’தமிழக ஆளுநர்’; புதிய சர்ச்சையை கிளப்பிய தமிழ்நாடு ஆளுநரின் பொங்கல் அழைப்பிதழ்

பொங்கலுக்கான தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியின் சமீபத்திய அழைப்பிதழ்களில் மாநில அரசின் சின்னம் இல்லை, மத்திய அரசின் சின்னம் மட்டுமே உள்ளது

பொங்கலுக்கான தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியின் சமீபத்திய அழைப்பிதழ்களில் மாநில அரசின் சின்னம் இல்லை, மத்திய அரசின் சின்னம் மட்டுமே உள்ளது

author-image
WebDesk
New Update
’தமிழக ஆளுநர்’; புதிய சர்ச்சையை கிளப்பிய தமிழ்நாடு ஆளுநரின் பொங்கல் அழைப்பிதழ்

Arun Janardhanan

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பொங்கல் பண்டிகைக்கான அழைப்பிதழ்களை மாநில அரசின் முத்திரை இல்லாமல் மத்திய அரசின் முத்திரையுடன் அனுப்பி, தன்னை ‘தமிழக ஆளுனர்’ என்று குறிப்பிட்டு மற்றொரு சர்ச்சையை கிளப்பினார். கடந்த வாரம் தமிழ்நாட்டின் பெயரை ‘தமிழகம்’ என மாற்ற வேண்டும் என்ற ஆளுநரின் பரிந்துரை ஆளும் தி.மு.க மற்றும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.

Advertisment

ஆளுனருக்கும், அரசுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வரும் வேளையில் இந்த அழைப்பிதழ் சர்ச்சையும் வந்துள்ளது. திங்களன்று, தமிழக சட்டசபையில் வாசிக்கப்பட்ட தயார் செய்யப்பட்ட உரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றங்கள் செய்ததையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அசல் உரையை மட்டுமே பதிவேடுகளில் வைக்குமாறு கோரினார், இதனால் ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இதையும் படியுங்கள்: தமிழ்நாடு அல்லது தமிழகம்? கவர்னர் – தி.மு.க மோதலில் மொழிபெயர்ப்பு தோல்வி

இதனிடையே, வி.ஐ.பி.,க்கள் மற்றும் மூத்த அரசுப் பிரமுகர்களுக்கு சமீபத்தில் அனுப்பப்பட்ட பொங்கல் அழைப்பிதழ் பலத்த எதிர்விளைவுகளைத் தூண்டியுள்ளது, ஏனெனில், ஏப்ரல் 2022 இல் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு அனுப்பப்பட்டவை உட்பட, ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வந்த இதேபோன்ற அழைப்பிதழ்களில், 'தமிழ்நாடு ஆளுநர்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisment
Advertisements

publive-image

கடந்த காலங்களில் ராஜ்பவனில் இருந்து வந்த அழைப்பிதழ்களில் தமிழக அரசின் சின்னம் இடம்பெற்றிருந்ததற்கு மாறாக, சமீபத்திய அழைப்பிதழில் மத்திய அரசின் சின்னம் மாற்றப்பட்டுள்ளது.

இந்த அழைப்பிதழை ட்விட்டரில் பகிர்ந்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், கடந்த ஆண்டு அனுப்பிய அழைப்பிதழுக்கும் தற்போது அனுப்பிய அழைப்பிதழுக்கும் வேறுபாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ராஜ்பவனில் இருந்து வந்த இந்த ஆண்டுக்கான அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வாசகம் இருப்பதால் தமிழ்நாடு சின்னம் தவிர்க்கப்பட்டு இருக்கிறது என்று கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.,யான சு.வெங்கடேசன் கூறினார்.

சென்னை ராஜ்பவனில் வரும் ஜனவரி 12ஆம் தேதி ஆளுநர் ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் அழைப்பில் பொங்கல் பெருவிழா நடைபெற உள்ளது.

தமிழகம் என்ற சொல்லை தமிழ்நாடு அரசைக் குறிக்கப் பயன்படுத்துவது வழக்கம், குறிப்பாக அது தொடர்பான விஷயங்களைப் பேசும் போது, ​​முதலமைச்சரை ‘தமிழக முதல்வர்’ (முதல்வர் என்றால் முதலமைச்சர்) என்று குறிப்பிடும்போது அவ்வாறு பயன்படுத்துவது வழக்கம். ஆனால், ​​மாநிலத்தின் பெயரை மாற்றும் ஆளுநர் ரவியின் அறிவிப்பு பா.ஜ.க.,வுக்கு ஆதரவாகவும் திராவிட அரசியலுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடாகவும் விளங்கியதில் இருந்தே இந்த வார்த்தை சிக்கலாகிவிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Dmk Governor Rn Ravi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: