/tamil-ie/media/media_files/uploads/2018/11/gaja-damages-.................jpg)
Tamil Nadu Weather Fresh Alerts, Tamil Nadu Schools Closed, Bay Of Bengal New Cyclone, Low Pressure, தமிழ்நாடு மழை, கனமழை, வானிலை எச்சரிக்கை, கஜ புயல்
தமிழ்நாட்டுக்கு புதிய புயல் எச்சரிக்கை இல்லை. ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
கஜ புயலுக்கு பிறகு, வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகத்தின் உள் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நேற்று தெரிவித்தார்.
அதன்படி பல மாவட்டங்களில் மழை கொட்டியது. மழை காரணமாக இன்று (நவம்பர் 24) 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை, திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, தர்மபுரி, திருச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர். திருவாரூர், நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து புதிதாக புயல் சின்னமோ, காற்றோ வீசுவதற்கான அறிவிப்பு எதையும் வானிலை ஆய்வு மையம் வெளியிடவில்லை. எனினும் வட கிழக்கு பருவமழை சில இடங்களில் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையமும் புதிய எச்சரிக்கை எதையும் அறிவிக்கவில்லை. நிவாரணப் பணிகளை அதிகாரிகள் முடுக்கி விட்டிருக்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us