Advertisment

அமைச்சர் மகன் – பேரன் மீது தாக்குதல்; 6 பேருக்கு போலீஸ் வலை

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மகன் மற்றும் பேரன் மீது சென்னை திரையரங்கில் தாக்குதல்; 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் தேடல்

author-image
WebDesk
New Update
Tamilnadu

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மகன் மற்றும் பேரன் மீது சென்னை திரையரங்கில் தாக்குதல்; 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் தேடல்

சென்னை திரையரங்கில் அமைச்சர் மகன் மற்றும் பேரனை தாக்கிய 6 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகிறது.

Advertisment

தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரனின் மகன், பேரன் உள்ளிட்ட குடும்பத்தினர் தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தியேட்டருக்கு நேற்று இரவு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தைப் பார்க்கச் சென்றுள்ளனர்.

இரவு 10.50 மணிக்கு காட்சி தொடங்கியது. படம் ஓடிக் கொண்டிருந்த போது அவர்களுக்கு பின் இருக்கையில் அமர்ந்து இருந்த 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் காட்சிகளை பார்த்து விசில் அடித்தும், ஆவேசமாக கூச்சல் போட்டும் இடையூறு செய்து கொண்டிருந்தனர்.

உடனே அமைச்சரின் குடும்பத்தினர் மட்டும் அருகிலிருந்த சக பார்வையாளர்கள் அவர்களை அமைதியாக இருங்கள் என்று கூறியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென அமைச்சரின் மகன் ரமேஷ் மற்றும் பேரன் கதிர் ஆகியோரை எதிர்தரப்பு தாக்கி உள்ளனர். இதில் இருவருக்கும் சிறு காயம் ஏற்பட்டது.

உடனே தியேட்டர் நிர்வாகத்தினர் சமாதானப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கிடையில், அவர்கள் 6 பேரும் தியேட்டரில் இருந்து தப்பி சென்றுவிட்டார்கள்.

காயம் அடைந்த கதிர் உடனடியாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதிகாலை 4 அவர் வீடு திரும்பினார்.

இது தொடர்பாக, அமைச்சர் மகன் அளித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் தேடி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment