Advertisment

Tamil News Today: பொங்கல் பண்டிகை.. சென்னையில் இருந்து இன்று முதல் 16,768 பேருந்துகள் இயக்கம்!

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Omicron Latest News 10th January 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News Today: பொங்கல் பண்டிகை.. சென்னையில் இருந்து இன்று முதல் 16,768 பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக, கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் இருந்து, இன்று முதல் 13ஆம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisment

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 1800 425 6151, 044-2474 9002 என்ற கட்டணமில்லா எண்களில் புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

மாநில முதல்வர்களுடன் விரைவில் ஆலோசனை - பிரதமர்

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும். மாவட்ட அளவில் சுகாதார உட்கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டும். அவசரகால கொரோனா நிதி உள்ளிட்ட உதவிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் அப்டேட்

சென்னையில் 67-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ101.40-க்கும், டீசல், ரூ91.43-க்கும் விற்பனையாகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:46 (IST) 10 Jan 2022
    பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது



  • 22:44 (IST) 10 Jan 2022
    கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசியே மிகச்சிறந்த வழி" : பிரதமர் மோடி

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், "தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசியே மிகச்சிறந்த வழி" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



  • 20:54 (IST) 10 Jan 2022
    கர்நாடகா மற்றும் பீகார் முதல்வருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வரும் நிலையில், மத்திய பாதுகாப்புத்தறை அமைச்சர் ராஜநாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    அதனத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை மற்றும் பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இருவரும் தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.



  • 20:45 (IST) 10 Jan 2022
    தமிழகத்தில் வரும் ஜனவரி 31-ந் தேதி வரை ஊரடங்கு நீடிப்பு

    தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வரும் ஜனவரி 31-ந் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • 20:44 (IST) 10 Jan 2022
    தமிழகத்தில் வரும் ஜனவரி 31-ந் தேதி வரை ஊரடங்கு நீடிப்பு

    தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வரும் ஜனவரி 31-ந் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • 20:42 (IST) 10 Jan 2022
    பொங்கல் பண்டிகை : பகதர்களுக்கு வழிபாட்டு தலங்களில் அனுமதி இல்லை

    தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 14 முதல் 18-ந் தேதி வழிபாட்டு தலங்களில் மக்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 20:38 (IST) 10 Jan 2022
    தமிழகத்தில் இதுவரை 20,765 பேருக்கு பூஸ்டர் டோஸ்

    தமிழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய நிலையில், தற்போது இரவு 7.30 மணி நிலவரப்படி 20,765 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.



  • 20:36 (IST) 10 Jan 2022
    டெல்லியில் உணவகங்கள் மற்றும் பார்களை மூட உத்தரவு

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்லியில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் எதிரொலியாக உணவகங்கள் மற்றும் பார்களை மூட மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.



  • 20:12 (IST) 10 Jan 2022
    முதியவர்கள் இல்லத்திற்கே சென்று பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் - சென்னை மாநகராட்சி

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு இல்லத்திற்கே சென்று பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்றும், 1913, 044-2538 4520, 044-4612 2300 என்ற எண்களில் தொடர்பு கொண்டு இல்லங்களிலேயே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • 20:11 (IST) 10 Jan 2022
    தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தேவையில்லை - ஐ.சி.எம்.ஆர்

    கொரோனா தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தேவையில்லை என்று கூறியுள்ள ஐ.சி.எம்.ஆர் தொடர்பில் இருந்த முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மட்டும் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.



  • 19:21 (IST) 10 Jan 2022
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 13,990 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 13,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று மேலும் 11 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 36,866 ஆக உயர்ந்துள்ளது.



  • 18:48 (IST) 10 Jan 2022
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 13ம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துத் துறை

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 13ம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், சென்னையிலிருந்து 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.



  • 18:46 (IST) 10 Jan 2022
    கொரோனா பரிசோதனைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை

    தமிழ்நாடு சுகாதாரத்துறை கொரோனா பரிசோதனைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. காய்ச்சல், சளி, உடல் வலி உள்ளவர்கள்

    கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.



  • 18:45 (IST) 10 Jan 2022
    சிகிச்சை முடிந்து சென்றவர்கள் வீட்டுத்தனிமையில் 7 நாட்கள் இருக்க வேண்டும் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    சிகிச்சை முடிந்து சென்றவர்கள் வீட்டுத்தனிமையில் 7 நாட்கள் இருக்க வேண்டும். தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் பரிசோதனை தேவையில்லை. தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க தமிழ்நாடு சுகாதாரத் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.



  • 18:30 (IST) 10 Jan 2022
    கொரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த இணை நோயாளிகளுக்கு பரிசோதனை கட்டாயம்

    கொரோனா தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த இணை நோயாளிகளுக்கு பரிசோதனை கட்டாயம் என புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஏதேனும் இருந்தால் பரிசோதனை நடத்த வேண்டும்; அறிகுறி இல்லையெனினும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 18:28 (IST) 10 Jan 2022
    தலைவர்களின் சிலைகளை பாதுகாக்க அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் - சசிகலா வலியுறுத்தல்

    தமிழகத்தில் உள்ள தலைவர்களின் திருவுருவச் சிலைகளை பாதுகாக்க அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். பதற்றமான இடங்களில் உள்ள தலைவர்களின்

    திருவுருவச் சிலைகளை பாதுகாக்க இரும்பு கூண்டுகள் அமைக்க வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார்.



  • 18:25 (IST) 10 Jan 2022
    விருதுநகர் திமுக எம்.எல்.ஏ ஏ.ஆர்.ஆர். சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி

    விருதுநகர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.



  • 18:14 (IST) 10 Jan 2022
    பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் - அமைச்சர் மூர்த்தி

    பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகள் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெறும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.



  • 18:04 (IST) 10 Jan 2022
    நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட் காங்கிரஸில் இணைந்தார்

    பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி

    மற்றும் நவ்ஜோத் சித்து முன்னிலையில்

    சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட்

    காங்கிரஸில் இணைந்தார்.



  • 18:01 (IST) 10 Jan 2022
    கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து செல்ல கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி - மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

    நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து செல்ல கூடுதல் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.



  • 17:53 (IST) 10 Jan 2022
    ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதி - அமைச்சர் மூர்த்தி

    ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு காலை, மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.



  • 17:51 (IST) 10 Jan 2022
    ஜல்லிக்கட்டு போட்டி - ஆன்லைன் மூலம் பதிவு

    ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற காளைகள் மற்றும் வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். இ-சேவை மையங்களில் பதிவு செய்துகொள்ளலாம் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.



  • 17:49 (IST) 10 Jan 2022
    ஜல்லிக்கட்டு போட்டி - ஆன்லைன் மூலம் பதிவு

    ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற காளைகள் மற்றும் வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். இ-சேவை மையங்களில் பதிவு செய்துகொள்ளலாம் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.



  • 17:48 (IST) 10 Jan 2022
    ஜல்லிக்கட்டு போட்டி: உள்ளூர் மக்களின் வீடுகளுக்கு உறவினர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் - ஐஜி அன்பு

    ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு உள்ளூர் மக்களின் வீடுகளுக்கு உறவினர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அடையாள அட்டை இல்லாதவர்கள் சோதனை

    சாவடி முன்பாகவே திருப்பி அனுப்பப்படுவர் என்று தென்மண்டல ஐ.ஜி. அன்பு அறிவுறுத்தியுள்ளார்.



  • 17:27 (IST) 10 Jan 2022
    அவனியாபுரம் ஜல்லிக்கட்டை தமிழ்நாடு அரசே நடத்த முடிவு

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழு அமைப்பதில் உடன்பாடு ஏற்படாததால் மாவட்ட நிர்வாகமே நடத்த முடிவு செய்துள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை தமிழ்நாடு அரசே நடத்த முடிவு செய்துள்ளது. நாட்டு காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



  • 17:23 (IST) 10 Jan 2022
    3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

    3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு ஆணையராக பிரகாஷ் ஐ.ஏ.எஸ் நியமன் செய்யப்பட்டுள்ளார். கனிமவள நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சுதீப் ஜெயின் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எல்காட் நிறுவன செயல் அதிகாரியாக அருண்ராஜ் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



  • 17:14 (IST) 10 Jan 2022
    முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை நேரடியாக வழங்குவதை தவிர்க்க வேண்டும் - தமிழ்நாடு அரசு

    கொரோனா பரவல் தளர்வுகள் அளிக்கும் வரை முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை நேரடியாக வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தலைமைச் செயலக வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை சேகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 17:11 (IST) 10 Jan 2022
    ஊரடங்கு உத்தரவை மீறி பாதயாத்திரை; சித்தராமையா மீது வழக்குப்பதிவு

    கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவை மீறி பாதையாத்திரை நடத்திய முன்னாள் முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • 17:09 (IST) 10 Jan 2022
    மத்திய ரிசர்வ் காவல் படையில் 931 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

    மத்திய ரிசர்வ் காவல் படையில் 931 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • 16:55 (IST) 10 Jan 2022
    3வது டெஸ்டில் நிச்சயம் களமிறங்குவேன்: விராட் கோலி!

    நான் முழு உடற்தகுதியுடன் இருக்கிறேன். 3வது டெஸ்டில் நிச்சயம் களமிறங்குவேன். விமர்சனங்கள் பற்றி கவலையில்லை. எனது தகுதியை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.



  • 16:46 (IST) 10 Jan 2022
    பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கொரேனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறி இருப்பதால், அவர் வீட்டுத்தனிமையில் இருப்பதாக கூறப்படுகிறது.



  • 16:28 (IST) 10 Jan 2022
    தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா!

    தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி தாம்பரம் மாநகராட்சி பகுதியில் இதுவரை 940 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



  • 16:25 (IST) 10 Jan 2022
    மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-க்கு கொரோனா தொற்று உறுதி!

    மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்விட்டரில் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.



  • 16:24 (IST) 10 Jan 2022
    கொரோனா பரவல்: முதல்வரின் தனிப்பிரிவில் மனுக்களை வழங்குவதை தவிர்க்கவும்!

    கொரோனா பரவல் தளர்வுகள் அளிக்கும் வரை தலைமைச் செயலக வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை சேகரிக்க வேண்டும். அத்தியாவசிய சூழலில் மட்டுமே முதல்வரின் தனிப்பிரிவில் அலுவலரை நேரில் சந்தித்து மனு அளிக்க அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.



  • 16:13 (IST) 10 Jan 2022
    சர்ச்சை கருத்து: நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

    பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு எதிரான சர்ச்சை கருத்து வெளியிட்ட நடிகர் சித்தார்த் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கடிதம் எழுதியுள்ளார்.



  • 15:57 (IST) 10 Jan 2022
    இரவு 10 மணி வரை கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படலாம்!

    கொரோனா தடுப்பூசி மையங்கள் தேவைக்கேற்ப இரவு 10 மணி வரை செயல்படலாம். இளநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்டோரையும் கொரோனா பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.



  • 15:31 (IST) 10 Jan 2022
    பாலியல் தொழிலாளிகள் ரேஷன் பொருட்கள் வாங்க அடையாள அட்டை தேவையில்லை!

    பாலியல் தொழிலாளிகளுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இன்றி ஆதார் எண் வழங்கவும், அடையாள அட்டை இல்லாமல் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 15:17 (IST) 10 Jan 2022
    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்: போலீசாருக்கு டிஜிபி அறிவுறுத்தல்!

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் வந்த அரை மணி நேரத்திற்குள் போலீசார் சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்க வேண்டும் என போலீசாருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.



  • 15:16 (IST) 10 Jan 2022
    தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு கடன் கிடையாது!

    தண்ணீர் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய விவசாயிகளுக்கு, இனிமேல் விவசாய கடன் வழங்கக் கூடாது. மேலும் மானிய விலையில் உரம், விதை பெற முடியாதபடி சம்பந்தபட்ட விவசாயிகளை கருப்புப் பட்டியிலில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 15:15 (IST) 10 Jan 2022
    சென்னையில் மொத்தம் 70 காவலர்கள் கொரோனாவால் பாதிப்பு!

    சென்னையில் கூடுதல் ஆணையர் உள்பட மொத்தம் 70 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.



  • 15:14 (IST) 10 Jan 2022
    இரவு 10 மணி வரை கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படலாம்!

    கொரோனா தடுப்பூசி மையங்கள் தேவைக்கேற்ப இரவு 10 மணி வரை செயல்படலாம். இளநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்டோரையும் கொரோனா பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.



  • 14:51 (IST) 10 Jan 2022
    ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளித்து அரசாணை வெளியீடு

    300 மாடுபிடி வீரர்களை கொண்டு போட்டி நடத்தலாம் என்றும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய வீரர்கள் மட்டும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், போட்டி நடைபெறும் 2 நாட்களுக்கு முன்பு அனைத்து வீரர்களும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அதிகபட்சமாக போட்டியை பார்வையிட 150 பார்வையாளர்களை அனுமதிக்கலாம் ஆனால், பார்வையாளர்களும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.



  • 14:09 (IST) 10 Jan 2022
    தடுப்பூசி செலுத்தும் பணி நீட்டிப்பு

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தேவைப்பட்டால் இரவு 10 மணி வரை நீட்டிக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அனைத்து தடுப்பூசி மையங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் மனோகர் அகானி கடிதம் எழுதியுள்ளார்.



  • 14:07 (IST) 10 Jan 2022
    குஷ்பு, விஷ்ணு விஷாலுக்கு கொரோனா உறுதி

    நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.



  • 14:06 (IST) 10 Jan 2022
    மதுரையில் கலைஞர் நூலகம்

    மதுரையில் கலைஞர் நூலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.



  • 13:33 (IST) 10 Jan 2022
    கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று

    வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.



  • 13:32 (IST) 10 Jan 2022
    நீதிபதி கலையரசன் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

    நீதிபதி கலையரசன் விசாரணை ஆணையத்தை எதிர்த்து அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.



  • 12:50 (IST) 10 Jan 2022
    நாகூர் தர்கா கந்தூரி விழா: பக்தர்கள் வர தடை

    கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் நாகூர் கந்தூரி விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதித்துள்ளது நாகை நிர்வாகம். தர்காவில் வழக்கமாக தொடர்ந்து நடைபெறும் வழிபாட்டு முறைகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 12:48 (IST) 10 Jan 2022
    பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

    வரும் 20ம் தேதி அன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு. அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும், கொரோனா தக்கம் குறைந்த பிறகு மீண்டும் தேர்வுகள் நடைபெறும் என்றும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.



  • 12:23 (IST) 10 Jan 2022
    பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி - விசாரணை குழு அமைப்பு

    பஞ்சாப் மாநிலத்திற்கு பிரச்சாரத்திற்கு சென்ற பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது உச்ச நீதிமன்றம்



  • 12:20 (IST) 10 Jan 2022
    முழு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பு உள்ளதா? இன்று ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர்

    தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக தற்போது முதல்வர் முக ஸ்டாலின் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.



  • 12:13 (IST) 10 Jan 2022
    தமிழகத்தில் கணினி புரட்சியை கலைஞர் தான் உருவாக்கினார் - முக ஸ்டாலின்

    இன்று இருக்கும் டைடல் பார்க் கட்டடத்திற்கு வயது 25. தமிழகத்தில் கணினி புரட்சியை கலைஞர் தான் உருவாக்கினார் என்று கருத்தரங்கில் முதல்வர் பேச்சு



  • 11:54 (IST) 10 Jan 2022
    கழுத்தின் மேல் கத்தி தொங்கியும் - ஹர்பஜன்

    இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான புஜாரா, ரஹானே ஆகியோரின் கழுத்து மீது கத்தி தொங்கிய நிலையிலும் ஜொகனஸ்பார்க் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடினார்கள் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.



  • 11:51 (IST) 10 Jan 2022
    ஏற்றத்துடன் மும்பை பங்குச் சந்தை

    மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 469 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது.



  • 11:26 (IST) 10 Jan 2022
    ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும் - அமைச்சர் திட்டவட்டம்

    ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்றும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று முதல்வரால் வெளியிடப்பட்டும் என்றும் அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.



  • 11:20 (IST) 10 Jan 2022
    4000 பேருக்கு ஒமிக்ரான்; புதிய உச்சத்தில் இந்தியா

    இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது. அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் 1216 பேரும், ராஜஸ்தானில் 529 பேரும், டெல்லியில் 513 பேரும், கர்நாடகாவில் 441 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



  • 11:17 (IST) 10 Jan 2022
    இஸ்பாகான் கருத்தரங்கில் முதல்வர்

    கல்வி, பொருளாதாரத்தில் தமிழகம் மேன்மை அடைந்த மாநிலமாக உள்ளது. இந்தியாவில் உள்ள 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் 30 நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளது என்று பேச்சு



  • 11:14 (IST) 10 Jan 2022
    புதிய தொழிலை நோக்கி செல்ல வேண்டும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    வழக்கமான சில குறிப்பிட்ட தொழில்கள் மட்டுமின்றி புதிய தொழில்களை நோக்கி செல்ல வேண்டும். புத்துயிர் காப்பகங்கள் மற்றும் பூங்காக்கள் உருவாக்க செயல்திட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு



  • 11:11 (IST) 10 Jan 2022
    வேலூர் கோட்டாட்சியருக்கு கொரோனா

    வேலூர் மாவட்ட கோட்டாட்சியர் விஷ்ணு ப்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • 11:00 (IST) 10 Jan 2022
    புதுச்சேரியில் 489 பேருக்கு கொரோனா

    புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,31,211 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 1,722 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்



  • 09:44 (IST) 10 Jan 2022
    முன் எச்சரிக்கை டோஸ் -முதல்வர் தொடங்கி வைத்தார்

    முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 2021 ஏப்ரல் 14 ஆம் தேதி முன்பு 2 ஆம் டோஸ் செலுத்திய முன்களப் பணயாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்கள் செலுத்திக்கொள்ளலாம்



  • 09:16 (IST) 10 Jan 2022
    கடந்த 24 மணி நேரத்தில் 1.79 லட்சம் பேருக்கு கொரோனா

    நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 12.5% அதிகமாகும். ஒரே நாளில் 46,569 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 146 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 09:14 (IST) 10 Jan 2022
    ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாமா? – முதல்வர் இன்று ஆலோசனை

    ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகளுடன் நீட்டிகலாமா என முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.



  • 09:13 (IST) 10 Jan 2022
    கொரோனா அதிகரிப்பு-மத்திய அரசு இன்று ஆலோசனை

    கொரோனா அதிகரித்து வருவது தொடர்பாக மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவயிா இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.



Tamilnadu Pm Modi Corona Virus Precautionary Dose
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment