Advertisment

தனியார் நிறுவனங்களின் பால் விலை மீண்டும் உயர்வு; தயிர் விலையும் அதிகரிப்பு

தமிழகத்தில் 2 தனியார் நிறுவனங்களில் பால் மற்றும் தயிர் விலை உயர்வு; பால் முகவர்கள் சங்கம் எதிர்ப்பு

author-image
WebDesk
New Update
milk

தமிழகத்தில் 2 தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் விற்பனையாகும் ஆந்திராவை சேர்ந்த டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி உள்ளிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் கடந்த டிசம்பர் மாதம் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது. இதனால் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் 2 தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி உள்ளது. தனியார் நிறுவனங்களின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. 

இதுதொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; ”'திருமலா' பால் நிறுவனம் 1-ம் தேதி (இன்று), 'ஜெர்சி' நிறுவனம் 3-ம் தேதி முதலும் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், தயிர் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரையிலும் உயர்த்துவதாக சுற்றறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்துக்கு முன்பு இருந்த பால் கொள்முதல் விலையை விட தற்போது லிட்டருக்கு 3 ரூபாய் குறைவாகவே அனைத்து தனியார் நிறுவனங்களும் கொள்முதல் விலையாக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வருகின்றன.

Advertisment
Advertisement

எனவே தனியார் பால் நிறுவனங்களை வரன் முறைப்படுத்தி பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் இயற்றிட மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.”

Tamil Nadu Milk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment