சிலை கடத்தல் வழக்குகள் - டிஜிபி அறிக்கை அளிக்க நான்கு வாரகால அவகாசம்
Chennai high court : கொரோனா காரணமாக அதிகாரிகள் எல்லாம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் எனவே மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்து நான்கு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Chennai high court : கொரோனா காரணமாக அதிகாரிகள் எல்லாம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் எனவே மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்து நான்கு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சிலை கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் கேஸ் டைரி மாயமானது தொடர்பான வழக்கில் ,டிஜிபி அறிக்கை அளிக்க மேலும் நான்கு வார கால அவகாசத்தை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்திருந்த மனுவில் தமிழகத்தில் பழமையான சாமி சிலைகள் பல கொள்ளையடிக்கப்பட்டு சர்வதேச சிலை கடத்தல் கும்பல் மூலம் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் என பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
இந்த வகையில் சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், 41 வழக்குகளின் புலன்விசாரணை விவர ஆவணங்களை (கேஸ் டைரி) காணவில்லை. இதனால், அந்த வழக்குகள் கைவிடப்பட்டு விட்டன. அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் தண்டனையில் இருந்து தப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். பொதுவாக மிகமுக்கிய நபர்கள் தொடர்புள்ள சிலை கடத்தல் வழக்குகளை இப்படித்தான் போலீசார் முடித்து வைப்பதாகவும், உயர்அதிகாரிகளுடன், விசாரணை அதிகாரிகள் கூட்டு சேர்ந்து சிலை கடத்தல் வழக்குகளை மூடி மறைக்கின்றனர். இதன்மூலம் அந்த வழக்குகளில் இருந்து குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகின்றனர்.
எனவே இந்த 41 வழக்குகளையும் முடிவுக்கு கொண்டு வர தமிழக டி.ஜி.பி.க்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே உயர்நீதிமன்ற நீதிபதி முன் விசாரணைக்கு வந்த போது இது குறித்து தமிழக டிஜிபி அறிக்கை அளித்து உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் யானை ராஜேந்திரன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி இதில் தொடர்புடைய அதிகாரிகள் பெயர் பட்டியலையும் வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் கொரோனா காரணமாக அதிகாரிகள் எல்லாம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் எனவே மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்து நான்கு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil