/indian-express-tamil/media/media_files/2025/01/11/OIpPOBEkBTZWv5fTl5Io.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.23 காசுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.81 காசுக்கும் விற்பனையாகிறது.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை, அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
-
Jan 14, 2025 22:56 IST
ஜல்லிக்கட்டு போட்டி: வெற்றியாளர்களுக்கு முதல்வர் சார்பில் பரிசுகள்
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டரும், துணை முதலமைச்சர் உதயநிதி சார்பில் காரும் வழங்கப்பட உள்ளது.
-
Jan 14, 2025 22:52 IST
உலகில் அதிக நேரம் வேலை செய்யும் தொழிலாளிகள்: இந்தியாவுக்கு முதலிடம்!
இந்தியாவில் ஒரு தொழிலாளி சராசரியாக ஒவ்வொரு வாரமும் 46.7 மணி நேரம் வேலை செய்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. சீனா 46.1 மணி நேரம், பிரேசில் 39 மணி நேரம், அமெரிக்கா 38 மணி நேரம், ஜப்பான் 36.6 மணி நேரம் வேலை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Jan 14, 2025 21:14 IST
சாலை விபத்தில் இருவர் மரணம்: உறவினர்கள் சாலை மறியல்!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சாலை விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த நிலையில்,உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
Jan 14, 2025 19:39 IST
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு: முதலிடம் பிடித்த வீரருக்கு கார் பரிசு!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்ற நிலையில், 19 காளைகளைப் பிடித்து முதல் இடம் பிடித்த கார்த்திக்கு ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள நிசான் கார் பரிசு வழங்ப்பட்டது. 15 காளைகள் பிடித்து 2ஆம் இடம் பிடித்த அரவிந்த் திவாகருக்கு இரு சக்கர வாகனம் பரிசு வழங்கப்பட்டது.
-
Jan 14, 2025 19:01 IST
சபரிமலையில் மகரஜோதி தரிசனம்
சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவமாக பக்தர்களுக்கு காட்சி தந்தார் ஐயப்பன்.
-
Jan 14, 2025 18:44 IST
குறை சொல்வது எந்த வகையில் நியாயம்? - அமைச்சர் முத்துசாமி கேள்வி
'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எந்த ஒரு விதிமீறலும் இருக்க கூடாது என்பது தான் தி.மு.க-வின் நோக்கம். வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் நிலை இருக்கும்போது, எங்களை குறை சொல்வது எந்த வகையில் நியாயம்?' என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
-
Jan 14, 2025 18:36 IST
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - முதல் பரிசாக கார்
அவனியாபுரம் ஜல்லிக்கட்ட்டில் சிறந்த மாடுபிடி வீரராக .கே கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். 19 காளைகளைப் பிடித்த திருப்பரங்குன்றத்தை சேர்ந்த அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
15 காளைகள் பிடித்து அரவிந்தும் இரண்டாம் இடமும், 14 காளைகளை பிடித்த முரளிதரன் மூன்றாம் இடமும் பிடித்தனர்..
-
Jan 14, 2025 18:24 IST
இனிதே நிறைவுற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - அதிக மாடுகளை பிடித்த கார்த்திக்
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இனிதே நிறைவுற்றது. 19 களைகளை அடக்கிய கார்த்தி என்கிற மாடுபிடி வீரர் முதல் பரிசை வென்றார். அவருக்கு கார் பரிசளிக்கப்பட்டது. வி.கே சசிகலா பெயரில் களமாடிய மாடு சிறந்த மாட்டிற்கான பரிசை வென்றது. டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.
-
Jan 14, 2025 17:59 IST
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - இறுதிச் சுற்று
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இறுதிச் சுற்று நடைபெற்று வரும் நிலையில் மழை பெய்து வருகிறது மழையையும் பொறுப்பெடுத்தாமல் காளைகளை வீரர்கள் அடக்கி வருகின்றனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இதுவரை 46 பேருக்கு காயம் அடைந்துள்ளது 10 சுற்றுகள் முடிவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 14, 2025 17:50 IST
களத்தில் நின்று விளையாடிய சசிகலாவின் காளை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சசிகலாவின் காளை களத்தில் நின்று ஒருவரை கூட தொடவிடாமல் நீண்ட நேரம் விளையாடி வெற்றி பெற்றது.
-
Jan 14, 2025 17:37 IST
கடலூர் மாவட்டத்தில் வாகனச் சோதனை - மதுபானங்கள் பறிமுதல்
பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி வரப்பட்ட வாகனங்களை அதிவிரைவு படைவீரர்கள் மூலம் நேரடியாக சென்று சோதனை மேற்கொண்டு மதுபானங்கள் பறிமுதல் செய்துள்ளார். பின்னர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
-
Jan 14, 2025 17:35 IST
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 4 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வு!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் எட்டு சுற்றுகள் முடிவில் 4 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.
-
Jan 14, 2025 17:06 IST
காஷ்மீரில் கண்ணிவெடி தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் காயம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் கண்ணிவெடி வெடித்து 6 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்ணில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி மீது கால் வைத்ததால் வெடித்தது.
-
Jan 14, 2025 16:40 IST
மாடுபிடி வீரர் மரணம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை விளாங்குடியைச் சேர்ந்த நவீன் குமார் மாடு முட்டியதில் உயிரிழந்தார்
-
Jan 14, 2025 16:20 IST
ஸ்டாலினிடம் பொங்கல் வாழ்த்துப்பெற்ற வைரமுத்து
முதலமைச்சர் ஸ்டாலினிடம் பாடலாசிரியர் வைரமுத்து நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்துப் பெற்றார்
-
Jan 14, 2025 15:38 IST
ஆவாரங்காடு காளையை அடக்கிய வீரர்; ரூ.1 லட்சம், 2 தங்க காசுகள் பரிசு
சிவகங்கை ஆவாரங்காடு காளையை அடக்கி அமைச்சர் மூர்த்தி கையால் ரூ.1 லட்சம் பரிசு மற்றும் 2 தங்க காசுகளை அவனியாபுரம் ரஞ்சித் தட்டி சென்றார்
-
Jan 14, 2025 15:35 IST
கைதப்பிரம் தாமோதரன் நம்பூதிரிக்கு "சபரிமலை ஹரிவராசனம்" விருது
2025ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் "சபரிமலை ஹரிவராசனம்" விருது கைதப்பிரம் தாமோதரன் நம்பூதிரிக்கு வழங்கப்பட்டது
-
Jan 14, 2025 15:11 IST
குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடிய அன்புமணி ராமதாஸ்
பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்
-
Jan 14, 2025 15:01 IST
மாடுகள் மீது பவுடர் தூவி அழைத்து வந்த சிறுவனை கைது செய்ய உத்தரவு
அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை வீரர்கள் பிடிக்க முடியாதபடி மாடுகள் மீது பவுடர் தூவி அழைத்து வந்த சிறுவனை கைது செய்ய உத்தரவு. அடுத்த ஆண்டு பங்கேற்க டோக்கனும் வழங்கப்படாது எனவும், பவுடர் தூவி அழைத்து வரப்படும் காளைகளுக்கு பரிசு கிடையாது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரிக்கை.
-
Jan 14, 2025 14:43 IST
மருத்துவ பரிசோதனையில் 25 காளைகள் தகுதி இழந்தது
25 காளைகள் தகுதி இழந்தது அவனியாபுரத்தில் 659 காலைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 25 காளைகள் தகுதி இழந்தது . ஜல்லிக்கட்டு வாடி வாசலுக்கு 634 காளைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்.
-
Jan 14, 2025 14:36 IST
மாடுபிடி வீரர் சிகிச்சை பெற்று வருகிறார்
நிலையூர் சேர்ந்த அஜித் குமார் மாடுபிடி வீரர் காளையை பிடிக்க முற்பட்டபோது கைமுறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
-
Jan 14, 2025 14:34 IST
மாடுபிடி வீரர் திருநாவுக்கரசுக்கு குவியும் பாராட்டு
ஜல்லிக்கட்டில் தான் பரிசாக பெற்ற தங்க நாணயம் மற்றும் பரிசு பொருட்களை காளை உரிமையாளரான ஆர்த்தியிடம் வழங்கிய மாடுபிடி வீரர் திருநாவுக்கரசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
-
Jan 14, 2025 14:27 IST
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- 8ஆவது சுற்று
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 8ஆவது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 7 சுற்றுகள் முடிவில் மொத்தம் 558 மாடுகள் களம் கண்டா நிலையில் 128 மாடுகள் பிடிப்பட்டன.
-
Jan 14, 2025 14:01 IST
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தள்ளுமுள்ளு
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பங்கேற்க வந்த மாடுபிடி வீரர் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு. மருத்துவ பரிசோதனை செய்ய 100க்கும் மேற்பட்ட வீரர்கள் ஒரே நேரத்தில் செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக தகவல்.
-
Jan 14, 2025 13:47 IST
சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக சிறப்பு ரயில்கள் பட்டியலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
Jan 14, 2025 13:25 IST
இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!
ராமநாதபுரம், தென்காசி், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Jan 14, 2025 13:20 IST
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: எஸ்எஸ்ஐ, காவலர் காயம்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தடுப்புகள் இடித்ததில் சிறப்பு உதவி ஆய்வாளர், காவலர் காயம். இதுவரை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் 10 பேர், மாடு உரிமையாளர் 11 பேர், பார்வையாளர் இருவருக்கு என 23 பேர் காயமடைந்துள்ளனர். -
Jan 14, 2025 12:47 IST
சரத்குமார் படத்தின் புதிய அப்டேட்
அகில் எம் போஸ் இயக்கத்தில் சரத் குமார் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது ‘ஏழாம் இரவில்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் டைட்டில் போஸ்டரை பகிர்ந்து, படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவிப்பு
-
Jan 14, 2025 12:46 IST
ஆளுநர் ரவி குறித்து துரைமுருகன் பேட்டி
ஆளுநர் அரசியல்வாதியாக செயல்படுகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.ஆளுநருக்கு உரிய மாண்பு, மரியாதையை இழந்து விட்டு ஆட்சியுடன் சண்டையிடுகிறார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
-
Jan 14, 2025 12:25 IST
டெல்லி முதலமைச்சர் அதிஷி மீது வழக்குப்பதிவு
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக டெல்லி முதலமைச்சர் அதிஷி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Jan 14, 2025 12:06 IST
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் ஐந்தாம் சுற்றில் பங்கேற்றவர்களில் 2 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வாகி உள்ளன.
-
Jan 14, 2025 11:56 IST
சாந்தோம் பேராலயத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
“மதங்களை தாண்டி தமிழர்களாக ஒன்றுபட்டு மத நல்லிணக்கத்தோடு சமத்துவ பொங்கலை கொண்டாடுகிறோம்” என சாந்தோம் பேராலய அதிபர் அருட்தந்தை வின்சென்ட் சின்னதுரை கூறினார்.
-
Jan 14, 2025 11:40 IST
மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
பொங்கல் திருநாளையொட்டி மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம். சென்னையில் 14,15,16 ஆம் தேதிகளில் ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்றும் 17 ம் தேதி சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
Jan 14, 2025 11:37 IST
நடிகர் அஜித்குமார் பொங்கல் வாழ்த்து
துபாய் கார் ரேஸில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்திய அனைவருக்கு நன்றி தெரிவித்து AK அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.
-
Jan 14, 2025 11:24 IST
கோரிக்கை மனு அளிக்க த.வெ.க-வினர் திட்டம்
பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு குழுவினரை த.வெ.க தலைவர் விஜய் நேரில் சந்திப்பதற்கு அனுமதி வழங்க கோரி, மாவட்ட ஆட்சியரிடம் அக்கட்சியினர் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Jan 14, 2025 10:39 IST
ஜல்லிகட்டு மூன்றாம் சுற்று முடிவு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் மூன்றாம் சுற்று முடிவில் 89 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் 27 காளைகளை, வீரர்கள் அடக்கினர். மேலும், இறுதிச் சுற்றில் பங்கேற்க 4 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
-
Jan 14, 2025 10:17 IST
12 பேருக்கு காயம்
மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 14 பேருக்கு காயம் ஏற்பட்டது. 7 வீரர்கள், மாடு உரிமையாளர்கள் 6 பேர் மற்றும் ஒரு பார்வையாளர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
-
Jan 14, 2025 09:31 IST
கவிஞர் வைரமுத்து பொங்கல் வாழ்த்து
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். "தமிழன் என்ற இனத்திற்கு உரித்தான பொங்கல் விழாவை கூடிக் கொண்டாடுங்கள்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jan 14, 2025 09:10 IST
நா.த.க வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, சீதாலட்சுமி போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
-
Jan 14, 2025 08:51 IST
ஜல்லிக்கட்டு 2-வது சுற்றில் 10 பேர் காயம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் இரண்டாவது சுற்றில் 6 வீரர்கள், 3 மாடு உரிமையாளர்கள், 1 பார்வையாளர் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
-
Jan 14, 2025 08:40 IST
சர்வதேச பலூன் திருவிழா
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது. தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் 10-வது ஆண்டாக இந்நிகழ்வு நடைபெறுகிறது.
-
Jan 14, 2025 08:14 IST
காயம் காரணமாக வீரர் விலகல்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மூன்று காளைகளை அடக்கிய மணிகண்டன் என்ற வீரர், காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.
-
Jan 14, 2025 07:46 IST
ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி, "உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் - உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!
உதயசூரியனின் ஒளியெனத் தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்! புதுப்பானையில் தைப்பொங்கல் பொங்குவதுபோல் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jan 14, 2025 07:28 IST
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டி போட்டி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டியில் 1,100 காளைகளும், 900 வீரர்களும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.