தொடங்கியது வடகிழக்கு பருவமழை... தமிழகத்துக்கு `மஞ்சள் அலர்ட்’ !

சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

author-image
WebDesk
New Update
Tamilnadu weather report, rain in chennai

Tamilnadu weather report, rain in chennai

Tamil Nadu Weather Forecast : வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்துக்கு `மஞ்சள் அலர்ட்’ கொடுத்துள்ளது. `அடுத்த இரண்டு நாள்களுக்கு இந்த எச்சரிக்கை தொடரும். அடுத்தடுத்த நாள்களில் சற்று மழை குறையும். நவம்பர் 3-ம் தேதிக்குப் பிறகு, மீண்டும் தமிழகத்தில் கனமழை தொடங்கும்’ என்று இந்திய வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

சென்னையில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

கதறி அழுத போட்டியாளர்கள்: பிக் பாஸில் என்ன நடந்தது?

செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன், "தமிழகம் மற்றும் கேரளாவில் வடகிழக்குப் பருவமழை இன்று முதல் தொடங்கியது. வடகிழக்குப் பருவமழையின் போது ஆண்டின் சராசரி மழை அளவில், தமிழகம் 60% மழையைப் பெறும். வடகிழக்குப் பருவமழையின் போது தமிழகத்தின் சராசரி மழை அளவு 44 செ.மீ. இந்தாண்டுக்கான மழை பதிவு சராசரியை ஒட்டியோ அல்லது சராசரியை விட அதிகமாகவோ இருக்கும்.

Advertisment
Advertisements

நெல்லை, தென்காசி, விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு வடதமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது, என்றார்.

அதைத் தொடர்ந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

Tamil News Today Live: தமிழகத்துக்கு 2 நாட்கள் மஞ்சள் அலர்ட்

இதனிடையே சென்னையில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்கள் வடகிழக்குப் பருவமழை தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 044-2538 4530, 044 2538 4540 அவசர எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 1913 என்ற டோல் ஃப்ரீ எண்ணையும் தொடர்புகொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Chennai Weather Report Rain In Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: