Tamil News Today : முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது ..வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் முடிவு .
தொடரும் விவசாயிகள் போராட்டம்: ஆயிரக்கணக்கான போலீஸ் குவிப்பால் காசிப்பூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற பெயரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பரப்புரையை தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக டெல்லி எல்லைகள் மூடல். காசிப்பூர், சிங்கு, ஆச்சந்தி, மங்கேஷ், சபோலி, பியாவ், மன்யாரி எல்லைகள் மூடல்.
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு 2-வது முறையாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்க மருத்துவமனை முடிவு செய்துள்ளது.
Live Blog
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
'நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம், ஆனால் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மாட்டோம்' என்று பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மருத்துவமனையில் அறிகுறி இல்லாத கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் விகே சசிகலாவின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும், 4-வது நாளாள ஆக்ஸிஜன் உதவியின்றி தானாக சுவாசித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என் பிறந்த நாளன்று நான் வெளியூர் செல்கிறேன், அதனால் ரசிகர்கள் வீட்டிற்கு வர வேண்டாம் என நடிகர் சிம்பு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் எனது பிறந்தநாளான பிப்.3ம் தேதி மாநாடு படத்தின் டீசர் வெளியாகிறது; மகிழுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
போக்சோ சட்டத்தால் இளைஞர்கள் பலர் தங்களின் வாழ்க்கையை இழந்துவிடுகின்றனர் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2018ம் ஆண்டு ஈரோட்டை சேர்ந்த இளைஞர் மைனர் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இது குறித்து அறிவிப்பு.
வருகின்ற பிப்ரவரி மூன்றாம் தேதி அன்று நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் டீசர் வெளியாகிறது. பிறந்த நாளான அன்று நான் வெளியூர் செல்வதால் ரசிகர்கள் யாரும் வீட்டிற்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் என்று நடிகர் சிம்பு அறிக்கை வெளியீடு
தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% மருத்துவ உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது தமிழக அரசு. அதனை புதுவை மாணவர்களுக்கு வழங்க முடியாது என்று கூறி புதுச்சேரி அரசு பள்ளியில் படித்த விழுப்புரம் மாணவரின் மேல் முறையீட்டு வழக்கை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கிரானைட் குவாரிகளுக்கு உயர்நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது.
இரண்டு மாதங்களாக டெல்லி எல்லையில் அமைந்திருக்கும் சிங்கு போராட்டக்களத்தில் திடீரென்று புகுந்த நபர்களால் சர்ச்சை. முகாம்கள் கல்லெறி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் தடியடி நடத்தினர். தற்போது நிலைமை அமைதியாக உள்ளது.
Stone pelting at #Singhu after a crowd enters the protest area on the Delhi side. Tents damaged.
Situation calm for now.— Amil Bhatnagar (@AmilwithanL) January 29, 2021
ஓடிடி-யில் வெளியானது 'மாஸ்டர்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் நள்ளிரவு ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்தியாவில் 12 நாட்களில் 2.3 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; சில மாதங்களில் 300 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் - உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights