Advertisment

ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா மோசடிக்கு தொடர்பு? போலீஸ் விசாரணை

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை; ஆருத்ரா தங்க கடன் திட்ட மோசடிக்கு தொடர்பா? சென்னை காவல்துறை தீவிர விசாரணை

author-image
WebDesk
New Update
armstrong 112

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, அவரது கொலைக்கும் ஆருத்ரா தங்கக் கடன் திட்ட மோசடிக்கும் தொடர்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை சென்னை காவல்துறை ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisment

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பெரம்பர் செம்பியம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே பேசிக் கொண்டிருந்தப்போது 3 இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், வடசென்னை காவல் கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடைபெற்றதாக தற்போது கைதான பொன்னை பாலு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆற்காடு சுரேஷ் ஆகஸ்ட் 18, 2023 அன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு சந்தேக நபர்களில் ஒருவரான ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷை ஆம்ஸ்ட்ராங் கொலை செய்ததாக நம்பி, தற்போது பழி தீர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜூலை 5 ஆம் தேதி ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் அல்லது ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஆற்காடு சுரேஷின் முதல் ஆண்டு நினைவு தினத்திற்குள் ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல அவரது கும்பல் முடிவு செய்ததாக பொன்னை பாலுவிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர்ஸ் கூறுகையில், "ஆற்காடு சுரேஷ் கொலையில் ஆம்ஸ்ட்ராங்கின் பங்கு உள்ளதா என்பதை கண்டறிய மறு ஆய்வு செய்து வருகிறோம்" என்றார்.

இந்தநிலையில் ஆருத்ரா தங்க கடன் திட்ட மோசடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் இடையேயான தொடர்பு குறித்து சென்னை காவல்துறை விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆருத்ரா மோசடி விவகாரத்தில் ஆற்காடு சுரேஷ் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். அதேநேரம் ஆம்ஸ்ட்ராங், ஆருத்ராவில் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்களுக்கு பணத்தை மீட்டு கொடுக்கும் நடவடிக்கைகளை செய்து வந்துள்ளார். இதுதொடர்பாகவும், ஆற்காடு சுரேஷ் மற்றும் ஆம்ஸ்ட்ராங் இடையே பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த கொலையில் ஆருத்ரா மோசடியின் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்தநிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை ஆருத்ரா மோசடி விவகாரத்தின் தொடர்பு குறித்தும் போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment