Advertisment

தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Tamil Nadu weather report: மன்னார் வளைகுடா பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil nadu weather report

tamil nadu weather

Tamil Nadu weather report: இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.  சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் அறிவித்திருக்கிறார்கள்.

Advertisment

தென் மேற்கு வங்கக் கடலின் பகுதியில், இலங்கை தீவிற்கு அருகே குறைந்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழ் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் அறிவித்திருக்கிறார்கள்.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையவுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு பகுதி நோக்கி நகர்ந்து இலங்கை மற்றும் குமரிக்கடல் இடையே இன்று தொடங்கி விழாயன்று (08/11/2018) கடலைக் கடக்க உள்ளது. இதனால் தென்மேற்கு வங்கக் கடல் பகுதி, குமரிக்கடல், மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளனர்.

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment