Advertisment

என்னைப் போன்றவர்கள் உயரிய நிலையை அடைய தந்தை பெரியாரே காரணம் - ஓ.பி.எஸ்

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Live

Tamil Nadu News Today Live

Flash News in Tamilnadu Today Updates : கட்சியில் சிறப்பாக உழைத்ததால், நாங்கள் உயர்ந்துள்ளோம். அதேபோல், நீங்கள் சிறப்பாக உழைக்கும்போது, எதிர்காலத்தில் உயர்ந்த இடத்திற்கு வருவீர்கள்,'' என, முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

ஜெயலலிதா, தன் நோயைக் கூட பொருட்படுத்தாமல், மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர். அவர் பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாட வேண்டும்.அனைத்து பகுதிகளிலும்,ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவிற்கு உதவ வேண்டும். முதியோருக்கு வேஷ்டி, சேலை; பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகம் வழங்குங்கள்; அன்னதானம் செய்யுங்கள். மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு, பழங்கள், பால், பிரட் வழங்கலாம். மருத்துவமனைக்கு தேவையான உதவிகளை செய்யலாம். இதுவே, ஜெ.,க்கு நாம் செய்யும் நன்றி. ஜெ., உழைப்பால், நாம் நிமிர்ந்து நிற்கிறோம் என அவர் மேலும் கூறினார்.

தஞ்சையில் சுகோய் போர்விமானங்கள் சாகசம்

மருத்துவ மாணவி 'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளி தாக்கல் செய்த கடைசி மனுவையும் உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. வழக்கை இழுத்தடிக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதை அடுத்து குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப். 1ல் துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:04 (IST)21 Jan 2020

    ரோகித் ஷர்மாவுக்கு 15 கோடி

    மும்பை அணியில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக முதலிடத்தில் கேப்டன் ரோகித் ஷர்மா உள்ளார். அவருக்கு 2020 ஐபிஎல் தொடருக்காக ரூ.15 கோடி சம்பளம் வழங்கப்படவுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு ரூ.7 கோடி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

    21:14 (IST)21 Jan 2020

    என்னைப் போன்றவர்கள் உயரிய நிலையை அடைய தந்தை பெரியாரே காரணம் - ஓ.பி.எஸ்

    தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை

    என்னைப் போன்றவர்கள் உயரிய நிலையை அடைய தந்தை பெரியாரே காரணம்

    பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்

    - துணை முதல்வர் ஓபிஎஸ்

    21:13 (IST)21 Jan 2020

    ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்க வேண்டும் - வைகோ

    ஆளுங்கட்சி உட்பட அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைந்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்க வேண்டும்

    ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுக்காவிட்டால் வருங்கால சந்ததியினர் பாதிப்பை சந்திப்பார்கள்

    -வைகோ

    21:05 (IST)21 Jan 2020

    சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக புது தேர்வு பட்டியலை தயாரிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    20:44 (IST)21 Jan 2020

    காங்கிரஸ் கட்சியின் நிலைமை பரிதாபமாக உள்ளது - முதல்வர் பழனிசாமி

    எம்.ஜி.ஆர் தனக்கென தனி முத்திரையை பதித்தவர், நல்ல கருத்துக்களை பாடல்கள் மூலம் நாட்டிற்கு சொன்னவர். அதிமுக கொடியில் அண்ணாவின் உருவத்தை பொருத்தியவர் எம்.ஜி.ஆர். சாதரணமானவர் கூட அதிமுகவில் எம்.பி, எம்.எல்.ஏ,வாக முதலமைச்சராக கூட வரலாம், திமுகவில் வாரிசு அரசியல் நடக்கிறது. அதிமுக மட்டுமே ஜனநாயக முறைப்படி கட்சி நடத்துகிறது. நூற்றாண்டு காலம் கடந்த கட்சி காங்., அதன் நிலைமை இன்று பரிதாபமாக உள்ளது. இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் அதிகமான இழப்பீட்டை பெற்றுத்தந்தது அதிமுக அரசு - முதலமைச்சர் பழனிசாமி

    20:02 (IST)21 Jan 2020

    ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர்

    'ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் எப்போதும் முதலமைச்சராக முடியாது.

    அதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதல்வர் ஆவதற்கான தகுதி உடையவர்கள்

    ஒரு பழனிசாமி அல்ல; ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர்.

    அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும்

    * ஒரு சாதாரண நபர் திமுகவில் உயர்ந்த பதவிக்கு வர முடியுமா?

    - முதல்வர் பழனிசாமி

    19:27 (IST)21 Jan 2020

    ஏதேதோ தலைப்புகளில் திரைப்படங்கள் வருகின்றன - முதல்வர் பழனிசாமி

    திரைப்படங்கள் மூலம் ஆக்கப்பூர்வமான கருத்துகளை சமுதாயத்தில் புகுத்தியவர் எம்ஜிஆர். தற்போது ஏதேதோ தலைப்புகளில் திரைப்படங்கள் வருகின்றன, ஒரு படம் கூட மனதில் நிற்பதில்லை

    - முதல்வர் பழனிசாமி

    19:14 (IST)21 Jan 2020

    சொகுசு பங்களாவை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    முட்டுக்காடு கடற்கரையோரம் விதிகளை மீறி கட்டப்பட்ட சொகுசு பங்களாவை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு. கட்டடத்தை இடிப்பதற்கான செலவை பங்களாவின் உரிமையாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும்

    - உயர்நீதிமன்றம்

    19:14 (IST)21 Jan 2020

    13 லட்சம் வாசகர்கள் வருகை

    சென்னை புத்தகக் கண்காட்சிக்கு 13 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர். இந்தாண்டு ரூ.20 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன

    - பபாசி

    19:02 (IST)21 Jan 2020

    68 சிறப்பு ரயில்கள்

    ஜன.24 முதல் மார்ச் 31 வரை சென்னை - கோவை இடையே 68 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது - தென்னக ரயில்வே

    19:01 (IST)21 Jan 2020

    ஏப்ரல் 24ம் தேதி வரை அவகாசம்

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவிற்கான அரசாணையை நடைமுறைப்படுத்த ஏப்ரல் 24ம் தேதி வரை அவகாசம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

    19:01 (IST)21 Jan 2020

    பெரியாரை வீழ்த்தி விட முடியும் என்பது தப்புக்கணக்கு

    பெரியாரை வீழ்த்தி விட முடியும் என்பது தப்புக்கணக்கு - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

    ரஜினி பகடைக்காயாக மாறிவிடுவாரோ என்ற கருத்தை சுட்டிக்காட்டுகிறோம் - திருமாவளவன்

    18:29 (IST)21 Jan 2020

    சமூக வலைத்தளத்தில் ரஜினிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து

    சமூக வலைத்தளத்தில் ரஜினிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து பதிவிடப்பட்டு வருகிறது.

    publive-image

    18:27 (IST)21 Jan 2020

    உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால உத்தரவு

    2015 அக். 1ம் தேதிக்கு முன்பாக உற்பத்தி செய்யப்பட்ட போக்குவரத்து டாக்ஸிகளுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தியதற்கான சான்றிதழ் மற்றும் அரசாணை அடிப்படையில் தகுதி சான்று வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால உத்தரவு

    18:26 (IST)21 Jan 2020

    தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

    காட்டுமன்னார்கோயில் தொகுதி அதிமுக எம்எல்ஏ முருகுமாறனின் வெற்றியை எதிர்த்து திருமாவளவன் எம்.பி., தொடர்ந்த தேர்தல் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

    உயர் நீதிமன்ற உத்தரவின்படி நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளை ஆய்வு செய்த நீதிபதி கார்த்திகேயன் அறிவிப்பு

    18:26 (IST)21 Jan 2020

    எம்.பி. டி.ஆர்.பாலு அமித்ஷாவுக்கு கடிதம்

    அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை வாழ் அகதிகளின் மறுவாழ்வுக்கு நிலம் ஒதுக்கி உத்தரவிட வேண்டும் - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம்

    18:08 (IST)21 Jan 2020

    10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகம்

    அமெரிக்காவில் நான் பதியேற்ற பின் 11 மில்லியன் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன, இது இந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகம் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

    17:55 (IST)21 Jan 2020

    ரஜினிக்கு கஸ்தூரி ஆதரவு

    17:47 (IST)21 Jan 2020

    சா. அருணன் வலியுறுத்தல்

    5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய கோரி சா. அருணன் வலியுறுத்தியுள்ளார்.

    17:39 (IST)21 Jan 2020

    பாலியல் வன்கொடுமை

    சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    17:07 (IST)21 Jan 2020

    ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்

    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், மம்தா, மாயவதி ஆகியோர் குடியுரிமை சட்டம் குறித்து என்னுடன் பொது மேடையில் விவாதிக்க தயாரா - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

    17:07 (IST)21 Jan 2020

    இந்திய அணி வெற்றி

    ஜுனியர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

    17:07 (IST)21 Jan 2020

    உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    திசையன்விளையில் இருந்து கூடுதலாக, அரசு விரைவு பேருந்துகளை சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்க கோரிய வழக்கு

    * நெல்லை மண்டல அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

    17:06 (IST)21 Jan 2020

    இந்திய பயணிகள் 8 பேர் நேபாளத்தில் இறந்தது வருத்தமளிக்கிறது

    இந்திய பயணிகள் 8 பேர் நேபாளத்தில் இறந்தது வருத்தமளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

    இந்திய தூதரக அதிகாரிகள் மருத்துவமனையில் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர் - ஜெய்சங்கர்

    17:06 (IST)21 Jan 2020

    பெரிய கோயில் குடமுழுக்கு ஆகம விதிப்படி நடத்தப்படும்

    இதனிடையே தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு ஆகம விதிப்படி நடத்தப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜனவரி 27ஆம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கும்பாபிஷேகம் விழாவை நடத்த தலைமை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    17:05 (IST)21 Jan 2020

    அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதலாம்

    நாடு முழுவதும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மைய விவகாரத்தில் தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர், கல்வித்துறை இயக்குனர் சேதுராமவர்மாவின் முரண்பட்ட அறிவிப்பால், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடித்தது. இந்நிலையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதலாம் என தொடக்க கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வித்துறை இயக்குநர் பழனிசாமி, சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். வேறு பள்ளிகளுக்கு மாணவர்களை மாற்றக்கூடாது எனவும் அதில் உத்தரவிட்டப்பட்டுள்ளது. தொடக்க கல்வித்துறையின் அறிவிப்பால், கடந்த சில நாட்களாக நிலவிவந்த குழப்பம் முடிவுக்கு வந்தது.

    17:04 (IST)21 Jan 2020

    இஷாந்த் ஷர்மா விலகல்

    இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகல்

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 5 டி-20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது

    16:26 (IST)21 Jan 2020

    கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய இடைக்கால தடை

    கார்த்தி சிதம்பரம், சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் சொத்து விற்பனை மூலம் கிடைத்த 7 கோடியே 73 லட்சம் வருமானத்தை மறைத்ததாக அவர் மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்தும், அதை ரத்து செய்யக் கோரியும், எம்.பி கார்த்தி சிதம்பரம், அவரின் மனைவி ஸ்ரீநிதி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், ஜனவரி 27ஆம் தேதி வரை கார்த்தி சிதம்பரம், அவரின் மனைவி ஸ்ரீநிதி மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய கூடாது என சிறப்பு நீதிமன்றத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

    16:23 (IST)21 Jan 2020

    எஸ்.எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு 10 நாள் போலீஸ் காவல்

    கன்னியாகுமரியில், சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு 10 நாள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது.

    16:08 (IST)21 Jan 2020

    பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்திற்குரியது - அமைச்சர் ஜெயக்குமார்

    துக்ளக் 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையான நிலையில், இன்று தான் தவறாக பேசவில்லை. அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார். இந்நிலையில், பழைய நிகழ்வுகளைப் பற்றி பேசி ஆராய்ச்சி செய்வதால் ரஜினிக்கு என்ன பி.எச்.டி பட்டமாக கொடுக்கப்போகிறார்கள். இது மறுக்க வேண்டிய சம்பவமல்ல. மறக்க வேண்டிய சம்பவம் என அதை ஞாபகப்படுத்தி தன்னுடைய கருத்திலேயே ரஜினி முரன்பாடாக உள்ளார். அனைவரும் மதிக்கும் ரஜினி பேசியது கண்டனத்திற்குரியது” என தெரித்தார்.

    16:05 (IST)21 Jan 2020

    நேபாளில் பலியான 8 பேரின் உடலை மீட்டு ஒப்படைக்க வேண்டும் - பினராயி விஜயன் கடிதம்

    நேபாளத்திற்கு சுற்றுலா சென்றபோது உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்த 8 பேரின் உடல்களை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

    15:35 (IST)21 Jan 2020

    தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தலைமை செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு

    தஞ்சையில் பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    15:15 (IST)21 Jan 2020

    பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு; ரஜினி மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் திவிக மனு

    பெரியார் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    15:10 (IST)21 Jan 2020

    ரஜினி நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார்; இதயம் சொல்வதை பேசுங்கள் - குஷ்பு

    ரஜினியின் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு குறித்து நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு, தனது டுவிட்டர் பக்கத்தில், சரியோ தவறோ இதை ஒரு தனிப்பட்ட கருத்து என்று ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், ரஜினியைப் பார்த்து நான் மகிழ்ச்சியாக உள்ளது. ரஜினி தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார். இப்போது நமக்குத் தேவை நேர்மை.. பயம் அதிகாரம் செய்ய முடியாது. பேசுங்கள் உங்களுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை பேசுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். நீங்கள் அனைவரையும் மகிழ்விக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

    14:33 (IST)21 Jan 2020

    ரஜினி விஷயம் தெரியாமல் அவ்வப்போது இப்படி பேசி மாட்டிக்கொள்கிறார் - உதயநிதி ஸ்டாலின்

    நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் தான் கூறியதற்கு ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை ஆதராமாகக் காட்டினார். ரஜினியின் கருத்து குறித்து பேசிய நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினி விஷயம் தெரியாமல் அவ்வப்போது இப்படி பேசி மாட்டிக்கொள்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

    13:25 (IST)21 Jan 2020

    ஜூன் 1 முதல் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை’ அமல்

    'ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை' திட்டம் ஜூன் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் இத்திட்டத்தை ஜன., மாதம் அமல்படுத்தப்படும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக முதல்கட்டமாக ஜன.,1ம் தேதியே 12 மாநிலங்களில் இதற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டுவிட்டது எனவும் கூறினார்.

    12:48 (IST)21 Jan 2020

    ரஜினியின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது – திருமாவளவன்

    துக்ளக் விழாவில், 1971 பெரியார் பேரணி தொடர்பாக தான் கூறிய கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்ற ரஜினியின் கருத்து தனக்கு அதிர்ச்சியளித்திருப்பதாக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    12:00 (IST)21 Jan 2020

    நீட் பயிற்சி வகுப்புகள் திடீர் நிறுத்தம்

    அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்குவதற்காக, அமெரிக்க நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மார்ச் மாதம், மீண்டும் இந்த பயிற்சி வகுப்புகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    11:56 (IST)21 Jan 2020

    5,8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் – அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு

    5,8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும், இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

    11:28 (IST)21 Jan 2020

    ரஜினிக்கு தமிழகம் நன்றி செலுத்த வேண்டும்

    ரஜினியின் ஆன்மிக வெளிப்பாடுதான் இது. யாருடைய நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி இழி்வுபடுத்துவது தவறு என்பதை ரஜினி வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு தமிழகம் நன்றி செலுத்த வேண்டும் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    11:02 (IST)21 Jan 2020

    5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - ராமதாஸ் எதிர்ப்பு

    5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது ஆகும். தேர்வுகள் திறமையை வளர்க்க வேண்டும்; மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடாது. இதேநிலை நீடித்தால் ஒன்றாம் வகுப்புக்கும், இரண்டாம் வகுப்புக்கும் கூட பொதுத் தேர்வு வந்து விடும் போலிருக்கிறது! என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    10:38 (IST)21 Jan 2020

    ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு அவசர கூட்டம்

    ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கட்சியின் ஆக்கப்பணிகள் தொடர்பாக விவாதிப்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் கட்சி செயற்குழு அவசர கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    10:24 (IST)21 Jan 2020

    மன்னிப்பு கேட்க மாட்டேன் : ரஜினிகாந்த்

    1971ம் ஆண்டில் சேலத்தில் நடந்த பெரியார் பேரணி குறித்து துக்ளக் விழாவில் தான் கற்பனையாக எதுவும் பேசவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது, 1971ம் பேரணி தொடர்பாக தான் கேள்விப்பட்டதையும், பத்திரிகைகளில் வெளிவந்ததை தான் நான் பேசினேன். கற்பனையாக எதுவும் பேசவில்லை. இதற்காக தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

    10:12 (IST)21 Jan 2020

    பெட்ரோல், டீசல் விலை குறைவு

    சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.77.72 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.71.90ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

    10:07 (IST)21 Jan 2020

    கூட்டணியில் முரண்பாடு வருவது இயல்பு – திருமாவளவன்

    உள்ளாட்சி தேர்தல்களில் ஒரு சில இடங்களில் தனியாக போட்டியிட்டாலும் திமுகவுடன் கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை , கூட்டணியில் முரண்பாடு வருவது இயல்பு என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

    Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Live Updates : நடப்பு, 2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்த பின், பட்ஜெட் தொடர்பான ஆவணங்கள் அச்சிடப்படும். பட்ஜெட் அச்சிடும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், அதன் ரகசியத்தை காக்க, பார்லிமென்டில் தங்குவது மரபு. இவர்களுக்கு உணவு சமைத்து வழங்கப்படும். இந்த பணிகள், அல்வா கிளறும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

    'தி.மு.க., ஆட்சியில், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நியூட்ரினா என, அனைத்திற்கும் அனுமதி கொடுத்துவிட்டு, தற்போது வானத்திலிருந்து குதித்ததுபோல், ஸ்டாலின் பேசுகிறார். ''ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு, தமிழக அரசு ஒப்புதல் வழங்காது,'' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

    Tamil Nadu Thanjavur Narendra Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment