Advertisment

Tamil news Highlights: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது

இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Andhra CM Chandrababu Naidu Visits Anna Arivalayam

Tamil News Updates

Petrol and Diesel Price

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil news updates

சந்திரபாபு நாயுடு கைது

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது;

2019- ல் சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.317 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், நந்தியாலா போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்

கொடநாடு வழக்கு முதல் நிலை அறிக்கை தாக்கல்

கொடநாடு கொலை வழக்கில் 5 பக்கங்கள் கொண்ட முதல் நிலை அறிக்கையை உதகை குடும்ப நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிசிஐடி கூடுதல் விசாரணைக்காக சிபிசிஐடி கால அவகாசம் கோரிய நிலையில் விசாரணை அக்.13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சேமிப்பு கிடங்குகளை திறந்து வைத்தார் முதல்வர்

சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக சேமிப்பு கிடங்குகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, மதுரை மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்குகள் திறப்பு

பாஜக வெற்றி

திரிபுராவில் இரு தொகுதிகளில் பாஜக வெற்றி. தான்பூர், போகஸநகர் தொகுதியில் பாஜக வெற்றி.

7 தொகுதி இடைத் தேர்தல்- முன்னிலை நிலவரம்

கேரளாவின் புதுப்பள்ளி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் ஜெய்க்.சி. தாமசை விட 5,000 வாக்குகள் அதிகம் பெற்று, காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன் முன்னிலை வகிக்கிறார்.

உத்திரகாண்ட் மாநிலத்தின் பாகேஷ்வர் தொகுதி இடைத்தேர்தலில், பாஜக வேட்பாளரை விட 750 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.

ஏழுத் தொகுதி இடைத் தேர்தல் முடிவுகள்

புதுடில்லி, திரிபுரா, மேற்கு வங்கம், கேரளா, உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில்  ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படஉள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை சற்று நேரம் முன்பு தொடங்கியது.

ஐ.பெரியசாமி, பா.வளர்மதிக்கு எதிராக வழக்கு

கடந்த 2006-11 திமுக ஆட்சியில் வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும், கடந்த 2001-06 அதிமுக ஆட்சிகாலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகி்த்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினரை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளார். இந்த வழக்குகள் இன்று காலை விசாரணைக்கு வருகிறது.

கருத்து கூற அமைச்சர் உதயநிதிக்கு உரிமை உண்டு- கமல்ஹாசன்

சனாதனம் பற்றி கருத்துச் சொல்ல உதயநிதி ஸ்டாலினுக்கு உரிமை உண்டு, அவருடைய கருத்துடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், அவருடன் விவாதத்தில் ஈடுபடலாம், ஆனால் அரசியல் ஆதாயங்களுக்காக திரித்துக் கூறுவது தவறு என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

விடுமுறை தினத்தை ஈடுசெய்ய வரும் 23ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் திடீர் மழை; விமான சேவை பாதிப்பு

நேற்று பெய்த திடீர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 6 சர்வதேச விமானங்கள் உட்பட 16 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

விஜயவாடாவில் இருந்து 64 பயணிகளுடன் வந்த பயணிகள் விமானம், சென்னையில்  தரையிறங்க முடியாமல், திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

பா.ஜ.க-வுடன் கைகோர்க்கும் குமாரசாமி

 

கர்நாடகாவில் பா.ஜ.க- மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திக்கிறது. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அமித்ஷா ஒப்புதல்- கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா

உம்மன் சாண்டி மகன் வெற்றி

கேரள மாநிலம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் வெற்றி முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவையொட்டி புதுப்பள்ளி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது இடைத்தேர்தலில் காங். சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் போட்டியிட்டார். 36,454 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் சி.பி.எம் வேட்பாளரை வீழ்ச்சி 

இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு விதிவிலக்கு 

ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் விதிவிலக்கு. இலங்கையில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ள போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று நாளில் (ரிசர்வ் டே)போட்டி நடைபெறும்- ஆசிய கிரிக்கெட் கவுன்சில்

அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரி நீக்கம்

மோடி- பைடன் சந்திப்பு. அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை நீக்கிய இந்தியா. பிரதமர் மோடி- ஜோ பைடன்  சந்திப்பு நடக்க உள்ள நிலையில் அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை நீக்கிய இந்தியா. கொண்டக்கடலை, பருப்பு, ஆப்பிள், வால்நட், பாதாம் உள்ளிட்ட பொருட்களுக்கு விதித்த கூடுதல் வரி நீக்கம் 

4 மாவட்டங்களில் கனமழை

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

7 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்

கேரளா - காங்கிரஸ் வெற்றி, உ.பி - சமாஜ்வாடி முன்னிலை, மேற்கு வங்கம் - ஆளும் திரினாமுல் காங்கிரஸ் வெற்றி, ஜார்கண்ட் - ஆளும் ஜே.எம்.எம். வெற்றி, திரிபுரா (2) - பாஜக இரண்டிலும் வெற்றி, உத்தரகாண்ட் - பாஜக வெற்றி

பா.ஜ.க. அரசு மீது பெல்ஜியத்தில் ராகுல்காந்தி விமர்சனம்

"டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டிற்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அழைக்கவில்லை" நாட்டின் 60% மக்களின் உணர்வுகளை பாஜக அரசு மதிப்பதில்லை எனவும் பெல்ஜியத்தில் ராகுல்காந்தி விமர்சனம்

மாரிமுத்துவின் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

"இப்போதான் உச்சத்துக்கு வந்துருக்கேன்னு அவர் சொல்லி 5 நாள் கூட ஆகல.. அதுக்குள்ள இப்படி ஒரு செய்தி..!" - மாரிமுத்துவின் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

மாரிமுத்து மரணம்: கி. வீரமணி அஞ்சலி



நடிகர் மாரிமுத்து மரணத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, “அவரை போல் ஒரு கலைஞர கிடைக்கமாட்டார்” என இரங்கல் தெரிவித்தார்.

இடைத்தேர்தல்: உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி முன்னிலை



உத்தரப் பிரதேச மாநிலம் கோசி இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, அக்கட்சியின் எம்.பி., ராம் கோபால் யாதவ் கூறுகையில், "கோசியில் சமாஜ்வாதி கட்சியின் மாபெரும் வெற்றி, கோசி மக்களின் ஆசீர்வாதத்தை சித்தரிக்கிறது. கோசி வாக்காளர்களுக்கு நன்றி” என்றார்.

7 மாநில இடைத்தேர்தல்: ஜார்க்கண்டில் ஆளுங்கட்சி வெற்றி



7 மாநில இடைத்தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் பெபி தேவி டும்ரி வெற்றி பெற்றார்.

உத்தரப் பிரதேசத்தில் கோசிக்கு பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவு: துணை முதலமைச்சர் பரபரப்பு பேட்டி



உத்தரப் பிரதேச மாநிலம் கோசி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய மாநில துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக், “இது தொடர்பாக உள்ளூர் நிர்வாகிகளிடம் பேசி பிரச்னையை கண்டறிந்து தீர்வு காண்போம்” என்றார்.
7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவருகின்றன.

கோசி சட்டமன்ற தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளரிடம் பாஜக வேட்பாளர் பின்தங்கியுள்ளார்.

ரூ.5200க்கு ஸ்னீக்கர் ஷூ விற்பனை: இரகசியம் பகிர்ந்த ராகினி தத்தா



ப்ளூரல் ஆன்லைனில் ஸ்னீக்கர் ஷூ உள்பட பல்வேறு பொருள்களுக்கு ஆஃபர்கள் உள்ளன. இது தொடர்பாக பிரபலம் ராகினி தத்தா, “தாம் ஆஃபரில் பொருள்கள் வாங்குவது குறித்தும் ஸ்னீக்கர் ஷூக்களின் விலை குறித்தும் பேசியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்கள் லைக் செய்துள்ளனர்.

இதில் ஸ்னீக்கர் ஷூக்கள் ரூ.5200 முதல் கிடைக்கின்றன. இக்காலக்கட்டத்தில் ஸ்னீக்கர் ஷூக்கள் இளந்தலைமுறை மத்தியில் பிரபலமாக உள்ளது.

ஜி20 மாநாட்டில் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை; டெல்லி வந்தார் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லி வந்தடைந்தார். ஜோ பைடன் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் இளையராஜா மீது துப்பாக்கிச்சூடு

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் இளையராஜா மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இளையராஜா தனது வயலுக்கு காரில் சென்ற போது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், முதுகில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளார்.

எங்கள் கவனத்தை திசைத்திருப்பவே மோடி புது சர்ச்சையை முன்னெடுக்கிறார்

பிரஸ்ஸெல்ஸ் நகரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேச்சு: “ஒவ்வொரு முறையும் அதானி விவகாரம் பற்றி நாங்கள் கேள்வி எழுப்பும்போதெல்லாம், எங்கள் கவனத்தை திசைதிருப்ப பிரதமர் மோடி ஒரு புது பிரச்னையை முன்னெடுக்கிறார். இந்தியா? அல்லது பாரத்? விவகாரமும் அப்படியான ஒன்றுதான்” என்று கூறியுள்ளார்.

எனது முன்னுரிமை பட்டியலில் தீவிரவாதம் முதன்மை இடத்தில் உள்ளது - ஐ.நா பொதுச்செயலாளர் 



ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி வந்துள்ள ஐ.நா பொதுச்செயலாளர் அனோட்னியோ குட்டெரஸ் கூறியதாவது: தீவிரவாதம்தான் எனது முன்னுரிமையாக உள்ளது. இது மிக மோசமான மனித உரிமை மீறல் மற்றும் முற்றிலும் நியாயப்படுத்த முடியாதது. பயங்கரவாதம் ஒருபோதும் தீர்வாக இருக்க முடியாது, அது பிரச்சினைகளை மட்டுமே பெருக்குகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புதிதாக நுழைந்தவர்கள் குறித்து அவர் மேலும் கூறியதாவது: கவுன்சிலில் யார் இருக்க வேண்டும் என்பதை வரையறுப்பது ஐ.நா. ஆனால், பாதுகாப்பு கவுன்சிலின் அமைப்பை உலகின் உண்மைகளுக்கு ஏற்ப நாம் மாற்றியமைக்க வேண்டும்.” என்று கூறினார்.

ஜி20 மாநாடு: மோடி, ஜோ பைடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் புதுடெல்லியில் உள்ள முன்னாள் இல்லத்தில் வெள்ளிக்கிழமை பல்வேறு விவகாரங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்ற மூன்று மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபராக ஜோ பைடனின் முதல் இந்தியா வருகை இது. கடைசியாக 2020 பிப்ரவரியில் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்தார்.

ஜி20 உச்சி மாநாட்டில் வதந்தி எச்சரிக்கை செய்த ஒருவர் வடக்கு டெல்லியில் கைது 

ஜி 20 உச்சி மாநாட்டில் சமூக ஊடகங்களில் வதந்தி எச்சரிக்கை செய்ததாக 21 வயது இளைஞர் வடக்கு டெல்லியின் பால்ஸ்வா டெய்ரி பகுதியில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் பிரகதி மைதானம் பகுதியை நோக்கி துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ரிக்ஷா ஒன்று சென்று கொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் கூறினர். துரித நடவடிக்கை எடுத்த பால்ஸ்வா டெய்ரி போலீஸ் குழு குற்றவாளியை கண்டுபிடித்து பொதுவில் பொய்யான தகவல்களை பரப்பியதற்காக கைது செய்தனர்.

டி.சி.பி டெல்லி அவுட்டர் நார்த்தின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் வெள்ளிக்கிழமை குல்தீப் சாஹ் என்பவரின் எக்ஸ் பதிவு குறியிடப்பட்டது. அதில் அவர்  “ஒரு ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களுடன் பிரகதி மைதானத்தை நோக்கிச் செல்கிறார்” என்று கூறினார். இந்த போஸ்டுடன் ஆட்டோவும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பதிவின் பிரச்னையைக் கருத்தில் கொண்டு, போலீசார் சோதனை செய்து, எஸ்.எஸ்.என் பூங்காவில் வசிக்கும் குர்மீத் சிங் (50) பெயரில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோவை கண்டுபிடித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



ஜி20 தலைவர்கள் காலநிலை பாதிப்பை நிறுத்த முடியும்.. ஆனால், விதிகள் மாற வேண்டும - ஐ.நா தலைவர் 

ஐ.நா பொதுச்செயலாளர் அனோட்னியோ குட்டெரெஸ்,   கட்டுப்பாடு இல்லாமல் சுழலும் காலநிலை நெருக்கடியை மீட்டமைக்க ஜி20 தலைவர்களுக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறினார். காலாவதியான மற்றும் நியாயமற்றது என்று அவர் விவரித்த உலகளாவிய நிதி விதிகளை மறுவடிவமைக்க அவர்களை வலியுறுத்தினார்.

“காலநிலை நெருக்கடி வியத்தகு முறையில் மோசமடைந்து வருகிறது - ஆனால் கூட்டுப் பிரதிபலிப்பு லட்சியம், நம்பகத்தன்மை மற்றும் அவசரத்தில் இல்லை” என்று இந்த வார இறுதியில் ஜி20-க்கு தலைமை தாங்கும் இந்திய தலைநகர் புதுடெல்லியில் ஒரு உரையில் குட்டரெஸ் கூறினார்.

ஜி20 ஐ 1.5 டிகிரி இலக்கை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று குட்டெரெஸ் கேட்டுக் கொண்டார் - 2015 பாரிஸ் உடன்படிக்கையின் இலக்கான உலகளாவிய சராசரி வெப்பநிலை உயர்வை தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 2 ° C க்குக் குறைவாகக் கட்டுப்படுத்துவது மற்றும் 1.5 ° இலக்கைக் குறிக்கிறது. "நான் ஒரு காலநிலை ஒற்றுமை ஒப்பந்தத்தை முன்வைத்துள்ளேன் - இதில் பெரிய உமிழ்ப்பாளர்கள் உமிழ்வைக் குறைக்க கூடுதல் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்; மேலும் பணக்கார நாடுகள் இதை அடைய வளர்ந்து வரும் பொருளாதாரங்களை ஆதரிக்கின்றன," என்று குட்டெரெஸ் கூறினார்.

மோடி - பைடன் பேச்சுவார்த்தை முக்கிய அம்சங்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர், சந்திரயான் வெற்றி 

குவாட் வழியாக சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் முதல் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதை ஆதரிப்பது மற்றும் சந்திரயான் -3 நிலவு திட்டத்தின் வெற்றிக்காக இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவிப்பது வரை - பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் வெள்ளிக்கிழமை மாலை பரந்த அளவிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்துவதற்கான அம்சங்க இடம்பெற்றிருந்தன. மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்ற மூன்று மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபராக பைடனின் முதல் இந்தியா வருகை இது. கடைசியாக 2020 பிப்ரவரியில் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்தார்.

மோடி - பைடன் இருதரப்பு பேச்சுவார்த்தை முக்கிய அம்சங்கள்: பாதுகாப்பு ஒப்பந்தங்கள், வர்த்தக ஒப்பந்தங்கள்

📌 பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இருதரப்பு சந்திப்பின் போது, சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், உள்ளடக்கம், பன்மைத்துவம் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் சம வாய்ப்புகள் போன்ற பகிரப்பட்ட மதிப்புகள் குறித்து வலியுறுத்தியதுடன், நாடுகளின் வெற்றிக்கு இவை முக்கியமானவை என்று கூறினார்.

📌 இந்தியாவின் ஜி20 தலைமைக்கு, இந்த குழு எவ்வாறு முக்கியமான விளைவுகளை வழங்குகிறது என்பதை நிரூபித்ததற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டினார். தலைவர்கள் ஜி20-க்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். புதுடெல்லியில் நடைபெறும் தலைவர்களின் உச்சிமாநாட்டின் முடிவுகள், நிலையான வளர்ச்சியை விரைவுபடுத்துதல், பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் நமது மிகப் பெரிய பொதுவான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உள்ளடக்கிய பொருளாதாரக் கொள்கைகளைச் சுற்றி உலகளாவிய ஒருமித்த கருத்தை உருவாக்குதல், பலதரப்பு வளர்ச்சி வங்கிகளை அடிப்படையில் மறுவடிவமைத்தல் மற்றும் அளவிடுதல் உட்பட ஆகிய பகிரப்பட்ட இலக்குகளை முன்னேற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.



📌 இரு தலைவர்களும் சுதந்திரமான, திறந்த, உள்ளடக்கிய, மீள்தன்மை கொண்ட இந்தோ-பசிபிக் பகுதியை ஆதரிப்பதில் குவாடின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

📌 அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீர்திருத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்குவதற்கு தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், இந்தச் சூழலில், 2028-29ல் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தரமற்ற இடத்திற்கான இந்தியாவின் வேட்புமனுவை மீண்டும் வரவேற்றார்.

📌 பிரதமர் மோடி, அமெரிக்க் அதிபர் பைடன் ஆகியோர் நமது உத்தி கூட்டுறவை ஆழப்படுத்துவதில் தொழில்நுட்பத்தின் வரையறுக்கும் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தினர். திறந்த, அணுகக்கூடிய, பாதுகாப்பான, மற்றும் மீள்தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மதிப்புச் சங்கிலிகளை உருவாக்குவதற்கான இந்தியா-அமெரிக்க முன்முயற்சியின் மூலம் தீவிரமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் மூலம் நடந்து வரும் முயற்சிகளைப் பாராட்டினர்.

📌 நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திரயான்-3 வரலாற்றுச் சிறப்புமிக்க தரையிறங்கியதற்கும், இந்தியாவின் முதல் சூரியப் பயணமான ஆதித்யா-எல்1 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கும் பிரதமர் மோடி மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் பைடன் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

India Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment