Advertisment

இந்த 13 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை மையம் அறிக்கை

Weather forecast Report : தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தள்ளது.

author-image
WebDesk
New Update
இந்த 13 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை மையம் அறிக்கை

TamilNadu Weather forecast Report : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில் புதுச்சேரியில் தொடங்கும், கனமழை, நாளை மறுநாள் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை  வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

Advertisment

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு பெய்யும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து 22ம் தேதி(நாளை), தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்து 23ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். 24ம் தேதி மற்றும் 25ம் தேதிகளில் 23ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில்  மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி, கடலூரில் தலா 19 செமீ மழையும், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடியில் தலா 10 செமீ, பாபநாசம், சேர்மாதேவி, பரங்கிப்பேட்டை, புவனகிரி ஆகிய பகுதிகளில்  தலா 7 செமீ மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை  குன்னூரில் 6 செமீ மழையும், கிருஷ்ணகிரி சூளகிரி, விழுப்புரம் மரக்காணம், வானூரில் தலா 5 செமீ மழை பெய்துள்ளது. திருப்பூர் ஊத்துக்குளி, திருநெல்வேலி அம்பாசமுத்திரம், சேலம் சங்கரி துர்க் , திண்டுக்கல்  பழனி ஆகிய பகுதிகளில் தலா 4 செமீ மழை பெய்துள்ளது. இந்த அறிவப்பில் மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஏதும் இல்லை என அறிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Weather Forecast Report
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment