தமிழகம் முழுவதும் அரசு சார்பில் மனுபானக்கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஆணடு முழுவதும் திறந்திருக்கும் இந்த கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் விழா மற்றும் பண்டிகை காலங்களில், இந்த டாஸ்மாக் கடைகளின் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்து வருகிறது. ஆனால், மதுபானக்கடைகளில் நிர்ணையிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பானங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தொடர்ந்து சில ஆண்டுகளாக இந்த புகார் எழுந்து வந்த நிலையில், இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தமிழக அரசுக்கு அதிக வருமானம் தரும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மனுபானங்கள் நிர்ணையிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடைகளில் விற்பனையாகும், மதுபாட்டில்களுக்கு உரிய ரசீது வழங்கப்படவில்லை.
ஒவ்வொரு பாட்டிலுக்கும் நிர்ணையிக்கப்பட்ட விலையை விட 10 முதல் 20 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்க்கப்படுகிறது. இதில் போலி மனுபானஙகளும் கடைகளில் விற்கப்படுகிறது. இதனால் போலி மனுபானங்கள் விற்பனையை தடுக்கவும், மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் நிர்ணையிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்க்கப்படுவதாக தொடர்ந்து வழக்குகளும், புகார்களும் வந்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு மதுபானக்கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது வழங்கப்பட வேண்டும் எனவும், வாடிக்கையாளர்களுக்கு மதுபாட்டில்களில் விலை தெளிவாக தெரியும்படி, கடையின் முன் பகுதியில், விலைப்பட்டியல் வைக்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விற்பனை செய்யப்படும் பாட்டில்களுக்கு ரசீது வழங்க வேண்டும் எனவும், இந்த ரசீதுக்கான அனைத்து விபரங்களும் பதிவேட்டில் பராமறிக்கப்பட வேண்டும் எனவும், இந்த பதிவேடு முறையாக பராமறிக்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் அவ்வபோது ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாத கடைகளில், விற்பனை பிரதிநிதிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகத்திற்கும் சுற்ற்றிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"