Advertisment

Tamil News Today : தீபாவளியை ஒட்டி தமிழகத்தில் இன்று பொது விடுமுறை: 18-ம் தேதி பணி நாளாக அறிவிப்பு

இன்று நடைபெறும் செய்திகளை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thy

News updates

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 539-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை  லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் தீ விபத்து
சென்னை மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோயிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதாவது, கோயிலை சுற்றி இருந்த ஓலைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடி பட்டாசு விற்பனை
தீபாவளியை முன்னிட்டு சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனை ஆகியுள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment
Advertisement

சென்னையில் 6 விமானங்கள் ரத்து
தீபாவளி பண்டிகை காரணமாக போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தப் விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு வேறு விமானங்களுக்க டிக்கெட் மாற்றி தரப்பட்டுள்ளது.

எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி

 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி. ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லெப்சா பகுதியில் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம். பாதுகாப்பு படை வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி பிரதமர் மோடி உற்சாகம்

 தமிழகத்தில் வரும் 14, 15 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வரும் 14, 15 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூரில் கனமழைக்கு வாய்ப்பு. விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட்: சுரங்கம் தோண்டும் பணியின் போது விபத்து: சிக்கிக்கொண்ட 36 தொழிலாளர்கள்

உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின் போது விபத்து. சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 36 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருப்பதாக தகவல். 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து. மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் தீவிரம். இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என தகவல்

சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு- சென்னை காவல்துறை தகவல்

 காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி. அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க சென்னை காவல்துறை  தனிப்படை அமைப்பு. நேற்றிரவு முதல் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு. 

தீபாவளி: 8 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்: ரூ.18.76 லட்சம் அபராதம்

 தீபாவளியையொட்டி தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என போக்குவரத்துத்துறை கடந்த 4 நாட்களாக ஆய்வு. இதுவரை 6,699 பேருந்துகள் போக்குவரத்துத்துறையால் ஆய்வு செய்யப்பட்டன. 1,223 பேருந்துகளில் பல்வேறு விதிமீறல்கள் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டன - 8 பேருந்துகள் பறிமுதல். விதிமீறல்களில் ஈடுபட்ட பேருந்துகளிடம் ரூ.18.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, ரூ. 10.70 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது

அன்பு, ஒற்றுமை, சகிப்புத்தன்மையை மதித்திடும் இந்து சமுதாய உறவுகளுக்கு  தீபாவளி வாழ்த்துகள்: தமிமுன் அன்சாரி

இந்து சமுதாயப் பெருமக்கள் கொண்டாடி மகிழும் தீபாவளி, அவர்களின் மகிழ்ச்சிக்குரிய அடையாளங்களில் ஒன்று. பெரும்பான்மையினராக வாழும் போதும், சிறுபான்மையினரின் மீது அன்பு பகிர்ந்து வாழும் அவர்களின் உயரிய பண்பாட்டைப் பாராட்டுவதில் மகிழ்ச்சி, அன்பு, ஒற்றுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை மதித்திடும் இந்து சமுதாய உறவுகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறோம்.  தமிமுன் அன்சாரி, மஜக பொதுச்செயலாளர்

ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து

 தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் தனது வீட்டின் முன்பு குவிந்துள்ள ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து.

கோவை வெடிகுண்டு மிரட்டல்:  காவல் ஆணையர் விளக்கம்

கோவையில் குண்டு வெடிக்கவுள்ளதாக சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் அனுப்பிய மர்ம நபர். ’இது போலியான மெயில். 3,000 திற்கும் மேற்பட்ட காவலர்கள் கோவை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளியை பதற்றமின்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்’- கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம்

மோடி தீபாவளி வாழ்த்து

பிரதமர் மோடி, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் மூலம் மிரட்டல்

 கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் மூலம் மிரட்டல். சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலால் பரபரப்பு. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் தகவல். போலியான கணக்கில் இருந்து மிரட்டல் வந்துள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் ஆணையர் தகவல். இ-மெயில் ஐடி சாத்தூரை சேர்ந்த இசக்கி என்பவரின் பெயரில் இருப்பது கண்டுபிடிப்பு. முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு விசாரணை

 கமல்ஹாசன் தீபாவளி வாழ்த்து

விடிவானில் ஒளிர்மீன்கள் விண்ணெல்லாம் ஒளிரட்டும் ஐப்பசியின் மழைப்பொழிவில் அகமெல்லாம் மலரட்டும் ஆகாயம் பார்த்திருக்கும் அருமைநிலம் செழிக்கட்டும் தீபாவளி நாளில் திசையெட்டும் பொலியட்டும்.- கமல்ஹாசன் தீபாவளி வாழ்த்து

 ஏரிகளின் நீர் நிலவரம்

 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2734 மில்லியன் கன அடியாக உள்ளது.  1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 627 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 433 மில்லியன் கன அடியாக உள்ளது.

 களமச்சேரி குண்டுவெடிப்புஉயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

 கேரளா, களமச்சேரி குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு. 12 வயது சிறுமி உட்பட ஏற்கனவே 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

 இடைநிலை ஆசிரியர் நியமனம் - அதிரடி மாற்றம்

 பி.எட் படித்திருந்தால் இனி இடைநிலை ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. அரசிதழில் மாற்றம் செய்து கல்வித்துறை அறிவிப்பு. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment