Tamil Nadu today news live updates : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கன மழை குறைந்திருக்கிறது. சில இடங்களில் முற்றிலும் மழை நின்றுவிட்டது. அதேசமயம், கேரளாவில் பெய்த பேய் மழை நின்று, மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், சில இடங்களில் மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.50 லட்சம் கனஅடியில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது
சந்திரயான், சுதந்திர தினம்
73வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாய் உழைத்து தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல பாடுபடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதுபோல், மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டி மழையால் முடிவின்றி கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines, Cinema, Sports : இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் இங்கே அறிந்து கொள்ளலாம்
போக்குவரத்து விதிமுறைகளுக்கான பொது அபராதம் ரூ.100- லிருந்து, ரூ.500ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம், ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு தகுதியிழப்பு செய்யப்படும். ஓட்டுநர் உரிமத்தை தகுதியிழப்பு செய்த பின்னர் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். பைக் ரேஸில் ஈடுபட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். சாலைகளில் அதிவேகமாக, பைக் ரேஸில் ஈடுபட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விரைவில் தமிழகம் முழுவதும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா விட்டு சென்ற வெற்றிடத்தை, ஸ்டாலின் மட்டுமே நிரப்புவார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு பிரச்னை; காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடி, அமித்ஷா ராஜதந்திரத்தோடு கையாண்டு இருக்கிறார்கள். எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்க கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் . நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது என்பதால் காஷ்மீர் விவகாரம் தொடர்பான நடவடிக்கையை பாராட்டினேன். தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.
நாட்டின்ங 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தை சேர்ந்த 23 போலீசாருக்கு குடியரசுத்தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், சிறந்த பொதுச்சேவைக்காக, 16 போலீசாருக்கு தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பள்ளிகளில் சாதியை குறிக்கும் அடையாளக் கயிறுகளை மாணவர்கள் அணிந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழக பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.#சாதிஒழிப்பு pic.twitter.com/WZXHMi2kqs
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 14, 2019
பள்ளிகளில் சாதியை குறிக்கும் அடையாளக் கயிறுகளை அணிய கூடாது என்ற பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
கொள்ளையர்களைத் துணிவுடன் விரட்டிய, நெல்லை, கல்யாணிபுரத்தின் சண்முகவேல்-செந்தாமரை இணையருக்கு வாழ்த்துகள்!
தமிழகத்தில் குற்றங்கள் பெருகி, அரசிடம் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாத மக்கள் தம்மைத் தாமே காக்க வேண்டிய சூழல் நிலவுவதை இந்த மூத்த குடிமக்களின் தீரச் செயல் உணர்த்துகிறது! pic.twitter.com/pYeMcCs2Ga
— M.K.Stalin (@mkstalin) August 14, 2019
நெல்லை வீர தம்பதிக்கு அரசியல் தலைவர்கள் தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்
நாளை 12 மணியுடன் விஐபி தரிசனம் நிறைவு பெறுகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் விஐபி தரிசனம் கிடையாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 17-ம் தேதி அன்று ஆறு கால பூஜைகள் நடத்தப்படும். ஆகம விதிகளின் படி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார்
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், 90 நாட்களில் செய்த மக்கள் பணிகளை விளக்கும் 'மக்கள் பணியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, அதனை தயாநிதி மாறன் பெற்றுக் கொண்டார்.
அபிநந்தனின் வீர தீர செயலை பாராட்டி அவருக்கு மத்திய அரசு வீர் சக்ரா விருது அறிவித்துள்ளது. இதே போல், தீயணைப்புத்துறையில் வீரதீர சேவை புரிந்த 56 வீரர்களுக்கும், குடியரசு தலைவர் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இவர்களில், தமிழகத்தை சேர்ந்த அதிகாரி உமாபதி தண்டபாணிக்கு துணிச்சலுக்கான விருது வழங்கப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பொதுச்செயலாளர்களை நியமித்துள்ளார் கமல்ஹாசன். பொதுச்செயலாளர்களாக அருணாச்சலம், ஏ.ஜி.மௌர்யா, ரங்கராஜன், உமாதேவி, பஷீர் அகமது ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அருணாச்சலம் பொதுச்செயலாளராக உள்ள நிலையில் மேலும் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் 154 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டது. சென்னை தலைமை செயலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த புதிய பேருந்து சேவையில், சென்னை மாநகர போக்குவரத்திற்கு 235 பேருந்துகள் வழங்கப்பட்டன. அதே போல், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 118 பேருந்துகள், திருநெல்வேலி போக்குவரத்து கழகத்திற்கு 14 பேருந்துகள், சேலம் போக்குவரத்து கழகத்திற்கு 60 பேருந்துகள் என மொத்தம் 500 பேருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட நவீன வசதியுடன் கூடிய சுற்றுலா பேருந்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
திமுக சார்பில் 2வது நாளாக கேரளாவுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பினார் திமுக தலைவர் ஸ்டாலின். நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனங்களை அண்ணா அறிவாலயத்தில் கொடியசைத்து அனுப்பினார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "செயல்படாமல் உள்ள மாநில அரசை செயல்பட வைக்க துணையாக இருக்கிறது திமுக" என்றார்.
'சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாய் உழைத்து தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்த உறுதியேற்போம்' என நாளை கொண்டாடப்படவுள்ள 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் சுதந்திர தினத் திருநாள் வாழ்த்து செய்தி. #சுதந்திரதினம் #IndiaIndependenceDay #IDayIndia pic.twitter.com/EbneL3DV8Z
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 14, 2019
கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த நீலகிரி மலை ரயில்சேவை மீண்டும் தொடங்கியது.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு சுற்றுலா பயணிகளுடன் மலைரயில் புறப்பட்டு சென்றது.
கனமழை காரணமாக கடந்த 3 நாட்களாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.
சென்னையில் 500 புதிய அரசு பேருந்துகளின் சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 235, அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 118 பேருந்துகள் என சுமார் ரூ.154 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டு இருக்கிறார் வருகிற 17 ஆம் தேதியுடன் தரிசனம் நிறைவடைய உள்ள நிலையில், நேற்று இரவு நடிகர் ரஜினிகாந்த் காஞ்சிபுரம் வந்தார், மனைவி லதாவுடன் நள்ளிரவு 12.30 மணியளவில் அவர் அத்திவரதரை தரிசித்தார், அவரை வரவேற்ற அர்ச்சகர்கள், அத்திவரதரின் சிறப்புகளை விளக்கி கூறி சிறப்பு பூஜைகளை செய்தனர். தரிசனம் முடிந்த பின்னர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.
நாட்டின் 73-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து பதற்ற சூழல் நிலவுவதால் இம்முறை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரிலும் பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப்பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மும்பை, சென்னை போன்ற முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திரையரங்குள் என மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரிலும் சுதந்திர தினம் கோலகலமாக கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights