தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு இன்று (மார்ச் 2) தொடங்கியது. பிளஸ் 1 தேர்வு மார்ச் 4-ம் தேதியும் தொடங்குகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a1520-300x199.jpg)
இதுகுறித்து மாணவர்கள் தங்களது ஐயங்களைத் தெரிவித்து பயன்பெற வசதியாக முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a1521-300x202.jpg)
2019-20-ம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி மார்ச் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a1522-300x203.jpg)
அதே போல், பிளஸ் 1 பொதுத்தேர்வானது மார்ச் 4-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரையும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a1523-300x200.jpg)
இதில், பிளஸ் 2- பொதுத் தேர்வை பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7 ஆயிரத்து 276 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a1524-300x200.jpg)
பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களில் 19 ஆயிரத்து 166 தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 35 ஆயிரத்து 525 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a1525-300x202.jpg)
சென்னையில் மட்டும், 410 பள்ளிகளில் இருந்து 160 மையங்களில் 47 ஆயிரத்து 264 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a1526-300x198.jpg)
அதே போல் மார்ச் 4-ம் தேதி தொடங்கும் பிளஸ் 1- பொதுத்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 7 ஆயிரத்து 400 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a1527-300x201.jpg)
மேலும், கடந்தாண்டு நடைபெற்ற மார்ச், ஜூன் மேல்நிலை முதலாண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாமல், தற்போது பிளஸ் 2 பயிலும் 50 ஆயிரத்து 650 பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு மீண்டும் தேர்வு எழுதுகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a1529-300x202.jpg)
மார்ச் 27-ம் தேதி தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம் மற்றும்புதுச்சேரியில் 12 ஆயிரத்து 687 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 45 ஆயிரத்து 6 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 10 ஆயிரத்து 742 பேர் என 9 லட்சத்து 55 ஆயிரத்து 748 மாணவர்கள் எழுதுகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a1530-300x200.jpg)
தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைத்தல் பொதுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள்/ தேர்வர்கள் / பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களைத் தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a1531-300x200.jpg)
தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a1532-300x200.jpg)
தேர்வுக் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்கள்
9385494105
9385494115
9385494120
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a1533-300x201.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a1534-300x202.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a1535-300x201.jpg)
ஆல் தி பெஸ்ட் ஸ்டூடண்ட்ஸ்!!!