தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரெஞ்சு அலர்ட்

மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட தேனி, விருதுநகர், தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட தேனி, விருதுநகர், தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil nadu rain update

Tamil nadu Rain update Today

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக இன்று (மே 15) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீட்டர் முதல் 50 கி.மீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (மே 15) மிக கனமழையும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisment
Advertisements

இந்நிலையில், மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட தேனி, விருதுநகர், தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

நாளை (மே 16) தமிழ்நாட்டில் அநேக  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீட்டர் முதல் 50 கி.மீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும், என்று, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: