Tamil Nadu Weather Forecast: வருகின்ற 27(திங்கட்கிழமை) மற்றும் 28-ந்(செவ்வாய்க்கிழமை) தேதிகளில் தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
இன்று (பிப்ரவரி 25ஆம் தேதி) மற்றும் பிப்ரவரி 26 ஆகிய தேதிகளில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும்.