Thiruvalluvar Image Controversy In CBSE : தமிழரின் பெருமையை உலகிற்கு உணர்த்திய முக்கிய நூல்களில் ஒன்று திருக்குறள். திருவள்ளூர் என் மகாபுலவர் எழுந்திய இந்த நூல் உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மனிதனின் வாழ்வியை இரண்டு அடியில் சொல்லிய திருவள்ளுவர் தமிழகத்தில் நீங்கமுடியாத அடையாளமாக திகழ்கிறார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இவருக்கு சிலைகள் அமைக்ப்ப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயரமுள்ள சிலையும், சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டமும் திருவள்ளுவரின் பெருமையை பரைசாற்றும் விதமாக உள்ளது. தொடர்ந்து அவரின் பெருமையை போற்றும் வகையில், 1960-ல் இந்தியா அரசு திருவள்ளுவர் பெயரில் தபால் தலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் திருவள்ளுவர் கடவுளாக போற்றப்பட்டு வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக திருவள்ளுவரை வட இந்தியர்கள் சொந்தம் கொண்டாடி வருவது தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதில் கடந்த 2019-ம் ஆண்டு மத்தியில் ஆளும் பாஜகவின் அதிகாரப்பூர் ட்விட்டர் பக்கத்தில், வள்ளூவர் காவி உடை அணிந்திருப்பது போலவும், அவர் ஒரு இந்து துறவி என்பது போல சித்தரித்து புகைப்பட்ங்கள் வெளியிட்டிருந்தது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை தொடங்கிய அடுத்த நாளே தஞ்சாவூரில், திருவள்ளூவர் சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றி முழுவதும் சேதப்படுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்திருந்தன.
இந்த சர்ச்சை சிறிது நாட்களில் அடங்கிப்போன நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு மீண்டும் சர்ச்சை வெடித்தது. இந்த முறை பாஜகவை சேர்ந்த துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தனது அதிகரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளூவர் காவி உடை அணிந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதற்கும் கடும் கண்டணங்கள் எழுந்த நிலையில், உடனடியாக அவர் அந்த புகைப்படத்தை மாற்றி பதிவிட்டிருந்தார். இதனால் தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக கண்டனக்குரல் வலுத்துள்ள நிலையில், தற்போது மீண்டும் திருவள்ளுவார் குறித்த சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முறை தலைவர்கள் ட்விட்டர் பக்கத்தில் அல்லாமல், மாணவர்களின் பாட புத்தகத்தில் சர்ச்சை வெடித்துள்ளது. சி.பி.எஸ்.இ 8-ம் வகுப்பு பாட புத்தக்த்தில் இடம்பெற்றுள்ள திருவள்ளூவர் புகைப்படம், தலையில் முடி இல்லாமல் வழுக்கை தலையுடன் குடுமி வைத்து காவி உடை அணிந்து கோவில் குருக்கள் போன்ற தோற்றத்தில் உள்ளார். தற்போது இந்த புகைப்படம் தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
#CBSE 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் அய்யன் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம்!
பா.ஜ.க. அரசு அனுமதிக்கிறது; அடிமை அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறது.
ஆரிய வித்தைகளை எம் தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; மானமுள்ள தி.மு.க. பொறுக்காது. எச்சரிக்கை! pic.twitter.com/EN0mjifHyY
— M.K.Stalin (@mkstalin) February 20, 2021
தமிழ் தெரியாம திருவள்ளுவர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல நுழைஞ்சுட்டானுகளோ https://t.co/zX9WCkJyFh
— அரம்பன் (@_ezhil__) February 20, 2021
The person seen in the picture is Thiruvalluvar & his Wife Vaasuki, an eighth grade CBSE book????????♂️, Tamil identity turned into Brahmanical identity!!! #cbsebooks #education #falseinformation pic.twitter.com/SSARyPNMmj
— நிவாஸ் ம (@Nivas_Mayil) February 20, 2021
"வள்ளுவருக்கு ஆரிய அரிதாரம் - ஸ்டாலின் கண்டனம்"
ஆரிய வித்தைகளை தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; தி.மு.க. பொறுக்காது - மு.க.ஸ்டாலின்#CBSE 8ஆம் வகுப்பு புத்தகம் ஒன்றில் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம்! - ஸ்டாலின்#Thiruvalluvar #DMK #MKStalin pic.twitter.com/p0DwMN6AGw
— Sunil (@TweetsOfSunil) February 20, 2021
Meet Thiruvalluvar in Class 8th CBSE Book by McMillan publishers!
எட்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பாட புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திருவள்ளுவரும் வாசுகியும்!
இவர்கள் புதிய கல்வி கொள்கை கொண்டு வருவதே இதேய் போல் ஏதாவது செய்வதற்குத்தான்... pic.twitter.com/2DXaT19U2B
— கலை (@kalai8940) February 20, 2021
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.