/tamil-ie/media/media_files/uploads/2019/12/Jayalalithaa-death-anniversary.jpg)
Jayalalithaa death anniversary
Tamil Nadu news today updates : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இறந்த 17 பேரின் குடும்பத்தை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார். 10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கிய அவர், தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இந்த வழக்கில் கைதான சிவசுப்பிரமணியனுக்கு டிசம்பர் 17 வரை நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஐ.எ.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாலும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் சுந்தர் பிச்சை.
Live Blog
Tamil Nadu news today updates, Chennai rains, TN politics, local body elections : தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
ஜெயலலிதா 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது சமாதியில் தலைவர்கள் அஞ்சலி.
எடப்பாடி, ஓ.பி.எஸ் காலை 10 மணிக்கு அண்ணாசாலையில் இருந்து அஞ்சலி ஊர்வலம் தொடக்கம். 10:30 மணிக்கு ஜெ. சமாதியில் அஞ்சலி.
டிடிவி தினகரன் காலை 11 மணிக்கு அண்ணாசிலையில் இருந்து ஊர்வலம் தொடக்கம். பின்னர் சமாதியில் அஞ்சலி.
ஜெ.தீபா, மாதவன் காலை 7:30 மணிக்கு ஜெ. சமாதியில் அஞ்சலி
மண்ணடியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் பல்லாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்ற போது அந்தக் காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து, கிண்டி, ராஜ்பவன் ஆகிய பகுதிகளில் இருந்து, 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதனால், அப்பகுதியில், அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு உள்ளனர்.
சூடானில் தீ விபத்தில் தமிழர்கள் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளிவரும் நிலையில், காணாமல் போன தமிழர்கள் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழர்கள் பலி குறித்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லியில் கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங்கின் இல்லத்தில் இன்று நடைபெற்ற கடற்படை தின வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
New Delhi: President Ram Nath Kovind, Prime Minister Narendra Modi and Defence Minister Rajnath Singh at Navy Day at home reception at Navy Chief Admiral Karambir Singh’s residence, today. pic.twitter.com/YoxbMjgb7E
— ANI (@ANI) December 4, 2019
கோவை மேட்டுப்பாளையம் அருகே நடூர் கிராமத்தில் திங்கள்கிழமை தடுப்புச் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தனர். இயக்குனர் பா.ரஞ்சித் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 17 பேர் மரணத்திற்கு காரணமான வீட்டு உரிமையாளர் மீது ஏன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்ககூடாது என்று கேள்வி எழுப்பினார். தலித்துகள் அரசியல் அதிகாரத்திற்கு வராதவரை அவர்களது கோரிக்கைகள் மூன்றாம் பட்சமாகவே பார்க்கப்படும் என்று கூறினார்.
சூடான் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சூடான் தீ விபத்து தொடர்பாக தகவல் அறிய 249-921917471 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட் செய்துள்ளார்.
The Embassy representative has rushed to the site. A 24-hour emergency hotline 249-921917471 has been set up by @EoI_Khartoum.
Embassy is also putting out updates on social media.Our prayers are with the workers and their families.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) December 4, 2019
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்: சூடானில் தலைநகர் கர்த்தோம் பஹ்ரி பகுதியில் உள்ள “சலூமி” என்ற செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட ஒரு பெரிய தீ விபத்தில் பற்றிய சோகமான செய்தி கிடைத்துள்ளது. இதில் சில இந்தியத் தொழிலாளர்கள் உயிரிழந்துவிட்டார்கள். இன்னும் சிலர் படுகாயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து மிகுந்த வருத்தப்படுகிறோம். என்று தெரிவித்துள்ளார்.
சூடான் தலைநகர் கர்த்தோமில் ஒரு செராமிக் தொழிற்சாலையில் எரிபொருள் நிரப்பப்பட்ட ஒரு டேங்கர் லாரி தீப்பிடித்து எந்து வெடித்ததால் தொழிற்சாலை முழுவதும் பரவியது. இந்த தீவிபத்தில் 23 படு பலி; 130 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலியானவர்களில் 18 பேர் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது.
FIRE INCIDENT : SEELA CERAMIC FACTORY, BAHRI, KHARTOUM : #Sudan pic.twitter.com/0J9wkztNnt
— Indian Kim Jong Un (@ChowkidarKim) December 4, 2019
திட்டக்குடி வெள்ளாற்றில் குப்பைகளை கொட்டிய விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரனை கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
ஆற்றுநீரில் கொட்டப்படும் பேரூராட்சிக் கழிவுகள் #Cuddalore https://t.co/VZMmr68o8z
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 4, 2019
ஈரோடு புர்கூரில் சரியான சாலை வசதி இல்லாத காரணத்தால் அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் கர்ப்பிணிப் பெண்ணை பிரசவத்திற்காக 6 கி.மீ தூரம் தூளி கட்டி சென்ற சம்பவம் நடந்துள்ளது. கிராம வாசிகளுடன் அந்த பெண்ணின் கணவர் ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்திற்கு செல்ல மலையில் ஏறினார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அந்த பெண்ணுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலம்.
#WATCH Pregnant woman carried in a cloth cradle for 6 kms as ambulance couldn't reach due to lack of proper roads in Burgur, Erode. Woman's husband with villagers trekked to reach ambulance. She delivered a boy, yesterday, on way to hospital, mother & child are fine. #TamilNadu pic.twitter.com/AmIJ0MKG1R
— ANI (@ANI) December 4, 2019
பொன் மாணிக்கவேலுவுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில், பொன் மாணிக்கவேலின் பதவி காலம் முடிவடைந்ததால் உடனடியாக ஆவணங்களை ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளார். மேலும், ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு எனவும் கடிதத்தில் அபய்குமார் சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. ப.சிதம்பரத்தை 106 நாட்கள் சிறையில் வைத்தது பழிவாங்கும் நடவடிக்கையாகும் என்று டுவிட் செய்துள்ளார்.
Mr P Chidambaram’s 106 day incarceration was vengeful & vindictive. I'm glad that the SC has granted him bail. I'm confident that he will be able to prove his innocence in a fair trial.
— Rahul Gandhi (@RahulGandhi) December 4, 2019
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் கிரித் பிரேம்ஜி பாய், இறந்தவரின் உடலை ரயில் மூலமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு வசதிகள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ள ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், இந்த வசதி பல ஆண்டுகளாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் நீலமேகம், முகமது ரஸ்வி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளனர். வழக்கு குறித்த ஆவணங்களை படித்த பின், வழக்கை பட்டியலிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மனு அளித்துள்ளது. தொகுதி மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.27, 30ல் தேர்தல் அறிவிக்கப்பட்ட சூழலில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
தன்னைச் சுற்றி எவ்வளவு சர்ச்சைகள் எழுந்தாலும், அதைப் பற்றியெல்லாம் கண்டுக்கொள்ளாமல், சரியாக 7 மணிக்கு ஆன்லைனில் ஆஜராகும் நித்தி இதுநாள் வரை தியான வகுப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிலையில், இப்போது தன்னை விமர்சிப்பவர்களை பற்றியும் பேசி கலகலப்பூட்டி வருகிறார். ஏமாற்றி, ஏமாற்றி அதனால் வரும் சலிப்பால் மட்டும் அதனை விட வேண்டும் எனவும் சமீபத்திய வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்படை வீரர்களின் சேவையும், தியாகமும் நாட்டை வலுவானதாக மாற்றியுள்ளதாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
On Navy Day, we salute our courageous navy personnel. Their valuable service and sacrifice have made our nation stronger and safer. pic.twitter.com/AVe6rMIZkF
— Narendra Modi (@narendramodi) December 4, 2019
சர்சைகளுக்கு பெயர் போன நித்யானந்தா, தனி தீவில் ஹிந்துக்களுக்கான தனி நாடு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிந்துக்களுக்காக 'கைலாசா' என்ற நாட்டை உருவாக்குவதாகவும், அது எல்லைகள் அற்ற ஹிந்து நாடாக இருக்கும் எனவும் நித்தியானந்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்காக ‘கைலாசா’ என்ற பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டின் பிரதமராக நித்தியானந்தா இருப்பார் எனவும் அவரின் கீழ் 10 துறைகள் இருக்கும் எனவும் அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். தானியங்கி கார்கள், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்கள் ஆல்பபெட் நிறுவனத்தின் கீழ் உள்ளன. 'ஆல்பபெட்' நிறுவன சி.இ.ஓ.வாக இருந்த லாரி பேஜ்க்கு பதிலாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். கூகுள் நிறுவன சி.இ.ஓ பொறுப்புடன் கூடுதலாக ஆல்பபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ பொறுப்பையும் கவனிக்கவிருக்கிறார் சுந்தர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights