்றியம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஒரே கிராமத்தில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    14:46 (IST)30 Jun 2020

    மீண்டும் விசாரணை

    தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் நேரில் சென்று விசாரணை.

    14:38 (IST)30 Jun 2020

    வங்கதேசத்தில் 2 படகுகள் மோதி கோர விபத்து: 32 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

    வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள சதர்காட், மிகப் பெரிய நதி துறைமுகமாக விளங்கி வருகிறது. இந்த ஆற்றுத் துறைமுகம் வழியாக வணிகப்போக்குவரத்து சேவைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை வங்கதேசத்தின் முன்ஷிகஞ்ச் என்ற பகுதியிலிருந்து தலைநகர் டாக்காவுக்கு மார்னிங் என்ற படகு சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்து. அப்போது படகு சதர்காட்டில் இருந்து ஒரு மீட்டர் தொலைவில் உள்ள ஃபராஷ்கஞ்சில் பகுதியை அடைந்த போது எதிரே வந்த மொயூர்-2 என்ற பெயர்கொண்ட படகு 'மார்னிங்' மீது பலாமாக மோதியது. இதில் நிலைத்தடுமாறிய மார்னிங் படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணம் செய்த 32 பேர் உயிரிழந்தனர்.

    14:10 (IST)30 Jun 2020

    2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

    மாஜிஸ்திரேட் மிரட்டல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

    * ஜூலை 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்

    * இன்று மதியம் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையில் ஒத்திவைப்பு

    14:04 (IST)30 Jun 2020

    கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம்

    தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது

    - உயர்நீதிமன்ற மதுரை கிளை

    13:45 (IST)30 Jun 2020

    தந்தை-மகனை விடிய விடிய போலீசார் லத்தியால் அடித்தது அம்பலம்

    ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விடிய விடிய போலீசார் லத்தியால் அடித்தனர் என நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.உயர்நீதிமன்ற பதிவாளருக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அனுப்பிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    13:06 (IST)30 Jun 2020

    தென்மண்டல ஐ.ஜி. ஆக முருகன் நியமனம்

    தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் தென்மண்டல ஐ.ஜி. ஆக முருகன் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    12:44 (IST)30 Jun 2020

    தூத்துக்குடி எஸ்.பி மாற்றம்

    தூத்துக்குடி எஸ்.பி அருண் பால கோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் தூத்துக்குடியின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    12:39 (IST)30 Jun 2020

    சி.பி.சி.ஐ.டி. விசாரணை

    ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக நெல்லை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. அனில்குமார் இன்று விசாரணையை துவக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    12:36 (IST)30 Jun 2020

    பயனாளர்களின் தகவல்களை எந்த நாட்டு அரசுடனும் பகிரவில்லை - டிக்டாக் விளக்கம்

    இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், டிக் டாக் தடை தொடர்பாக அந்நிறுவனத்தின் இந்திய தலைவர் நிகில் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டிக் டாக்கை 14 இந்திய மொழிகளில் கிடைக்கச் செய்து, இணையத்தை ஜனநாயகப்படுத்தியுள்ளோம். கோடிக்கணக்கான பயனர்கள், கலைஞர்கள், கதை சொல்லிகள், கல்வியாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இதனை சார்ந்துள்ளனர். அவர்களில் பலர் முதல் முறை இணைய பயனர்கள். இந்திய சட்டத்தின் கீழ் அனைத்து தனியுரிமை தரவு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கும் டிக் டாக் தொடர்ந்து இணங்குகிறது. மேலும் இந்தியாவில் உள்ள எங்கள் பயனர்களின் எந்த தகவலையும் சீன அரசு உட்பட எந்த வெளிநாட்டு அரசாங்கத்துடனும் பகிர்ந்து கொள்ளவில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

    12:02 (IST)30 Jun 2020

    தமிழக அரசு பதில்

    தமிழகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க மூத்த அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

    11:58 (IST)30 Jun 2020

    மக்களிடம் அத்துமீறியதாக 80 காவலர்கள் விடுவிப்பு

    சாத்தான்குளம் சம்பவத்தின் எதிரொலியாக, பொதுமக்களிடம் அத்துமீறியதாக 80 போலீசாரை காவல் நிலைய பணியில் இருந்து விடுவித்து திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

    11:24 (IST)30 Jun 2020

    உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 

    தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிபிஐ விசாரணை தொடங்கும்வரை நெல்லை டிஐஜி அல்லது சிபிசிஐடி விசாரிக்க இயலுமா? மதியம் 12 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    11:00 (IST)30 Jun 2020

    தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

    சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நீதிமன்ற உத்தரவின்படி தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். சாத்தான்குளம் காவல்நிலையம் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    10:55 (IST)30 Jun 2020

    சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் விவரம்

    சென்னையின் 4 மண்டலங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக அண்ணாநகரில் 2,946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தேனாம்பேட்டையில் 2,363 பேர், ராயபுரத்தில் 2,212 பேர், கோடம்பாக்கத்தில் 2,094 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    10:20 (IST)30 Jun 2020

    18 பேர் பலி

    சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை 8 மணி வரை 18 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

    ஓமந்தூரார் அரசு மருத்துவமனை- 4 பேர்

    கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை- 3 பேர்

    பலி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை- 9 பேர்

    ஸ்டான்லி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் தலா ஒருவர் பலி ஆகியுள்ளனர்.

    10:11 (IST)30 Jun 2020

    பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    சென்னையில் இன்று (ஜூன் 30), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 77.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    09:59 (IST)30 Jun 2020

    5,66,840 ஆக அதிகரிப்பு

    இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,66,840 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,34,822 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 16893 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Tamil nadu news today updates : டெல்லி அரசின், 'செரலாஜிக்கல் டெஸ்ட்' எனப்படும், குருதி நீரியல் பரிசோதனை முறையை, தமிழகத்திலும் கடைப்பிடிக்க, முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அவர்களுக்கான அனைத்து, 'ஸ்கிரீனிங்' பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். டாக்டர்களின் ஆலோசனைப்படி, மருத்துவமனைகளிலோ, கொரோனா தடுப்பு மையங்களிலோ அல்லது அவர்களின் இல்லங்களிலோ தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    Tamil Nadu Corona Virus Narendra Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment