/indian-express-tamil/media/media_files/m2Iy8G1hJGTCarBQV0bP.webp)
-
May 04, 2025 00:15 IST
மதுபோதையில் காரை வைத்து மோதிய இளைஞர்: ஒருவர் மரணம்
ராமநாதபுரம் அருகே மதுபோதையில் அச்சுறுத்தும் வகையில் காரை ஒட்டி வந்த இளைஞருடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். இந்த வாக்குவாதத்திற்கு பின் மீண்டும் காரை அதிவேகமாக ஓட்டிவந்து இளைஞர் சாலை ஓரத்தில் இருந்த மக்கள் மீது மோதியதில் ஒருவர் மரணமடைந்தார்,
-
May 03, 2025 20:25 IST
தமிழகத்தில் 11 இடங்களில் 100 டிகிரியை கடந்த வெயில்
வேலூர் 105.80, திருத்தணி 104.00, திருச்சி 103.46, சென்னை 103.28, கரூர் 103.10 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு.
மதுரை 103.10, ஈரோடு 102.56, கடலூர் 101.84, சேலம் 101.48, நாகை 100.94 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது
-
May 03, 2025 18:12 IST
த.வெ.க.,வில் இருந்து வைஷ்ணவி விலகல்
உனக்கெல்லாம் எதுக்கு அரசியல், ஒழுங்கா வீட்டுகுள்ளேயே இரு. உனக்கு என்ன தெரியும் அரசியலை பற்றி என வசம்பு வார்த்தைகளால் நசுக்கப்படுகிறேன். என்னுடைய மக்கள் பணிக்கு ஒரு சிலர் முற்று புள்ளி வைக்க நினைக்கிறார்கள் என குறிப்பிட்டு த.வெ.க.,வில் இருந்து விலகுவதாக வைஷ்ணவி தெரிவித்துள்ளார்
-
May 03, 2025 17:21 IST
ஏற்காடுக்கு மே 4 முதல் கோடைகால சிறப்பு பேருந்து வசதி தொடக்கம்
சேலம் மாவட்டம், ஏற்காட்டை சுற்றிப் பார்க்க நாளை (04.05.2025) முதல் கோடைகால சிறப்பு பேருந்து வசதி தொடங்கப்படுகிறது. புதிய பேருந்து நிலையத்தில் காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து இரவு 7 மணிக்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துக்கான டிக்கெட் ரூ.300, அரை கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. www.tnstc.in, செல்போன் செயலி மூலம் சிறப்பு பேருந்துக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
May 03, 2025 14:26 IST
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கோவை, நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இன்றும் நாளையும், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி காரைக்காலிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு
- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
-
May 03, 2025 13:50 IST
அங்கன்வாடி ஊழியர்கள் 2ஆம் நாளாக போராட்டம்
சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன் தலையில் முக்காடு போட்டு, ஒப்பாரி வைத்து அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம். மே மாதம் முழுமையாக கோடை விடுமுறை, காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு இடங்களில் 2ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
-
May 03, 2025 13:27 IST
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
நீலகிரி, கோவை, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் மே 5ம் தேதியும், ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் மே 6ம் தேதியும் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
May 03, 2025 13:25 IST
தீயிட்டு அழிக்கப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்
மதுரை மாநகர பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 806 கிலோ கஞ்சா நாங்குநேரியில் பாதுகாப்பாக தீயிட்டு அழிக்கப்பட்டது.
-
May 03, 2025 13:24 IST
கோடை வெயிலால் உப்பு உற்பத்தி அமோகம்
அனல் காற்றுடன் கோடை வெயில் கொளுத்துவதால் உப்பு உற்பத்தி அமோகம். 100 கிலோ உப்பு மூட்டையின் விலை, ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனை ஆகிறது. உற்பத்தி அதிகரிப்பு மற்றும் விலை ஏற்றத்தால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
May 03, 2025 12:47 IST
டிராவல்ஸ் அதிபர் கொலை - மறு பிரேத பரிசோதனை
துபாயில் இருந்து வந்த டிராவல்ஸ் அதிபரை மது, உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கோவையில் வைத்து கொலை செய்த கள்ளக்காதலி. கரூர் பகுதியில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து மறு உடற்கூறாய்வு செய்யப்படுகிறது.
-
May 03, 2025 12:19 IST
தர்ஹா கொடிகம்பம் அகற்றம் - இஸ்லாமியர்கள் சாலை மறியல்
கேணிக்கரை பகுதியில் தர்ஹா கொடிகம்பத்தை அகற்றிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கேணிக்கரை அரண்மனை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
May 03, 2025 12:06 IST
ஜூன் 1இல் மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம்
ஜூன் 1ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது திமுக பொதுக்குழு கூட்டம். 4 ஆண்டுகால திமுக ஆட்சியின் திட்டங்கள் குறித்து 1,244 இடங்களில் கூட்டம் நடத்தவும் தீர்மானம்; மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
-
May 03, 2025 12:06 IST
எய்ட்ஸ் பாதித்த கணவர் மீது மனைவி புகார்
மன்னார்குடியில் எய்ட்ஸ் நோய் இருந்ததை மறைத்து திருமணம் செய்து மோசடி செய்த கணவர் மீது மனைவி புகார் அளித்துள்ளார். கணவன் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து மன்னார்குடி மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
May 03, 2025 11:47 IST
நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களின் தொடர் தாக்குதலை கண்டித்து, நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இரும்பு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கொடூரமாக தாக்கியதாக காயமடைந்த மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்களை கண்டித்து, செருதூர், வெள்ளப்பள்ளம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
-
May 03, 2025 11:45 IST
காதல் விவகாரத்தில் மாணவனை தாக்கி கடத்தல் - கோவையில் பரபரப்பு
கோவை, பொள்ளாச்சி அருகே காதல் விவகாரத்தில் தி.மு.க நிர்வாகியின் மகன் கடத்தல் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவனை தாக்கிய கும்பல், பின்தொடர்ந்து சென்று காரில் கடத்தியுள்ளனர்.
-
May 03, 2025 11:44 IST
நாளை தொடங்கும் கத்திரி வெயில்
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கி வரும் 28ம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலை 84 டிகிரி முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் கடும் வெயில் சுட்டெரிக்கும் என்பதால் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
May 03, 2025 10:45 IST
கோடியக்கரை - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்!
தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்கரைப்பேட்டை, வெள்ளப்பள்ளம், மருதூர் கிராமங்களைச் சேர்ந்த 14 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
-
May 03, 2025 09:04 IST
இருட்டுக்கடைக்கு உரிமை கோரிய 3ஆம் நபருக்கு மறுப்பு
நெல்லை இருட்டுக்கடைக்கு உறவுமுறை அடிப்படையில் பிரேம் ஆனந்த் சிங் உரிமை கோருகிறார், அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உண்மையில்லை. இருட்டுக்கடையை நிர்வகிக்கும் கிருஷ்ண சிங்க்கும் அவரது அண்ணன் பேரனான பிரேம் ஆனந்த் சிங்க்கும் தொடர்பு இல்லை - நயன்சிங்
-
May 03, 2025 09:04 IST
கரூர் அருகே குடோனில் பயங்கர தீ விபத்து
கரூர் அருகே வேளாண் கருவிகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகின.
-
May 03, 2025 09:04 IST
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் 14 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடித்து சென்றனர். பாதிக்கப்பட்ட 14 மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.