/tamil-ie/media/media_files/uploads/2023/04/train-7-1-1-4-1.jpg)
சென்னை-மதுரை ரயில் உயர்த்த தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரள மாநிலம் கண்ணூருக்கு சிறப்பு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து கண்ணூர் சிறப்பு ரயில் (வண்டி எண் 06047) வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 8.25 மணிக்கு சேலம் வந்தடையும்.
இங்கிருந்து 8.35 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக மறுநாள் காலை 5.15 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கத்தில் கண்ணூர்- சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (வண்டி எண் 06048) வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி கண்ணூரில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மாலை 4.20 மணிக்கு சேலம் வந்தடையும்.
இங்கிருந்து 4.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக இரவு 10.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.