Advertisment

Tamil News Today : சசிகலாவுக்கு கொரோனா தொற்று; பெங்களூரு மருத்துவமனை உறுதி

தினகரனுக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை

author-image
WebDesk
New Update
Tamil News Today : சசிகலாவுக்கு கொரோனா தொற்று; பெங்களூரு மருத்துவமனை உறுதி

Latest Tamil News Live : பெங்களூரு சிறையில் சசிகலாவிற்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பிலிருந்து வந்த நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து  தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா மாற்றப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், RAPID பரிசோதனையில் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனக் கண்டறியப்பட்ட நிலையில் RT-PCR-ல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Advertisment

வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு மணிப்பூர் மாநிலத்தின் பங்கு பெருமைக்குரியது என்றும் பல்வேறு துறைகளில் திரிபுரா மாநிலம் சிறந்து விளங்குகிறது என்றும் சிறந்த படைப்பாற்றல் மிக்கவர்களாக மேகாலயா மாநில இளைஞர்கள் உள்ளனர் என்றும் கூறி இந்த மூன்று மாநிலங்களின் உதய நாளையொட்டி பகிர்ந்திருக்கிறார் பிரதமர் மோடி. "தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Live Blog

Today's Tamil News Live : இன்றைய முக்கியச் செய்திகள் தொடர்பான தமிழ் லைவ் பிளாக் இது. இதில் தமிழகம், இந்தியா, உலகம் சார்ந்த முக்கிய செய்திகளின் அப்டேட்டை உடனுக்குடன் தமிழில் காணலாம்.



























Highlights

    23:52 (IST)21 Jan 2021

    மோகன் பகான் அணி வெற்றி

    ஐ எஸ் எல் கால்பந்துப் போட்டியில் இன்று நடைபெற்ற, மோகன் பகான் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில், மோகன் பகான் அணி 1-0 என்ற கோல்கணக்கில்  வென்றது

    22:05 (IST)21 Jan 2021

    விகே சசிகலாவுக்கு கொரோனா தொற்று

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விகே சசிகலாவுக்கு மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    19:57 (IST)21 Jan 2021

    சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்

    உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

    17:58 (IST)21 Jan 2021

    ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஆள்மாறாட்டம்

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஆள்மாறாட்டம் நடந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் கோட்டாட்சியர் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் முதல் பரிசு வென்ற கண்ணன் ஆள்மாறாட்டம் செய்ததாக இரண்டாம் பரிசு பெற்ற கருப்பண்ணன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

    17:57 (IST)21 Jan 2021

    ராமர் கோவிலுக்கு ரூ.1 கோடி நிதி

    அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் ரூ.1 கோடி கொடுத்துள்ளார்.

    17:54 (IST)21 Jan 2021

    மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி

    மீன் பிடிக்க சென்று உயிரிழந்த, புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    17:52 (IST)21 Jan 2021

    சசிகலா முன்னிலையில் ஜெயலலிதா அறிவுரைகள்

    கூட்டுறவுத்துறை அமைச்சர் பதவி கொடுக்கும் முன்பு சசிகலா முன்னிலையில்தான் ஜெயலலிதா அறிவுரைகள் வழங்கினார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    17:47 (IST)21 Jan 2021

    சேப்பாக்கம் ஆட்டத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

    சென்னை சேப்பாக்கத்தில் வரும் 5ம் தேதி மோதும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

    17:43 (IST)21 Jan 2021

    மீனவர்கள் உரிமை - தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர முத்தரசன் கோரிக்கை

    மீனவர்களின் உரிமை மற்றும் உடைமைகளை பாதுகாக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    17:26 (IST)21 Jan 2021

    பிப்ரவரி 6-ஆம் தேதி தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம்

    ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் பிப்ரவரி 6-ஆம் தேதி தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது குறித்து பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி கூட்டுறவு பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார்.

    17:15 (IST)21 Jan 2021

    மகனின் விடுதலையை மாநில அரசு உறுதி செய்யும் - அற்புத அம்மாள்

    எனது மகனின் விடுதலையை மாநில அரசு உறுதி செய்யும் என இந்நிலையிலும் நாங்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் என பேரறிவாளனின் தாய் அற்புத அம்மாள் தெரிவித்தார்.  

    16:23 (IST)21 Jan 2021

    4 மீனவர்கள் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய்  நிவாரண நிதி, அரசு வேலை - முதல்வர் உத்தரவு

    இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்கள் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய்  நிவாரண நிதியும்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.  

    15:48 (IST)21 Jan 2021

    அரசு மருத்துவ கல்லூரி கட்டணத்தையே வசூலிக்க உத்தரவிடுக - மு. க ஸ்டாலின்

    கூடுதல் கட்டணத்திற்கு எதிராகப் போராடிய ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியரை அழைத்துப் பேசி தீர்வு காணாமல் கல்லூரியையும், விடுதியையும் மூடுகிறது இந்த அராஜக அரசு? இதுவா தீர்வு? அரசு மருத்துவ கல்லூரி கட்டணத்தையே வசூலிக்க உத்தரவிடுக! என மு. க ஸ்டாலின் தெரிவித்தார்.   

    15:46 (IST)21 Jan 2021

    சசிகலா உடல்நலம் குறித்து கே.பி முனுசாமி கருத்து

    சசிகலா சிறையில் இருந்து வெளிவந்து, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்ந்து அவரது குடும்பத்திற்கு சேவை செய்யட்டும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.  

    15:41 (IST)21 Jan 2021

    இந்திய சீரம் மைய வளாக கட்டிடத்தில் தீ விபத்து

    இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை உற்பத்தி செய்யும்  இந்திய சீரம் மைய வளாக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.  

    இருப்பினும், தடுப்பூசி உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை என்ற அந்நிறுவனம் தெரிவித்தது.   

    14:44 (IST)21 Jan 2021

    பேரறிவாளன் விடுதலை குறித்து மூன்று அல்லது நான்கு நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார்

    பேரறிவாளன் விடுதலை குறித்து மூன்று அல்லது நான்கு நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என இன்று உச்சநீதிமன்றத்தில் சொலிஸிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.

    14:09 (IST)21 Jan 2021

    பறவை காய்ச்சல் - அண்மைய செய்திகள்

    நாட்டில் 6 மாநிலங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கால்நடை பராமரிப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, சத்திஷ்கர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய்த் தொற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 10 மாநிலங்களில் காகங்கள் மற்றும் வெளிநாட்டுப் பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    14:04 (IST)21 Jan 2021

    234 தொகுதிகளிலும் வெற்றிபெறும் சூழல் உருவாகியுள்ளது - மு. க ஸ்டாலின்

    ”2021 சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகள் என்று முதலில் சொன்னேன்; இப்போது 234 தொகுதிகளிலும் வெற்றிபெறும் சூழல் உருவாகியுள்ளது எனத் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.   

    13:53 (IST)21 Jan 2021

    அரசு வேலைவாய்ப்பில் தேசிய மாணவர் படைக்கு முன்னுரிமை - ராஜ்நாத் சிங்

    தேசிய மாணவர் படை விரிவுபடுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர்படையின் வருடாந்திர பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், " அரசு வேலைவாய்ப்பில் தேசிய மாணவர் படைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    13:10 (IST)21 Jan 2021

    12ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா நோய்த் தொற்று

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கிருஷ்ணாபுரம் அரசு மாதிரிப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, விடுதியில் இவருடன் தங்கியிருந்த சக மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.              

    13:08 (IST)21 Jan 2021

    திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு தரவேண்டும் – கே.எஸ்.அழகிரி

    திமுக தலைமையிலான மதசார்ப்பற்ற கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு தர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.

    12:47 (IST)21 Jan 2021

    சவரனுக்கு தங்கம் ரூ.320 உயர்வு

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.37,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.4,691-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    12:46 (IST)21 Jan 2021

    விசிக தனி சின்னத்தில்தான் போட்டியிடும் - திருமாவளவன்

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடுவது உறுதி என்றும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    12:44 (IST)21 Jan 2021

    கமல் தனித்துபோட்டியிடுவது பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு

    கமல்ஹாசன் தனித்து போட்டியிடுவது, பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பாக அமையும் என்றும் மத சார்பின்மை பேசும் கட்சிகள் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

    12:01 (IST)21 Jan 2021

    ராஜா முத்தையா கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது

    கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டிருக்கிறது. மாலை 4 மணிக்குள் மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேற உத்தரவு.

    11:19 (IST)21 Jan 2021

    கல்லூரிகள் அடுத்த மாதம் திறக்கப்படுமா?

    தமிழகத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்க உயர்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் வீதம் காலை, மாலை என 2 வேளைகள் வகுப்புகள் நடத்துவது பற்றி ஆலோசனை நடைபெறுகிறது. மேலும், மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபிறகு விடுதிகளில் அனுமதிக்க பரிசீலனை நடைபெற்று வருகிறது.

    11:10 (IST)21 Jan 2021

    சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது - டிடிவி தினகரன்

    "சசிகலா நலமாக உள்ளார். அச்சம் கொள்ளத் தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். உடல்நிலை சீராக உள்ளதாக சிறைத்துறை மூலம் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சிடி ஸ்கேன் தேவையா என மருத்துவர்களே முடிவு செய்வார்கள். சசிகலாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று பெங்களூரு சிவாஜிநகர் அரசு மருத்துவமனையில் இருக்கும் சசிகலாவை பார்க்க வந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    10:18 (IST)21 Jan 2021

    சசிகலாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சந்தேகம் கிளப்பும் திவாகரன்

    வரும் 27-ம் தேதி சசிகலா விடுதலையாக உள்ள நிலையில் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என சந்தேகமாக இருக்கிறது என்று சசிகலாவின் தம்பி திவாகரன் தெரிவித்துள்ளார்.

    News In Tamil Live : வேறு எந்த அதிபரிடமிருந்தும் காணப்படாத சுறுசுறுப்பு மற்றும் அவசரத்துடன் நகர்ந்த பைடன், புதன்கிழமை பிற்பகல் ஓவல் அலுவலகத்திலிருந்து 17 நிர்வாக உத்தரவுகள், குறிப்புகள் மற்றும் பிரகடனங்களில் கையெழுத்திட்டார். ஜனாதிபதி எடுத்த நடவடிக்கைகளில், பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் சேரவும், முஸ்லிம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் ட்ரம்பின் பயணத் தடையை முடிவுக்குக் கொண்டுவரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் நான்கு ஆண்டுகளில் ட்ரம்பின் குறிப்பிட்ட, மிக மோசமான துஷ்பிரயோகங்களாக அதிபர் கருதுவதை இலக்காகக் கொண்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, டிரம்ப் நாட்டிற்குச் செய்த மிகப் பெரிய சேதங்களை மாற்றியமைப்பதுதான் பைடனின் குறிக்கோள்களில் ஒன்றாக இருக்கிறது என அவருடைய உயர் ஆலோசகர்கள் விவரித்துள்ளார்.
    Tamil Nadu Politics Joe Biden Sasikala
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment