Advertisment

பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு : புதுச்சேரி சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு

முதல்வரின் படஜெட்டுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பலாப்பழம் கொடுத்து அசத்தினார்.

author-image
WebDesk
New Update
Puducherry Govt celebration, Karunanidhi, Jayalalitha leaders, கருணாநிதி, ஜெயலலிதா தலைவர்களுக்கு அரசு விழா, புதுச்சேரி சட்டசபையில் ரங்கசாமி அறிவிப்பு, Puducherry Govt celebration for Karunanidhi, Jayalalitha leaders, CM Rangaswamy announcement in assembly

புதுச்சேரி சட்டசபை

பாபு ராஜேந்திரன்  புதுச்சேரி

Advertisment

17 நாட்கள் நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து பேரவையை காலவரையின்றி சபாநாயகர் செல்வம் ஒத்தி வைத்தார்.

புதுச்சேரியில் 15வது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9-ந் தேதி துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், 13ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி முழு பட்ஜெட் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து பூஜ்ய நேரத்தில் பேசுவது, தனிநபர் தீர்மானம் கொண்டு வருவது, உள்ளிட்ட சட்டசபை நடவடிக்கைகள் நடந்து வந்தது.

இந்நிலையில், இறுதி நாளான இன்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் 14வது முறையாக மாநில அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.17 நாட்கள் நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து பேரவையை காலவரையின்றி சபாநாயகர் செல்வம் ஒத்தி வைத்தார்.

publive-image

முன்னதாக சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ-க்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தது இனிமையான பட்ஜெட் என்று கூறும் வகையில் புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கல்யாண சுந்தரம் என்பவர், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வரின் பட்ஜெட்க்கு நன்றி சொல்லும் விதமாக பலாப்பழம் கொடுத்து அசத்தினார்.

பாஜக எம்.எல்.ஏ-வான இவர் ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் கூட்டத்தொடரின் போது தனது தோட்டத்தில் விளைவிக்கப்படும் மணிலா, முந்திரி, வாழை, மா, பலா உள்ளிட்ட பல்வேறு வகையான விளைபொருட்களை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பலா பழத்தை வழங்கினார்.

publive-image

இதற்காக மினி வேனில் பலா பழங்களை ஏற்றுக்கொண்டு சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்த அவர் அங்கே வேனை நிறுத்திவிட்டு கட்சி பாகுபாடு இன்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களையும் அழைத்து அவர்களின் பெயரை எழுதிக் கொண்டு ஒருவருக்கும் ஒரு பலாப்பழத்தை வழங்கி அசத்தினார். இதனை பெற்றுக் கொண்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரத்திற்கு நன்றியையும் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment