Advertisment

News today updates: எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை - மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரம்

ரிசர்வ் வங்கி மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மதிப்பீட்டை 2019-20 ஆம் ஆண்டில் 6.9 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதமாகக் குறைத்துள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News Today Updates

News Today Updates

Tamil Nadu news today updates:எல்லைப் பாதுகாப்பின் தற்போதைய நிலை மற்றும் அதை மேலும் வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மதிப்பாய்வு செய்ய உயர் மட்டக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது.

பிரதான் மந்திரி உஜலா யோஜனாவின் கீழ், மோடி அரசு 36 கோடி எல்.ஈ.டி பல்புகளை விநியோகித்து, 46,790 மில்லியன் கிலோவாட் ஆற்றலைப் பாதுகாத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மதிப்பீட்டை 2019-20 ஆம் ஆண்டில் 6.9 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதமாகக் குறைத்துள்ளது.

இது போன்ற முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லைவ் ப்ளாக்கை பின்தொடருங்கள்

Advertisment

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines: தமிழகம் மற்றும் சென்னையில் நடக்கும் முக்கிய சமூக நிகழ்வுகள், பெட்ரோல்/தங்கம் விலைகள், மற்றும் அரசியல் நிலவரங்களை கீழே காணலாம்.  



























Highlights

    22:14 (IST)05 Oct 2019

    63 லட்ச ரூபாய் அபராதம் வசூல்

    பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்த நிறுவனங்களிடம் 63 லட்ச ரூபாய் அபராதம் வசூல். சென்னையில் ஒரே நாளில், 680 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

    21:40 (IST)05 Oct 2019

    பார் கவுன்சில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

    சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு, அரசுப் பணியாளர் தேர்வாணையம், பார் கவுன்சில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    21:32 (IST)05 Oct 2019

    அரசு சார்பில் தான் கேட்கப்பட்டுள்ளது; அதிமுக கேட்கவில்லை

    பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பின் போது அவர்களை வரவேற்கும் வகையில் பேனர் வைக்க அனுமதி வழங்குமாறு அரசு சார்பில் தான் கேட்கப்பட்டுள்ளது; அதிமுக கேட்கவில்லை - அமைச்சர் செல்லூர் ராஜு

    21:26 (IST)05 Oct 2019

    4,450 சிறப்பு பேருந்துகளில் 2,86,775 பயணிகள்

    ஆயுத பூஜைக்காக நேற்று மற்றும் இன்று இயக்கப்பட்ட 4,450 சிறப்பு பேருந்துகளில் 2,86,775 பயணிகள் பயணித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    20:47 (IST)05 Oct 2019

    மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

    இந்தியா வங்கதேசம் இடையே மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    வங்கதேசத்துடன் ஒரே ஆண்டில் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்.

    20:46 (IST)05 Oct 2019

    மீண்டும் திகார் சிறையில்...

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார் ப.சிதம்பரம்

    19:52 (IST)05 Oct 2019

    49 பேர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது சரியல்ல - நடிகை ரோகினி

    இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது சரியல்ல என நடிகை ரோகிணி பேட்டி அளித்துள்ளார்.

    19:49 (IST)05 Oct 2019

    தொழில்துறை உள்கட்டமைப்புக் கழகத் தலைவரான ரோஜா

    ஆந்திர மாநில தொழில்துறை உள்கட்டமைப்புக் கழகத் தலைவராக நடிகை ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாதம் 2 லட்சம் ரூபாய் ஊதியம் மற்று படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    19:34 (IST)05 Oct 2019

    ப.சிதம்பரத்துக்கு வயிற்று வலி

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திஹார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திற்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டும் இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

    19:12 (IST)05 Oct 2019

    நடிகை நிலானியை போனில் மிரட்டியதாக புகார் : வெளிநாட்டுப் பொறியாளர் கைது

    சென்னையை அடுத்த மதுரவாயல், அஷ்டலட்சுமி நகரில், சின்னத்திரை நடிகை நிலானி, கணவரை பிரிந்து இரண்டு குழந்தை களுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில்  ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை, போலீஸ் உடையில் பேசி, ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனிடையே தனது காதலருடன் ஏற்பட்ட மோதலால் தற்கொலைக்கு முயன்று அதில் இருந்தும் நிலானி மீண்டு வந்தார். அதன் பின், வெளிநாட்டில் பொறியாளராக பணியாற்றி வரும் வேலூரைச் சேர்ந்த மஞ்சுநாதன் என்பவருடன் அவர் நெருக்கமாக பழகியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் மஞ்சு நாதனுக்கு திருமணமானது தெரிய வந்ததையடுத்து, நிலானி விலகி சென்றுள்ளார். ஆத்திரமடைந்த மஞ்சுநாதன், செலவு செய்த பணத்தை திருப்பி தருமாறு, நிலானியை செல்போனில், ஆபாசமாக பேசி தொந்தரவு செய்தாக கூறப்படுகிறது. இது குறித்து நிலானி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனிடேயே வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய மஞ்சுநாதனை போலீசார் கைது செய்தனர். 

    19:10 (IST)05 Oct 2019

    திமுகவில் இணைந்த தேமுதிகவினர்

    திருவள்ளூர் தெற்கு மாவட்ட தேமுதிக பொதுக்குழு உறுப்பினர் ரவி உள்ளிட்டோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

    18:35 (IST)05 Oct 2019

    கீழடி 3ஆம் கட்ட அகழாய்வு அறிக்கையை உடனே வெளியிடுக - திருமாவளவன்

    கீழடி 3ஆம் கட்ட அகழாய்வு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். கீழடி அகழாய்வில் கிடைத்தவற்றை பாதுகாக்க மதுரையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

    18:30 (IST)05 Oct 2019

    தமிழக அதிகாரிகள் மாமல்லபுரத்தில் ஆய்வு

    பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பையொட்டி மத்திய குழுவினர், தமிழக அதிகாரிகள் மாமல்லபுரத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்

    18:28 (IST)05 Oct 2019

    கடிப்பதற்கு முன்பு உள்ளாட்சித் துறை கொசு, கடித்த பிறகுதான் சுகாதாரத்துறை கொசு - விஜயபாஸ்கர்

    தமிழகத்தில், நூறு எண்ணிக்கையில் மட்டுமே டெங்கு பாதித்துள்ளதாக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் கூடுதல் மகளிர் நீதிமன்ற திறப்பு விழாவில் பேசியஅவர், சிங்கப்பூர் மற்றும் தெலங்கானா மாநிலம் ஆகிய இடங்களில் டெங்கு பாதிப்பு பத்தாயிரம் அளவில் உள்ளதாகவும், தமிழகத்தில் நூறு என்ற அளவில் கட்டுக்குள் உள்ளதாகவும் கூறினார். கொசு கடிப்பதற்கு முன்பு அது உள்ளாட்சித் துறை கொசு என்றும், கடித்த பிறகுதான் அது சுகாதாரத்துறை கொசு என்றும் பேசியது கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    18:27 (IST)05 Oct 2019

    Trichy Robbery - 8ம் தேதி வரை நீதிமன்ற காவல்

    திருச்சி நகைக்கடை கொள்ளை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மற்றும் கனகவள்ளி ஆகியோருக்கு 18ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

    18:26 (IST)05 Oct 2019

    வைகோவை வைத்து ஸ்டாலின் ஆழம் பார்க்கிறார் - கராத்தே தியாகராஜன்

    ரஜினியின் ஆன்மிக அரசியல் பாணியை வைகோவை வைத்து ஸ்டாலின் ஆழம் பார்ப்பதாக கராத்தே தியாகராஜன் கருத்து கூறியுள்ளார். சென்னை நங்கநல்லூரில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடந்த மரம் நடும் விழாவில் அவர் கலந்து கொண்டார். பின்னர் பேசிய கராத்தே தியாகராஜன், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நல்ல முயற்சி எடுத்து வரும் ரஜினி, சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பு ஏற்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.

    18:21 (IST)05 Oct 2019

    எய்ம்ஸ் மருத்துவமனையில் சிதம்பரம்

    திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    17:57 (IST)05 Oct 2019

    வைரமுத்து ட்வீட்!

    தேச துரோக வழக்கில் 49 கலைஞர்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் கவிஞர் வைரமுத்து ”தேசத்துரோகமாகுமா?’ என்ற தலைப்பில் ட்விட்டர் கணக்கில் வெளியிட்டிருக்கும் ட்வீட் வைரலாகி வருகிறது.

    17:34 (IST)05 Oct 2019

    லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு!

    திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை வழக்கில் கைதான மணிகண்டன், சுரேஷ் தாயார் கனகவல்லி ஆகியோரை திருச்சி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்  காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.   ஏற்கனவே தேடப்பட்டு வந்த  கொள்ளையன் சுரேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்  சுரேஷையும் நீதிபதி முன் ஆஜர்படுத்த காவல் துறையினர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, 

    17:25 (IST)05 Oct 2019

    அன்புமணி வேண்டுகோள்!

    யார் வேண்டுமானலும் பிரதமருக்கு கடிதம் எழுதலாம் என்றும்,  இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.  தமிழக முழுவதும் கலைஞர்களின் மீதான் தேச துரோக வழக்குக்கு எதிர்ப்பு குரல்கள் ஒலித்து வருகின்றன. 

    17:01 (IST)05 Oct 2019

    பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்!

    இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது  தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதில், மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இல்லாத விஷயங்களை பெரிதாக்குவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும்  செய்தியாளரகளிடம் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

    16:54 (IST)05 Oct 2019

    வைகோ கண்டனம்!

    சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில், கருத்து உரிமையை பறிப்பதும், மாற்றுக் கருத்துக் கூறுவோரை தேச துரோகிகளாக சித்தரிப்பதும் முறையல்ல என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

    16:16 (IST)05 Oct 2019

    பசுமை பட்டாசுகள் அறிமுகம்!

    டெல்லியில் பசுமை பட்டாசுகளை அறிமுகப்படுத்தினார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்.  கடந்தாண்டு சுற்றுசூழலை பாதுகாக்க உச்சநீதிமன்றம் இனிமேல் தீபாவளி பண்டிகை காலங்களில் பசுமை பாட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் விற்பனை செய்ய வேண்டும் என அதிரடி உத்தவை பிற்பித்தது. இருந்த போதும் கடந்த வருடம் பசுமை பட்டாசுகள் குறித்து பலருக்கும் தெரியவில்லை.  இந்நிலையில் இந்த வருடம் பசுமை பட்டாசுகளை மக்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிமுகப்படுத்தினார். 

    16:05 (IST)05 Oct 2019

    கொள்ளையன் சுரேஷ் கைது!

    திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த சுரேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில்  தலைமறைவான கொள்ளையன் சுரேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.கைதான சுரேஷ்,  மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரையும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. 

    16:00 (IST)05 Oct 2019

    நாங்குனேரியில் பாஜக குழு!

    நாங்குநேரிக்கு பாஜக மாநில துணைத்தலைவர் நயினார்நாகேந்திரன் தலைமையில் 4பேர் கொண்ட குழு;விக்கிரவாண்டிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன் தலைமையில் 4பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது. 

    15:40 (IST)05 Oct 2019

    பாஜக சார்பில் குழு!

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற பாஜக சார்பில் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இடைத்தேர்தலில்  அதிமுகவுக்கு  ஆதரவு தரக்கோரி அமைச்சர் ஜெயக்குமார்   தமிழக பாஜக தலைவர்களில் ஒருவரான பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்திருந்த நிலையில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்று பொன்னர் உறுதியளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

    15:36 (IST)05 Oct 2019

    கார்த்தி சிதம்பரம் அதிரடி பேட்டி!

    ”மத்திய அரசை விமர்சித்ததால் ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளனர்.  ஆதாரம் இருந்தால் வழக்கு போடுங்கள்.  தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்கான நாடகம் இது. சிதம்பரத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிஎன் மீதும், என் தந்தை மீதும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் நிரூபிக்க வேண்டியதுதானே”  என  மதுரை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம்அதிரடியாக பேட்டி அளித்துள்ளார். 

    14:59 (IST)05 Oct 2019

    24 மணி நேரத்தில் மழை!

    வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களாக சென்னையில் வெயில் மக்களை வாட்டி வதைக்கு நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னைய்கில் மேகமூட்டம் சூழும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    14:47 (IST)05 Oct 2019

    பி.சி.ஸ்ரீராம் ட்வீட்!

    49 கலைஞர்கள் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ”அமைதியாகத்தான் இருக்க வேண்டும்; அனைத்தும் அவர்கள் கையில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

    14:42 (IST)05 Oct 2019

    மு. க ஸ்டாலின் அறிக்கை!

    பாஜக அரசின் எதிர்மறை செயல்பாடுகள் பற்றி பேச விடாமல் வாய்ப்பூட்டு போடும் முயற்சி கண்டனத்திற்குரியது’ என குறிப்பிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 கலைஞர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவிடப்பட்டுள்ளத்தை எதிர்த்து ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    14:34 (IST)05 Oct 2019

    ஸ்டாலின் - அப்பாவு சந்திப்பு!

    ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை அப்பாவு இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் குறித்து முக்கிய ஆலோசனை  விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    13:43 (IST)05 Oct 2019

    ரயில்வே சர்வே:

    தூய்மை இந்தியா திட்டம் தொடங்கியதில் இருந்தே  இந்திய ரயில்வே பல முயற்சிகளை எடுத்து வருகிறது . இந்நிலையில், 2019 க்கான தூய்மை/தூய்மையற்ற ரயில்வே ஸ்டேஷன்களை கணக்கெடுத்து பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், தூய்மையற்ற முதல் 10  ரயில்வே ஸ்டேஷன்களில் ஆறு தமிழகத்தில் உள்ளது என்று கருத்துக் கணிப்பு சொல்லியுள்ளது.

    பெருங்குளத்தூர், கிண்டி,வேளச்சேரி,  கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோயில், பழவந்தாங்கல் ஆகியவைகள் தூய்மையற்ற முதல் 10 ரயில்வே  ஸ்டேஷன்களில் இடம் பெற்றுள்ளது.   

    13:33 (IST)05 Oct 2019

    கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை:

    லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் காவல் கண்காளிப்பாளர் ராஜேஷ் தலைமையில் கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவகலத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் கணக்கில் வராத 1.80 லட்சம் மேல் ரொக்கப் பணமும்,  நூற்றிக்கும் மேற்பட்ட ஆவணங்களும் சிக்கியுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    13:25 (IST)05 Oct 2019

    ராமதாஸ் கோரிக்கை:

    வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் சேர்த்து 50% லாபம் வரும் வகையில் நெல் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 3000 ஆக உயர்த்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    11:51 (IST)05 Oct 2019

    பொன்.ராதா கிருஷ்ணன் கருத்து

    வரும் அக்டோபர் 12 ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் இன்பார்மல் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். இது குறித்து,  முன்னாள் பாஜக இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் , இந்த வாரலாற்று மிக்க சந்திப்பு மாமலபுரத்தில் நடைபெறுவதால்  தமிழகம் கவுரவம் அடைகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், இரு தலைவர்கள் வருகைக்குபின் மாமல்லபுரம் உலக அளவில் பெயர்பெற்ற பகுதியாக மாறும் என்று தெரிவித்துள்ளார். 

    11:22 (IST)05 Oct 2019

    சென்னையில் டெங்கு காய்ச்சல்:

    கடந்த ஆண்டை விட இந்தாண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9% உயர்ந்துள்ளதாக மாநகராட்சி சுகாதாரத்துறை துணை ஆணையர்   மதுசூதனன் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 390 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.   

    11:20 (IST)05 Oct 2019

    புது சிசிடிவி காட்சி வெளியீடு:

    லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த கொள்ளையர்களை  திருவாரூரில் நேற்று முன்தினம்  வாகன சோதனையில் ஈடுபட்டபோது திருச்சியை சேர்ந்த மணிகண்டன்என்பவரை காவல்துறையினர் விரட்டிப் பிடித்தனர். காவல் துரையினர் கொள்ளையர்களை துரத்தும் சிசிடிவி காட்சி தற்போது இணைய தளங்களில்  பரவி வருகிறது. 

    10:39 (IST)05 Oct 2019

    700 கிலோ குட்கா

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 700 கிலோ குட்காவை சென்னை எர்ணாவூர் அருகே மடக்கி பிடித்தது தமிழக காவல் துறை. கண்டெய்னர் லாரியில் கடத்தி வந்த 4 பேரையும் கைது செய்துள்ளது.

    10:36 (IST)05 Oct 2019

    சிபிஐ (எம்) திட்டம்:

    சிபிஐ (எம்) புதிய முகங்களை முன்னிலைப்படுத்த அக்கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் மாநிலக் குழுக்கள், மத்திய குழுக்கள் மற்றும் பொலிட் பீரோ வரை வயது வரம்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

    10:30 (IST)05 Oct 2019

    ஜே.பி.நட்டா கருத்து

    தேசிய குடிமக்கள் பதிவேட்டை  (என்.ஆர்.சி) மேற்கோள் காட்டி பேசிய பாஜக தேசிய செயற்பாட்டுத் தலைவர் ஜே.பி.நட்டா, இனி வரும் காலங்களில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் வெளியே சென்று- பக்கத்து நாடுகளில் சித்திரவதை செய்யப்பட்ட  இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள், மற்றும்  கிறிஸ்தவர்கள் இந்தியாவிற்குள் அடைக்கலம் அடையும் நிலை ஏற்படும் என்று தெரிவித்துளார்.  இது ஒரு நாடு, ஒரு சத்திரம் அல்ல என்று  விஜய் சங்கல்ப் யாத்திரையில் பேசும் பொது தெரிவித்தார்.  

    10:19 (IST)05 Oct 2019

    பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா

    பங்களாதேஷ் பிரதமர் நான்கு நாள் இந்தியா சுற்றுப் பயணமாக வந்த பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா, இன்று டெல்லியில்  பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.  அசாம் என்.ஆர்.சி, ஆனியன் ஏற்றுமதி, உலகப் பொருளாதாரம் போன்றவைகள் முக்கியப் பேச்சுகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது 

    10:14 (IST)05 Oct 2019

    மேட்டூர் அணை நிலவரம்:

    இன்று கலை நேர நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 118.7 அடியாக உள்ளது.  அணையின் மொத்த  நீர் இருப்பு - 91.42 டிஎம்சி, நீர்வரத்து - 19,333 கன அடி, 20,000 கன அடியில் வெளியேற்றப்படுகிறது.

    10:11 (IST)05 Oct 2019

    பிரகாஷ்ராஜ் கண்டனம்

    ஜெய் ஸ்ரீராம் என்ற போர்வையில் நாட்டில் சிருபான்பையினர் தாக்கப் படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று ராமச்சந்திர குஹா, மணிரத்னம் உட்பட்ட 49 பேர் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி பீகார் நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் திவாரி பிரதமருக்கு கடிதம் எழுதியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பீகார் காவல் துறையினருக்கு  உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். நீதிபதியின் உத்தரவை அடுத்து, பிரதமருக்கு கடிதம் எழுதியவர்கள் மீது தேசத்துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது .

    இந்த நடவடிக்கைக்கு பிரகாஷ் ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு நாட்டின் குடிமகன்கள் கடிதம் எழுதுவதில் என்ன தவறு உள்ளது ? என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார். 

    Tamil Nadu news today updates: தேனி மருத்துவ கல்லூரி மாணவன் உதித் சூர்யா-வின் வழக்கு விசாரணையின் போது தமிழகத்தில் நீட் ஆள் மாறாட்ட முறைகேடுகளில் அரசு அதிகாரிகள் பங்கு என்ன ? என்பது குறித்து பதில் அளிக்க சிபிசிஐடி காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பாஜக அலுவலகத்துக்குச் சென்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முன்னாள் பாஜக இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து இடைத்தேர்தலுக்கு நேற்று ஆதரவு கோரிய பின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாஜக ஆதரவு அளிக்க்கும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 50 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இந்த வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment