தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் நிலையில், தமிழக பொது சுகாதாரத்துறை பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், கொரோனா பரவாமல் தடுக்கவும், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும், தடுப்புப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, அண்மைக் காலமாக கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, கொரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.