scorecardresearch

கைதிகளின் பற்களை பிடுங்கி டார்ச்சர்; பல்வீர் சிங் மீது வழக்கு பதியப்பட்டதா?

“தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், ஒரு சம்பவத்திற்காக வழக்குப்பதிய கோரினால், அதை யாராலும் தடுக்க முடியாது” என்று மாநில உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி கூறினார்.

Criminal case registered against Balveer Singh
சஸ்பெண்ட் செய்யப்பட்ட அம்பாசமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங்

அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் அவருக்கு உதவிய மூத்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் சிறிய குற்றங்களுக்கு காவல்துறையினரால் பிடிக்கப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்வதாக சிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பல்வீர் சிங் மீது கிரிமினல் வழக்கு போடுவதற்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தாலும், மாநில மனித உரிமைகள் ஆணையத்தால் (SHRC) செயல்முறை அமைக்கப்பட்டிருப்பதாக உயர் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

மேலும் சிங் மீது வழக்கு பதிவு செய்ய (எஃப்.ஐ.ஆர்.,) பதிவு செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. கடந்த திங்களன்று காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் SHRC பல்வீர் சிங்கின் வாக்குமூலத்தை பதிவு செய்யப்பட்டது.

“தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், ஒரு சம்பவத்திற்காக வழக்குப்பதிய கோரினால், அதை யாராலும் தடுக்க முடியாது” என்று மாநில உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி கூறினார்.

அதிகாரியின் கூற்றுப்படி, சரவணன், சிங்கின் நடவடிக்கைகள் குறித்து எச்சரித்திருந்தார், ஆனால் கூறப்படும் சித்திரவதை அமர்வுகள் பற்றிய தகவல்களை சேகரிக்கவும் அரசாங்கத்தை எச்சரிக்கவும் தவறிவிட்டார். இதனால் திருநெல்வேலி எஸ்.பி., சரவணன் திங்கள்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu shrc probes to file fir against ips officer balveer singh

Best of Express