/tamil-ie/media/media_files/uploads/2023/06/Monsoon-3.jpg)
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் வருகின்ற ஜூலை மாதம் 3ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதைப்பற்றி, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனரான பா.செந்தாமரைக்கண்ணன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, "தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன் 30) ஓரிரு இடங்களிலும், வரும் 1, 2-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல, வரும் ஜூலை 3-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கனமழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின்சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 29-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தோவாலாவில் 3செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறை, சின்னக்கல்லாறு, தேனி மாவட்டம் பெரியாறு ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும்அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ.வேகத்திலும் சூறாவளிக் காற்றுவீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்", என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.