Tamil News Updates: வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் அரசின் கருத்துருவை நிராகரித்த விவசாயிகள், வரும் 14-ம் தேதி பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு. வேளாண் சட்ட திருத்தங்கள் குறித்து, ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் விரும்பவில்லை என்றார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வழக்கத்தை விட 9% அதிகம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு சென்னையில் 47% மழைபொழிவு அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த இடங்களை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, அவர் உறுதியளித்தார். இன்று காலை உடற்கூராய்வு செய்யப்படுகிறது, சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல். முகத்தில் காயங்கள் இருப்பதால், அவரது மரணம் மீதான சந்தேகம் எழுந்துள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
மாநில பட்டியலினத்திலுள்ள 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் என பொது பெயரிட மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்தமைக்காக மாண்புமிகு அமைச்சர், MLAக்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர் என்று முதல்வர் தனது ட்விட்டரில் பதிவிட்டார்.
புதிய பாராளுமன்ற அடிக்கல்லிற்கு ஏன் ஆரிய வேத மதப்படி சடங்கு செய்யப்படுகிறது? ஆரியர் மட்டும் வரி கட்டுகிறார்களா?
பிற இன/மதத்தவர் வரி கட்டுவதில்லையா?
ஏன் சமஸ்கிருதம்? பிற மொழியினரும் வரி கட்டவில்லையா?
தமிழும், முருகவழிபாடும் கிடையாதா? திருக்குறள் இல்லையா?
யாருக்கான கட்டிடம் இது? https://t.co/CHe6rVT7aj— Thirumurugan Gandhi (@thiruja) December 10, 2020
புதிய பாராளுமன்ற அடிக்கல்லிற்கு ஏன் ஆரிய வேத மதப்படி சடங்கு செய்யப்படுகிறது? ஆரியர் மட்டும் வரி கட்டுகிறார்களா? பிற இன/மதத்தவர் வரி கட்டுவதில்லையா? ஏன் சமஸ்கிருதம்? பிற மொழியினரும் வரி கட்டவில்லையா? தமிழும், முருகவழிபாடும் கிடையாதா? திருக்குறள் இல்லையா?
யாருக்கான கட்டிடம் இது? என்று திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பினார்.
"கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் ஆட்சி அமைந்ததும், அதிமுக அரசால் முடக்கி வைக்கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக் குழு திட்டம் மீண்டும் இயங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்"
- கழக மகளிரணி செயலாளர் திருமதி @KanimozhiDMK MP அவர்கள் உரை.#Vidiyalainokki_stalininkural pic.twitter.com/gf2J30OjVu
— DMK (@arivalayam) December 10, 2020
திமுக ஆட்சி அமைந்ததும், அதிமுக அரசால் முடக்கி வைக்கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக் குழு திட்டம் மீண்டும் இயங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று என்று திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தெரிவித்தார்.
“விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைத்து, அடித்தட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது" என்று திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தெரிவித்தார்.
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த திட்டத்தில் ஒன்பது மாணவர்களுக்கு மிதிவண்டிகளை அவர் வழங்கினார். பணியின்போது உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கான நிதி உதவியையும் முதலமைச்சர் இன்று வழங்கினார்.
அடுத்த ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வுகள் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும் நான்கு தேர்வுகளிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாணவர்கள் பங்கேற்கலாம் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு.
புதிய நாடாளுமன்றத்தை கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, டாடா நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற வளாகத்தில், பிரதமர், குடியரசு துணை தலைவருக்கு பிரத்யேக இல்லங்கள், பிரதமர் அலுவலகம், மத்திய செயலகம், மக்களவை, மாநிலங்களவை, நூலகம் ஆகியவை நவீன வசதிகளுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கியது. வேத மந்திரங்கள் முழங்க புதிய நாடாளுமன்றத்துக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். இதனை தொடர்ந்து, கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் ஒப்படைப்பு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் உடல் ஒப்படைப்பு .சித்ராவின் உடல் இறுதி சடங்கிற்காக கோட்டூர்புரம் கொண்டு வரப்பட்டது. நடிகை சித்ராவின் இறுதிச்சடங்கு நிகழ்வில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
நாடு முழுவதும் உள்ள பாஜக அலுவலகங்கள் முன் 14-ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ள விவசாயிகள், மற்ற மாநில விவசாயிகளும், டெல்லிக்கு வந்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். பிரபல தொழிலதிபர் அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனத்தின் அலைபேசி, சிம்கார்டுகள் மற்றும் இணைய வசதிகள் என ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும், புறக்கணிக்கப்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights