Tamil Nadu news today updates : பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, மக்கள் இப்போதே சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆரம்பித்துவிட்டனர். இதனால் பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் கூட்டம் அலை மோதுகிறது. பொங்கல் திருவிழா பண்டிகையை முன்னிட்டு 12,13,14 தேதிகளில் வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கு 6 தற்காலிக போர்டிங் பாயிண்ட்டை அறிவித்துள்ளது தமிழக அரசு.
கோயம்பேடு திணறுகிறது: சென்னை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்
தவிர, மேற்கு வங்கம் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு இன்று இரண்டாவது நாளாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
தமிழகத்தில் ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடந்தது. 314 பதவிகளில் 41 பதவிகளுக்கு போதிய எண்ணிக்கையில் உறுப்பினர் வருகை இல்லாததால் தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 273 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.
இதில், அ.தி.மு.க. 94 இடங்களிலும், தி.மு.க. 107 இடங்களிலும், பா.ம.க. 19 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், தே.மு.தி.க. 7 இடங்களிலும், அ.ம.மு.க. 5 இடங்களிலும், பா.ஜ.க. 4 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 3 இடங்களிலும், எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சை 25 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
Live Blog
Tamil Nadu news today updates
இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற இருக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள
தமிழகம் வந்துள்ள இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துப் பேசினார். மேலு, நடிகர் ரஜினிக்கு இலங்கை வருமாறு விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டணி வியூகங்கள் குறித்து அதிமுக தலைமை மட்டுமே முடிவெடுக்கும். அதிமுகவினர் யாரும் தங்கள் தனிப்பட்ட கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்கக்கூடாது. அரசியல் நிலைப்பாடு பற்றி செயற்குழு, பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டிருப்பதை நினைவில் கொள்ளவேண்டும். கொள்கை முடிவுகளைப்பற்றிய தனிநபர் விமர்சனமும்,கருத்துகளும் தேவையற்ற விவாதங்களை உருவாக்கும். கூட்டணி,தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைபற்றி ஓபிஎஸ்-ஈபிஎஸ் முடிவெடுப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் காமராஜ்: 10 லட்சத்து 59 ஆயிரத்து 745 குடும்பங்களுக்கு நாளை மாலைக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். தற்போது வரை 94.71% குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் மாநிலம் மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பில் முக்கிய பங்களிக்கின்றன என்று தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் கேரள மாநிலம் தென்மலை பகுதியை சேர்ந்த 4 பேரிடம் விசாரணை
* விசாரணைக்கு பின் 4 பேரையும் தமிழக கியூ பிரிவு போலீசிடம் ஒப்படைத்தது கேரள காவல்துறை
* அடுத்தக்கட்ட விசாரணைக்காக 4 பேரையும் தென்காசிக்கு அழைத்துச் சென்றது கியூ பிரிவு போலீஸ்
கிருஷ்ணகிரியில் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் மகப்பேறு உதவி தொகை வழங்குவதில் பல லட்சம் மோசடி
மோசடி தொடர்பாக 2018ம் ஆண்டு புகார் அளித்த நாகவேனி என்ற செவிலியர் தற்காலிக பணியிடை நீக்கம், 21 செவிலியர்களுக்கு மெமோ வழங்கி சுகாதார துறை நடவடிக்கை
தமிழர்கள் இலங்கைக்கு வந்தால் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டிய சூழல் இல்லை, அதனால் இரட்டை குடியுரிமை வேண்டும் - விக்னேஷ்வரன்
பல்வேறு நாட்டில் உள்ள அனைத்து இலங்கை தமிழர்களும் இலங்கை திரும்ப வேண்டும் - இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன்
"Chennai Book Fair-ல், அதிமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் புத்தகம் இருந்ததால் 'மக்கள் செய்தி மையம்' அரங்கின் அனுமதியை ரத்து செய்து, பத்திரிகையாளர் அன்பழகனையும் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. அன்பழகன் உடனே விடுவிக்கப்பட்டு, உரிம அனுமதியும் திருப்பித் தரப்பட வேண்டும்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
நம் நாட்டில் இந்து என்று சொன்னாலே சிலருக்கு அலர்ஜி; அது சரியல்ல. யாரையும் சாதி ரீதியாக வேறுபடுத்தி பார்க்கக்கூடாது; பிற மதத்தை சேர்ந்தவர்களை மதிக்க வேண்டும், யோகா பயிற்சி என்பது மோடிக்காக அல்ல; நமது ’பாடி’க்காக. மொழித் திணிப்பும், தாய்மொழி எதிர்ப்பும் எங்கும் இருக்கக் கூடாது; தாய்மொழியை நாம் மறக்கக்கூடாது.
- துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு
உக்ரைன் விமானம் மனித தவறுகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரான் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஈரானில் உள்ள அமிர் கபிர் பல்கலைக்கழகம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் ஈரானுக்கான இங்கிலாந்து தூதர் ராப் மெக்கைர் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த பாதுகாப்பு படை போராட்டக்காரர்களுடன் இங்கிலாந்து தூதரையும் கைது செய்தது. சில மணி நேரங்களுக்கு பின் அவர்களை விடுதலை செய்தது.
போராட்டத்தை தூண்டிய குற்றச்சாட்டில் அவரை தடுப்புக் காவலில் கைது செய்ததாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
ஈரானில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இங்கிலாந்து தூதர் ராப் மெக்கைரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளதற்கு பிரிட்டன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச விதிகளை மீறிய செயல் என குற்றம் சாட்டியுள்ளது.
ஈரான், அமெரிக்கா இடையிலான மோதல் வலுப்பெற்றுள்ள நிலையில், இங்கிலாந்து தூதர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 14-ஆம் தேதி போகிப்பண்டிகை வரை பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர் பொங்கல் திருநாளைக் கொண்டாட சொந்த ஊருக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்!
பொங்கல் திருநாள் கொண்டாட்டம் என்பது போகிப்பண்டிகையுடன் தொடங்குகிறது. எனவே போகியை கொண்டாடவும், விடுதி மாணவர்கள் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல வசதியாகவும் 14-ஆம் தேதியும் விடுமுறை வழங்க பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்!
-மருத்துவர் ராமதாஸ்
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகமாக கூடும் மெரினா, பெசன்ட் நகர், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த கம்பங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களை கண்காணிக்க சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. குற்றச்செயல்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் 360 டிகிரி சுழன்று கண்காணிக்கக் கூடிய கேமிரா மற்றும் மழைமானி, எந்தெந்த பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் பல்வேறு சிறப்பம்சங்கள், இந்த ஸ்மார்ட் கம்பத்தில் இருப்பதாக கூறுகிறார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.
முதற்கட்டமாக சென்னையில் 50 இடங்களில் இந்த ஸ்மார்ட் கம்பங்கள் பொருத்தப்பட உள்ளதாகவும், விரைவில் 15 மண்டலங்களிலும் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு வனச்சார்நிலைப் பணிகளில் அடங்கியுள்ள வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்குழுமம் வெளியிட்டுள்ளது
சிஏஏ தொடர்பாக நாட்டு மக்கள் திசை திருப்பப்படுகின்றனர்
குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்பதை மீண்டும் சொல்கிறேன்
அரசியல் விளையாட்டில் ஈடுபடுவோர் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து புரிந்துகொள்ள மறுக்கின்றனர்
- பிரதமர் மோடி
குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக, டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் ராமநாதபுரத்தில் விசாரணை நடத்தினர். தவறுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அங்கு தேர்வு பணிகளில் ஈடுபட்ட அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் எங்கிருந்து செல்கின்றன உள்ளிட்ட முழு விவரம் இங்கே,
2020ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் - சிறப்பு பேருந்துகள் எங்கிருந்து எங்கே?#Pongal2020 #PongalFestival #SpecialBuses #Repost pic.twitter.com/1O6unle0df
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) January 12, 2020
ஈரோடு மாவட்டம் கோபியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில்,
பொங்கல் பண்டிகையையொட்டி 13-ந் தேதி அதாவது நாளை (திங்கட்கிழமை) முதல் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதல்- அமைச்சர் பழனிசாமியுடன் கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும். கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தில் சில தனியார் பள்ளிக்கூடங்களில் அரசின் இட ஒதுக்கீட்டின்படி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஒரு சில பள்ளிக்கூடங்களில் அதுபோல் உள்ளது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அடுத்த ஆண்டு என் கவனத்துக்கு யாரும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கொண்டு வந்தால் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.
அரசு பள்ளிக்கூடங்களில் காலை உணவு வழங்கப்படும் என வதந்திகளை பரப்பி வருகிறார்கள். காலை உணவு வழங்குவது குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. இது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்தியே தவிர வேறொன்றும் இல்லை என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights