Advertisment

Tamil Nadu News today updates : உதவி பேராசிரியர் பணி - அக்.30ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.21 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.15 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sujith news live updates

Sujith news live updates

Tamil Nadu News today updates : திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவன், திருவாரூரில் வாகன சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளான். கைதான மணிகண்டனிடம் 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகன சோதனையின் போது தப்பியோடிய சுரேஷ் என்ற கொள்ளையனைப் பிடிக்க போலீஸ் தீவிரம். பிடிப்பட்ட கொள்ளையனை ரகசிய இடத்தில் வைத்து விடிய விடிய விசாரணை.

Advertisment

ராதாபுரம் தேர்தல் வழக்கில், இன்று உயர்நீதி மன்றத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கு தடைகோரிய அதிமுக எம்.எல்.ஏ இன்பத்துரையின் மனுவை உச்சநீதி மன்றம் இன்று விசாரிக்கிறது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்று பேனர் வைக்க தடையில்லை என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு பேனர் வைக்க வேண்டுமெனவும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.

 

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, political events : சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன்  அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:07 (IST)04 Oct 2019

    8-ம் தேதி வரை பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி

    நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நாளை முதல் 8-ம் தேதி வரை பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

    20:45 (IST)04 Oct 2019

    திருச்சி நகைக்கடை கொள்ளை - போலீசாருக்கு வெகுமதி அளித்து பாராட்டு

    திருச்சி நகைக்கடை கொள்ளையனை பிடித்த, திருவாரூர் காவல் உதவி ஆய்வாளர் பாரத நேரு உள்ளிட்டோருக்கு, திருச்சி மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, சான்றிதழ் மற்றும் வெகுமதி அளித்து பாராட்டினார்.

    20:43 (IST)04 Oct 2019

    நீதிமன்றங்கள் நல்ல தீர்ப்பை வழங்கும் என நம்புகிறேன்

    ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கில் நீதிமன்றங்கள் நல்ல தீர்ப்பை வழங்கும் என நம்புகிறேன் - மனுதாரர் அப்பாவு பேட்டி

    உச்சநீதிமன்றத்தில் வழக்கை எப்படி நடத்துவது என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்போம் - அப்பாவு

    20:18 (IST)04 Oct 2019

    பாஜக- சிவசேனா இடையே தொகுதிப் பங்கீடு இறுதி

    மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக- சிவசேனா இடையே தொகுதிப் பங்கீடு இறுதியானது. 288 தொகுதிகளில் பாஜக - 148, சிவசேனா - 126, கூட்டணி கட்சிகள் - 14 தொகுதிகளில் போட்டி

    20:11 (IST)04 Oct 2019

    30-ம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்

    அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு இன்று முதல், வரும் 30-ம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

    20:10 (IST)04 Oct 2019

    சிலை கடத்தலை தடுக்க கடுமையான சட்டம்

    தமிழகத்தில் சிலை கடத்தலை தடுக்க கடுமையான சட்டம் நிறைவேற்றப்படும் என விழுப்புரத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி அளித்துள்ளார்.

    20:10 (IST)04 Oct 2019

    அனைவரும் தேச விரோதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்

    மத்திய அரசுக்கு யோசனை சொல்பவர்கள் அனைவரும் தேச விரோதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள் என காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.

    19:22 (IST)04 Oct 2019

    ஓஎன்ஜிசி நிறுவனத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - தஞ்சை ஆட்சியர்

    டெல்டா மாவட்ட வளர்ச்சிக்காக ஓஎன்ஜிசி நிறுவனத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஓஎன்ஜிசி நிறுவனம் மக்களின் வரிப்பணத்தில் இயங்கக்கூடிய அரசு நிறுவனம் - தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை

    18:44 (IST)04 Oct 2019

    ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி நிறைவு

    ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி நிறைவுப் பெற்றது. மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பான அறிக்கை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் அளிக்கப்பட உள்ளது

    18:26 (IST)04 Oct 2019

    அமித்ஷாவை சந்தித்த பன்வாரிலால்

    டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை,  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேசியுள்ளார். 

    18:24 (IST)04 Oct 2019

    நகைக்கடை கொள்ளையில் தப்பியோடிய சீராதோப்பு சுரேஷ் கைது

    நகைக்கடை கொள்ளையில் தப்பியோடிய சீராதோப்பு சுரேஷ் கைது

    பிடிபட்ட சுரேஷிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை

    திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் மணிகண்டன் மற்றும் சுரேஷ் உறவினர்களிடம் தீவிர விசாரணை

    18:23 (IST)04 Oct 2019

    8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள்

    இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்தியாவை விட தென்னாப்பிரிக்க அணி 117 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    18:17 (IST)04 Oct 2019

    இயக்குநர் மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு

    இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட திரைத்துறையினர் மீது தேசத்துரோக வழக்குப்பதியப்பட்டதற்கு தமிழக காங். கண்டனம் தெரிவித்துள்ளது. 

    தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி, "வகுப்புவாத சக்திகளின் வெறியாட்டத்தை தடுக்க பிரதமரிடம் முறையிட்டதற்காக வழக்குப்பதியப்பட்டது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார். 

    17:05 (IST)04 Oct 2019

    ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவு!

    ராதாபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை 4 மணிக்கு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதனிடையே, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எம்.எல்.ஏ. இன்பதுரை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ். ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இன்பதுரை தரப்பில் மூத்த வழக்குரைஞர் ராஜீவ் ராமசந்திரன் ஆஜராகி வாதிட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க தடை விதித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    17:03 (IST)04 Oct 2019

    பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

    பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைப்பெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில்  டிஜிபி திரிபாதி மற்றும் முப்படை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 

    16:51 (IST)04 Oct 2019

    பேனர் அனுமதி தொடர்பாக சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி!

    பேனர் வைக்க அரசு அனுமதி கேட்டதில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு விசித்திரமானது . அரசு பேனர் வைத்தால் கீழே விழாதா என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி   எழுப்பியுள்ளார். மோடி  தமிழக வருகையொட்டி பேனர் வைக்க அனுமதி தருமாறு அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இதனை சாடும் வகையில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

    16:06 (IST)04 Oct 2019

    மழைக்கு வாய்ப்பு!

    வெப்பச்சலனம் காரணமாக வடக்கு உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில், இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    15:52 (IST)04 Oct 2019

    அதிமுகவுக்கு பாஜக ஆதரவு!

    நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுடன் பாஜக இணைந்து பணியாற்றும் என்றும் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் வகையில் பாஜகவினர் மிகத் தீவிரமாக செயல்படுவர் என்றும் பாஜக தமிழக தலைவர்களில் ஒருவரான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  அமைச்சர் ஜெயக்குமார் உடனான சந்திப்புக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த பொன்னர், “அதிமுக, பாஜக இடையே எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை. பாஜக மாநில தலைவர் இல்லாத காரணத்தினால் அகில இந்திய தலைமையிடம்தான் பேச முடியும்” என்று தெரிவித்தார். 

    15:39 (IST)04 Oct 2019

    ஓபிஎஸ் பிரச்சார பயணம்!

    அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வத்தின் பிரசார பயண விவரம் வெளியிட்டப்பட்டுள்ளது.  வரும் 13, 14, 17 தேதிகளில் விக்கிரவாண்டியிலும், 15, 16, 18 தேதிகளில் நாங்குநேரியிலும் துணை முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்கிறார். 

    15:36 (IST)04 Oct 2019

    கேள்வி எழுப்பும் நீதிபதிகள்!

    நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக அக்.15-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க சிபிசிஐடி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இதுத் தொடர்பான வழக்கில் நீட் தேர்வு முறைகேடுகள் அதிகாரிகள் துணையின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நீதிபதிகள் கருத்து கூறினர். ஆள்மாறாட்டத்தில் எத்தனை மாணவர்கள் ஈடுபட்டனர்? எவ்வளவு பணம் பரிமாற்றம் நடந்துள்ளது எனவும் கேள்வி எழுப்பட்டது. 

    15:02 (IST)04 Oct 2019

    பாஜக அலுவலகத்தில் அமைச்சர் ஜெயகுமார்: பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆதரவு கேட்டார்

    நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக ஆதரவை அதிமுக கோரவில்லை என்கிற சர்ச்சை எழுந்தது. விஜயகாந்த், சரத்குமார் போன்ற தலைவர்களை நேரில் சந்தித்த அமைச்சர்கள் குழு, தமிழக பாஜக.வுக்கு தலைவர் இல்லாததால் சந்திக்கவில்லை என கருத்து கூறியது.

    இந்நிலையில் பிரதமர் சென்னை வந்தபோது இடைத்தேர்தல் ஆதரவு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயகுமார் தமிழக பாஜக தலைமையகமான கமலாலயம் சென்றார். இன்று பிற்பகலில் அங்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து அதிமுக.வுக்கு ஆதரவு கேட்டார் அவர்.

    13:34 (IST)04 Oct 2019

    ரிசல்ட் எப்போது?

    ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் ரிசல்ட் விவரங்கள் சீலிட்ட உறையில் வைக்கப்படும். உச்ச நீதிமன்ற விசாரணைக்கு பிறகே முடிவை அறிவிக்க இயலும் என்பது குறிப்பிடத் தக்கது.முன்னதாக அப்பாவு தரப்பிலும் தங்களைக் கேட்காமல் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என கேவியட் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும் விரிவான விவாதங்கள் எதுவும் இன்று நடக்கவில்லை. இன்பதுரையின் கோரிக்கையான வாக்கு எண்ணிக்கைக்கு தடை என்பதை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதேசமயம் முடிவை வெளியிட உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.

    13:26 (IST)04 Oct 2019

    ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை- உச்ச நீதிமன்றம் உத்தரவு

    ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை கேட்டு, அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு அருண் மிஸ்ரா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வாக்கு எண்ணிக்கைக்கு தடை கேட்டு இன்பதுரை தரப்பில் இன்று வாதிடப்பட்டது.

    எனினும் வாக்கு எண்ணிக்கைக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அதேசமயம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    12:54 (IST)04 Oct 2019

    ப.சிதம்பரம் ஜாமீன் மனு விசாரணை அக்.15-க்கு ஒத்திவைப்பு- உச்ச நீதிமன்றம்

    ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 15-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. 14-ம் தேதிக்குள் பதில் அளிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எனவே ப.சிதம்பரம் சிறையில் இருக்கும் நிலை தொடர்கிறது.

    12:25 (IST)04 Oct 2019

    ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கை 4 மணி நேரம் நீடிக்கும்

    முதலில் 1508 தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அடுத்து 19, 20 மற்றும் 21 ஆகிய சுற்றுகளின் 16,083 வாக்குகளும் மீண்டும் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மணி நேரமும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண 2 மணி நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் அப்பாவு சார்பில் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அரங்கில் உள்ளார்.

    11:54 (IST)04 Oct 2019

    ராதாபுரம் தேர்தல் முடிவு மாறுமா? வாக்குகள் மறு எண்ணிக்கையால் விறுவிறுப்பு

    ராதாபுரம் தொகுதியில் பதிவான 1508 தபால் வாக்குகளில், 203 ஓட்டுக்கள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த 203 வாக்குகள் உட்பட 1508 தபால் வாக்குகளையும் எண்ண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தவிர, 3 ரவுண்ட் வாக்குகளையும் எண்ண இருக்கிறார்கள். வெறும் 49 வாக்குகளில் திமுக வேட்பாளர் அப்பாவுவை, அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே 203 வாக்குகளை இணைத்து எண்ணும்போது, முடிவு மாறுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

    11:32 (IST)04 Oct 2019

    மறுவாக்கு எண்ணிக்கை தொடக்கம்

    ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் முன்னிலையில் தற்போது தொடங்கியிருக்கிறது. அதிமுக-வில் வெற்றி பெற்ற இன்பதுரை, திமுக சார்பில் போட்டியிட்ட அப்பாவு உள்ளிட்டோர் அங்கிருக்கிறார்கள். 

    11:24 (IST)04 Oct 2019

    உச்ச நீதிமன்றத்தில் இன்பதுரையின் வழக்கு

    வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரி ராதாபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை  தொடர்ந்த மேல் முறையீட்டு மனு உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பதிவாளர் பட்டியலில் இந்த வழக்கு 64 வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. ஒருவேளை  முன்கூட்டியே  இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. 

    11:09 (IST)04 Oct 2019

    ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்

    ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

    10:59 (IST)04 Oct 2019

    ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை

    சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் முன்னிலையில் ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி சற்றுநேரத்தில் தொடங்க உள்ளது. மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும் அரங்கில் இன்பதுரை, அப்பாவு மற்றும் அவர்களின் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி.

    10:33 (IST)04 Oct 2019

    திருப்பூர் குமரன் பிறந்தநாள்

    சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ஆட்சியர் விஜய கார்த்திகேயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

    10:26 (IST)04 Oct 2019

    முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் 6 பேர் மீது வழக்குப்பதிவு

    முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீது புதுக்கோட்டையில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-ல் திருமணமாகி, 2 வயதில் மகள் உள்ள நிலையில், மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்து 3 முறை தலாக் கூறியதை தொடர்ந்து இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    10:25 (IST)04 Oct 2019

    லலிதா ஜுவல்லரி - மேலும் 2 தனிப்படை

    திருச்சி கொள்ளையர்களை பிடிக்க திருவாரூரில் மேலும், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை டி.ஐ.ஜி லோகநாதன், திருச்சி டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    09:48 (IST)04 Oct 2019

    பாலியல் தொழிலுக்கு கட்டயப்படுத்திய வழக்கு

    மதுரை மேலப்பாளையத்தில் சேலத்தை சேர்ந்த பெண்ணை வீட்டில் பூட்டி வைத்து, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பாலசுப்பிரமணியம், மைதீன், காஜா, சித்திக், ராஜா என்ற 5 பேர் கைது செய்யப்பட்டு, மேலும் சிலருக்கு வலைவீசப்பட்டுள்ளது. 

    09:33 (IST)04 Oct 2019

    அன்புமணி பேட்டி

    ”பேனர்கள் வைப்பது தேவையற்றது, மற்ற நாடுகளில் இது போன்ற கலாச்சாரம் கிடையாது. நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்” என கோவையில் அன்புமணி எம்.பி பேட்டியளித்தார். 

    09:08 (IST)04 Oct 2019

    நகைகள் பறிமுதல்

    திருச்சி நகைக்கடை கொள்ளையில் கைதான மணிகண்டனிடம் இருந்து 4 கிலோ 800 கிராம் தங்க நகைகள் மற்றும் வைரம், பிளாட்டினம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விடிய விடிய மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில் 8 பேர் கொண்ட கும்பல் லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்தது தெரிய வந்திருக்கிறது. 

    08:45 (IST)04 Oct 2019

    லலிதா ஜுவல்லரி திருட்டில் 5 பேரிடம் விசாரணை

    திருச்சி நகைக்கடை கொள்ளை தொடர்பாக திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த 5 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. தப்பியோடிய சுரேஷின் தாயார் கனகவல்லி உள்பட 5 பேரிடம் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    08:41 (IST)04 Oct 2019

    ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கை

    ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்காக தபால் ஓட்டு பெட்டிகள் மற்றும் 34 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தால் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டன. இதைத் தொடர்ந்து 11.30 மணிக்கு மறு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் எனத் தகவல் 

    Tamil Nadu news today updates : ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு அக்.17 வரை நீதிமன்ற காவலை நீட்டித்தது டெல்லி உயர்நீதிமன்றம் . நீதிமன்றக் காவலில் வைக்கப் பட்டிறிந்தாலும்  வீட்டு உணவை பயன்படுத்த அனுமதியளித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.  இந்நிலையில் ஜாமீன்கேட்டு  உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் ஒன்றை செய்திருந்தார் ப.சிதம்பரம் . மனு மீதான விசாரணை குறித்து இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இன்று முடிவு செய்வார் என்று நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.

    காந்தியின் சொற்களை எவ்வாறு அடுத்த தலைமுரையினருக்கு எடுத்து செல்வது ? என்ற கேள்வுக்கு பதில் தேட  சிந்தனையாளர்களையும், தொழில்முனைவோரையும் , தொழில்நுட்பத் தலைவர்களையும் நான் அழைக்கின்றேன் என்று மகாத்மா காந்தி பற்றி நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தார்.

    அதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று டிஜிட்டல் சக்ராவை வெளியிட்டுள்ளார். இதன் மூலம், மத்திய அரசாங்க நிறுவனமான என்ஐசி நிர்வகிக்கும் அனைத்து வெப்சைட் களிலும் காந்தி குறித்த தகவல்களை, பொன்மொழிகளை வெளியிடப்படும்.

    Tamil Nadu Chennai
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment