/indian-express-tamil/media/media_files/2025/07/11/tamilnadu-dgp-shankar-jiwal-2025-07-11-12-25-11.jpg)
Tamilnadu DGP Shankar Jiwal
தமிழக காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையிலும், சீரான நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலும் அவ்வப்போது பணியிட மாற்றங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், தற்போது தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், 40 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த மாற்றங்கள் துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) மற்றும் துணை ஆணையர் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளை உள்ளடக்கியது. சென்னை, கடலூர், திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த காவல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இளைஞர் அஜித் குமார் மரணத்தைத் தொடர்ந்து மானாமதுரை டிஎஸ்பியாக இருந்த சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது காரைக்குடி டிஎஸ்பியாக இருந்த பார்த்திபன், மானாமதுரை டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.