/tamil-ie/media/media_files/uploads/2019/08/top-image.jpg)
Tamil Nadu News Today Live
தமிழக போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி நடப்போரிடம் வசூலிக்கப்பட்டும் அபராதத் தொகையை உயர்த்தியுள்ளனர்.
இந்த புது விதிமுறையின் படி:
மது அருந்திவிட்டு ஓட்டினால் - 10 ஆயிரம் அபராதம்
ஓட்டுநர் உரிமமம் இல்லாமல் ஓட்டினால் - 5 ஆயிரம் அபராதம்
தலைக்கவசம் அணியாமல் ஓட்டினால் - 1000 மற்றும் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தகுதி இழைப்பு செய்யப்படும்.
பொது சாலைகளில் ரேஸில் ஈடுபட்டால் - 5 ஆயிரம் அபராதம்
இருசக்கர வாகனத்தில் அதிக நபர்களை ஏற்றிச் சென்றால் - ரூ. 2 ஆயிரம் அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு தகுதியிழப்பு செய்யப்படும்.
காரில் சீட்பெல்டு அணியாமல் ஓட்டினால் - 1000 அபராதம்
ஓட்டுநர் உரிமத்தை தகுதி இழப்பு செய்த பின்பு வாகனம் ஓட்டுவோரிடம் ரூ. 10 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்படும்.
சாலை ஒழுங்குமுறை விதிகளை மீறதலுக்கு வசூலிக்கப்படும் அபராதத் தொகை ரூ. 500-ஆக உயர்த்தப்படுகிறது.
தற்போது நடைமுறையில் இருக்கும் அபராதத் தொகை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உருவாக்கவில்லை. அதை, கருத்தில் கொண்டு தமிழக போக்குவரத்து காவல்துறை அபராதத் தொகையை உயர்த்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.